கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

அகநானுறு-22


17. செவிலித்தாய் கூற்று

     வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
     இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
     'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
     மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
5   முயங்கினள் வதியும் மன்னே! இனியே,
     தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
     நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
     நொதும லாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
     சிறு முதுக் குறைவி சிலம்பு ஆர் சீறடி
10  வல்லகொல், செல்லத் தாமே கல்லென
     ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
     நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
     கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
     நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
15  கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
     பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
     அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
     நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
     விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
20  நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
     வைகுறு மீனின் தோன்றும்
     மை படு மா மலை விலங்கிய சுரனே?


மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
பாலை
கயமனார்


18. தோழி கூற்று

     நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
     பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
     கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
     மராஅ யானை மதம் தப ஒற்றி,
5   உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
     கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
     நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
     ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
     ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
10  வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
     ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
     நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
     உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
     கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
15  பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
     பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
     வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
     ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.


தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது
குறிஞ்சி

கபிலர்


19. தலைவன் கூற்று

     அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி 
     வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து 
     உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, 
     உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் 
5   கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், 
     எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, 
     ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது, 
     செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே 
     மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் 
10  சேயிதழ் அனைய ஆகி, குவளை 
     மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
     உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, 
     பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் 
     வெய்ய உகுதர, வெரீஇ, பையென, 
15  சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை 
     பூவிழ் கொடியின் புல்லெனப் போகி, 
     அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, 
     இயங்காது வதிந்த நம் காதலி 
     உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது
பாலை
பொருந்தில் இளங்கீரனார்


20. தோழி கூற்று

     பெருநீர் அழுவத்து எந்தை தந்த
     கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
     எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
     செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
5   ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
     தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
     கொண்டல் இடு மணல் குரவை முனையின்
     வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
     மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
10  பல் பூங் கானல் அல்கினம் வருதல்
     கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
     கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
     கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
     எல்லையும் இரவும் என்னாது, கல்லென
15  வலவன் ஆய்ந்த வண் பரி
     நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.

பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது
நெய்தல்
உலோச்சனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;