தமிழில் எழுந்த ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான யசோதர காவியம், ஒரு சமண
சமயம் சார்ந்த நூலாகும். இந்நூல் நான்கு சருக்கங்களில் 320
விருத்தப்பாக்களால் ஆன இதன் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.
இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.
இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் உயிர்களைப் பலியிட்டு வந்தான். அவனுக்கு உயிர்க்கொலை தீது என்று உணர்த்துவதற்காக எழுதப்பட்ட காப்பியம் இது. மறுபிறவிகள், சிற்றின்பத்தின் சிறுமை, பேரின்பத்தின் பெருமை, ஒழுக்கத்தின் உயர்வு போன்றவற்றை விவரிப்பது இந்நூல். இது ஒரு வடமொழி நூலின் தழுவல். எளிய நடையும் நயமான பாக்களும் உடைய நூல் இது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இசை காமத்தைத் தூண்டும் என்பதையும், கர்மத்தின் விளைவுகளையும் எடுத்தியம்பும் இக்கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் கதையின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் கூறுவோர் உண்டு.
தற்சிறப்புப்பாயிரம்
கடவுள் வாழ்த்து
1. | உலக மூன்று மொருங்குணர் கேவலத் தலகி லாத வனந்த குணக்கடல் விலகி வெவ்வினை வீடு விளைப்பதற் கிலகு மாமலர்ச் சேவடி யேத்துவாம். |
2 | நாத னம்முனி சுவ்வத னல்கிய தீது தீர்திகழ் தீர்த்தஞ்செல் கின்றநாள் ஏத மஃகி யசோதர னெய்திய தோத வுள்ள மொருப்படு கின்றதே. |
அவையடக்கம்
3 | உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென எள்ளு கின்றன ரில்லை விளக்கினை உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர் கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே. |
நூல் நுவல் பொருள்
4 | மருவு வெவ்வினை வாயின் மறுத்துடன் பொருவில் புண்ணிய போகம் புணர்ப்பதும் வெருவு செய்யும் வினைப்பய னிற்றெனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே. |
நூல்
முதற் சருக்கம்
நாட்டுச் சிறப்பு
5 | பைம்பொன் னாவற் பொழிற்பர தத்திடை நம்பு நீரணி நாடுள தூடுபோய் வம்பு வார்பொழில் மாமுகில் சூடுவ திம்ப ரீடில தௌதய மென்பதே. |
நகரச் சிறப்பு்
6 | திசையு லாமிசை யுந்திரு வுந்நிலாய் வசை யிலாநகர் வானவர் போகமஃ தசைவி லாவள காபுரி தானலால் இசைவி லாதவி ராசபு ரம்மதே. |
7 | இஞ்சி மஞ்சினை யெய்தி நிமிர்ந்தது மஞ்சு லாமதி சூடின மாளிகை அஞ்சொ லாரவர் பாடலொ டாடலால் விஞ்சை யாருல கத்தினை வெல்லுமே. |
அரசனியல்பு
8 | பாரி தத்தினைப் பண்டையின் மும்மடி பூரி தத்தொளிர் மாலைவெண் பொற்குடை வாரி தத்தின் மலர்ந்த கொடைக்கரன் மாரி தத்தனென் பானுளன் மன்னவன். |
9 | அரசன் மற்றவன் றன்னொடு மந்நகர் மருவு மானுயர் வானவர் போகமும் பொருவில் வீடு புணர்திற மும்மிவை தெரிவ தொன்றிலர் செல்வ மயக்கினால். |
வேனில் வரவு
10 | நெரிந்த நுண்குழல் நேரிமை யாருழை சரிந்த காதற் றடையில தாகவே வரிந்த வெஞ்சிலை மன்னவன் வைகுநாள் விரிந்த தின்னிள வேனிற் பருவமே. |
வசந்தமன்னனை வரவேற்றல்
11 | கோங்கு பொற்குடை கொண்டு கவித்தன வாங்கு வாகை வளைத்தன சாமரை கூங்கு யிற்குல மின்னியங் கொண்டொலி பாங்கு வண்டொடு பாடின தேனினம். |
இதுவுமது
12 | மலர்ந்த பூஞ்சிகை வார்கொடி மங்கையர தலந்த லந்தொறு மாடினர் தாழ்ந்தனர் கலந்த காதன்மை காட்டுநர் போலவே வலந்த வண்டளிர் மாவின மேயெலாம். |
அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்
13 | உயர்ந்த சோலைக ளூடெதிர் கொண்டிட வயந்த மன்னவன் வந்தன னென்றலும் நயந்த மன்னனு’ நன்னகர் மாந்தரும் வயந்த மாடு வகையின ராயினர். |
14 | கானும் வாவியுங் காவு மடுத்துடன் வேனி லாடல் விரும்பிய போழ்தினில் மான யானைய மன்னவன் றன்னுழை ஏனை மாந்த ரிறைஞ்சுபு’ கூறினார். |
ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்
15 | என்று மிப்பரு வத்தினோ டைப்பசி சென்று தேவி சிறப்பது செய்துமஃ தொன்று மோரல மாயின மொன்றலா நன்ற லாதன நங்களை வந்துறும். |
இதுவுமது
16 | நோவு செய்திடு நோய்பல வாக்கிடும் ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும் தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல் காவல் மன்ன கடிதெழு கென்றனர். |
அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்
17 | என்று கூறலு மேதமி தென்றிலன் சென்று நல்லறத் திற்றெளி வின்மையால் நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத் தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன். |
தேவியின் கோயிலை அடைதல்
18 | சண்ட கோபி தகவிலி தத்துவங் கொண்ட கேள்வியுங் கூரறி வும்மிலாத் தொண்டர் கொண்டு தொழுந்துருத் தேவதை கண்ட மாரி தனதிட மெய்தினான். |
அரசன் மாரிதேவதையை வணங்குதல்
19 | பாவ மூர்த்தி படிவ மிருந்தவத் தேவி மாட மடைந்து செறிகழன் மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன் தேவி யெம்மிடர் சிந்துக வென்றரோ. |
20 | மன்ன னாணையின் மாமயில் வாரணம் துன்னு சூகர மாடெரு மைத்தொகை இன்ன சாதி விலங்கி லிரட்டைகள் பின்னி வந்து பிறங்கின கண்டனன். |
21 | யானிவ் வாளினின் மக்க ளிரட்டையை ஈன மில்பலி யாக வியற்றினால் ஏனை மானுயர் தாமிவ் விலங்கினில் ஆன பூசனை யாற்றுத லாற்றென. |
22 | வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை யீடி லாத வியல்பினி லில்வழி யேட சண்ட கருமதந் தீகென நாட வோடின னன்னகர் தன்னுளே. |
அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்
23 | ஆயிடைச் சுதத்த னைஞ்ஞூற் றுவரருந் தவர்க ளோடுந் தூயமா தவத்தின் மிக்க வுபாசகர் தொகையுஞ் சூழச் சேயிடைச் சென்றோர் தீர்த்த வந்தனை செய்யச் செல்வோன் மாயமில் குணக்குன் றன்ன மாதவர்க் கிறைவன் வந்தான். |
சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்
24 | வந்துமா நகர்ப்பு றத்தோர் வளமலர்ப் பொழிலுள் விட்டுச்¢ சிந்தையா னெறிக்கட் டீமை தீ¢¢ர்த்திடும் நியம முற்றி அந்திலா சனங்கொண்டண்ண லனசனத் தவன மர்ந்தான்¢ முந்துநா முரைத்த சுற்ற முழுவதி னோடு மாதோ. |
சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்
25 | உளங்கொள மலிந்த கொள்கை யுபாசகர் குழுவி னுள்ளார் அளந்தறி வரிய கேள்வி யபயமுன் னுருசி தங்கை யிளம்பிறை யனைய நீரா ளபயமா மதியென் பாளும் துளங்கிய மெய்ய ருள்ளந் துளங்கலர் தொழுது நின்றார். |
சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்்
26 | அம்முனி யவர்க டம்மை யருளிய மனத்த னாகி வம்மினீர் பசியின் வாடி வருந்திய மெய்ய ரானீர் எம்முட னுண்டி மாற்றா தின்றுநீர் சரியை போகி நம்மிடை வருக வென்ன நற்றவற் றொழுது சென்றார். |
இளைஞர் சரிகை செல்லுதல்
27 | வள்ளிய மலருஞ் சாந்தும் மணிபுனை கலனு மின்றாய் வெள்ளிய துடையோன் றாகி வென்றவ ருருவ மேலார் கொள்ளிய லமைந்த கோலக் குல்லக வேடங் கொண்ட வள்ளலு மடந்தை தானும் வளநகர் மருளப் புக்கார். |
இதுவுமது்
28 | வில்லின தெல்லைக் கண்ணால் நோக்கிமெல் லடிகள் பாவி நல்லருள் புரிந்து யி¢ர்க்கண் ணகைமுத லாய நாணி யில்லவ ரெதிர்கொண் டீயி னெதிர்கொளுண்டியரு மாகி நல்லற வமுத முண்டார் நடந்தனர் வீதி யூடே. |
மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்
29 | அண்டல ரெனினுங் கண்டா லன்புவைத் தஞ்சு நீரார்க் கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனங்க லங்காப் புண்டரீ கத்தின் கொம்பும் பொருவில்மன் மதனும் போன்று கொண்டிளம் பருவ மென்கொல் குழைந்திவண் வந்த தென்றான். |
இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்
30 | எனமனத் தெண்ணி நெஞ்சத் திரங்கியும் மன்ன னேவல் தனைநினைந் தவர்க டம்மைத் தன்னுழை யவரின் வவ்விச் சினமலி தேவி கோயிற் றிசைமுக மடுத்துச் சென்றான். இனையது பட்ட தின்றென் றிளையரு மெண்ணி னாரே. |
31 | வன்சொல்வாய் மறவர் சூழ மதியமோர் மின்னொ டொன்றித் தன்பரி வேடந் தன்னுள் தானனி வருவ தேபோல் அன்பினா லையன் றங்கை யஞ்சுத லஞ்சி நெஞ்சில் தன்கையான்முன்கைபற்றித் தானவட்கொண்டு செல்வான் |
32 | நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின் அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான் |
33 | அஞ்சின மெனினு மெய்யே யடையபவந் தடையு மானால் அஞ்சுத லதனி னென்னை பயனமக் கதுவு மன்றி¢ அஞ்சுதற் றுன்பந் தானே யல்லது மதனிற் சூழ்ந்த நஞ்சன வினைக ணம்மை நாடொறு நலியு மென்றான். |
34 | அல்லது மன்னை நின்னோ டியானுமுன் னனேக வாரந் தொல்வினை துரப்ப வோடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின் நல்லுயி¢ர் நமர்க டாமே நலிந்திட விளிந்த தெல்லாம் மல்லன்மா தவனி னாமே மறித்துணர்ந் தனமு மன்றோ. |
35 | கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும் பிறந்தநாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா இறந்தன விறந்து போக வெய்துவ தெய்திப் பின்னும் பிறந்திட விறந்த தெல்லா மிதுவுமவ் வியல்பிற் றேயாம். |
36 | பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத் துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய் சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே இறந்தன விறந்த காலத் தெண்ணிறந்தன களெல்லாம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.