48 | சீல நல்லன சினவரன் றிருமொழி தெளிந்தான் கால மூன்றினுங் கடையில்பல் பொருளுணர் வுடையான் மேலு மின்னபல் வியந்தரம் வெருட்டுத லறிவான் நீல கேசிதன் னெறியின்மை யிதுவென நினைந்தான். |
49 | வெருட்டு மாகிலும் வெருட்டுக விகுர்வணை களினாற் றெருட்டு வேனிவ டிறமின்மை சிறிதிடைப் படலும் பொருட்டி றங்களைப் புலமையிற் புனைந்துரை பெறுமே லருட்டி றந்நல வறநெறி பெறுதலு மறிந்தான். |
50 | மாக மேயுற மலையன்ன சிலையொடு சிலையா மேக மேயென விசும்பிடை வெடிபட விடியா நாக மேயென நாவினை நீட்டுவ காட்டாப் பாக மேயெனப் பலவெனச் சிலவென வுலவும். |
51 | இலங்கு நீளெயிற் றிடையிடை யழலெழச் சிரியாக் கலங்கு மார்ப்பொடு சார்ப்படு மழையெனத் தெழியாப் பிலங்கண் டன்னதன் பெருமுழை வாய்திறந் தழையா மலங்க நின்றுதன் மடனெடு மயிர்க்கையிட் டுயிர்க்கும். |
52 | பொங்கு பூமியுட்பொடிபட வடியிணை புடையாப் பங்க மேசெய்து படபட வயிறடித் திறுகி யங்கி போலவீழ்ந் தலறிநின் றுலறியங் காக்கு மெங்குந் தானென வெரிகொள்ளி வளையெனத் திரியும். |
53 | கல்லி னாற்கடுங் கனலினுங் கடுகென வெடிக்கும் வில்லின் வாய்ப்பெய்து விளங்குவெண் பகழிகள் விடுக்கும் மல்லி னாற்சென்று மறித்திடு வேனென நெறிக்கும் பல்லி னாற்பல பிணங்களி னிணங்களைப் பகிரும். |
54 | ஓடு முட்குடை யுருவுகொண் டருவென வொளிக்கும் பாடு பாணியிற் பலபல கலகல வொலியா ஆடு நாடக மரும்பசி களைகென விரும்பி ஊடு போவனென் றுரைத்துரைத் துள்ளஞ்செய் தொழியும். |
55 | குஞ்ச ரம்பெருங் கொடுவரி கடுவிடை கொலைசூ ழஞ்சு தன்மைய வடலரி யெனவின்ன பிறவும் வெஞ்சி னம்பெரி துடையன விவையினும் வெருளான் றஞ்ச மன்றிவன் றவநிறை சுடுமெனத் தவிர்ந்தாள். |
56 | அச்ச மேயுறுத் தழிக்குவன் தவமென அறியேன் விச்சை வேறிலன் விழுக்குண முடையனிவ் விறலோன் இச்சையாலன்றி யிவன்முன்னை நிலையெனக் கரிதா நச்சு மெய்யென நடுங்கும் னுடம்பென வொடுங்கி. |
57 | ஆற்றல் சான்றவ னருந்தவ வழலெனை யடுமான் மாற்று மாறென்கொ லெனநனி மனத்தினு ணினையாச் சீற்றந் தீர்ந்தென்செய் கருவினை தணிகெனப் பணிந்தாள் கூற்றம் போல்வதோர்கொடுமையையுடையவள் குறைந்தே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.