18 | தானமொடு சீலமவை தாங்கிநல மோங்கி மானமொடு மாயமில ராயமனை யாருங் கானமொடு கல்லடரு ளில்லிடரு நீங்கி ஞானமொடு செய்வினைக ணையமுயல் வாரும். |
19 | அந்தணரு மல்லவரு மாகியுட னாய மந்தமறு நால்வருண மாட்சியின ராகித் தந்தநெறி யிற்றிரித றானுமில ராகி நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே. |
20 | ஞாலமறி நன்மையுடை நாடதென லானு மாலுமழை மூன்றுமுடை மாதமென லானுங் காலமவை தாங்கடுமை காண்பருமை யாலும் பாலைநில மொன்றுமவ ணின்மை பழுதன்றே. |
21 | இன்ன தன்மையி னாடினி தாளுமம் மன்ன வன்னவன் யாரெனில் வானிடைச் சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்றிவட் டன்ன னாரில் சமுத்திர சாரனே. |
22 | ஆற்ற லாலரி மாவவ னாணையாற் கூற்ற மேயெனக் கூறலு மாங்குடி போற்ற றாயனை யான்பொருந் தார்கண்மேற் சீற்றத் தாற்றெறு தீத்திர ளேயனான். |
23 | தீய தீரத் திருவிளை யாடிய தேயங் காவல னாய்த்திசை யாவினு மீய நீண்டகை யேந்த னகர்திசை போய புண்ட வருத்தன மென்பதே. |
24 | வளங்கெழு நெடுமதில் வாயில் யாவையு முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்துமேல் விளங்கிவெண் மதிசெலல் விலக்கி நீள்விசும் பளந்ததன் றுணைமையு மறிவ தொத்தவே. |
25 | விரைசெல லிவுளியும் வேழ வீட்டமு நிரைசெலற் கொடுஞ்சிநன் னேமி யூர்தியு மரசுடைப் பெருங்கடை நெருங்கு மார்கலி திரைபொரு கடலொலி யன்ன செம்மற்றே. |
26 | அகிற்புகை யளாவியு மணிகொள் வீதியிற் றுகிற்கொடித் தொகுதியுந் தூய சுண்ணமு முகிற்றலைக் கலலிவான் மூடி மாநகர் பகற்கிடை கொடாததோர் பான்மை மிக்கதே. |
27 | ஆங்க மாநக ரணைந்தது பலாலைய மென்னும் பங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்கா டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி யாங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.