கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 25 மார்ச், 2012

நீலகேசி-14



18தானமொடு சீலமவை தாங்கிநல மோங்கி
மானமொடு மாயமில ராயமனை யாருங்
கானமொடு கல்லடரு ளில்லிடரு நீங்கி
ஞானமொடு செய்வினைக ணையமுயல் வாரும்.


19அந்தணரு மல்லவரு மாகியுட னாய
மந்தமறு நால்வருண மாட்சியின ராகித்
தந்தநெறி யிற்றிரித றானுமில ராகி
நந்திமிசை சேறலுடை நன்மையத நாடே.


20ஞாலமறி நன்மையுடை நாடதென லானு
மாலுமழை மூன்றுமுடை மாதமென லானுங்
காலமவை தாங்கடுமை காண்பருமை யாலும்
பாலைநில மொன்றுமவ ணின்மை பழுதன்றே.


21இன்ன தன்மையி னாடினி தாளுமம்
மன்ன வன்னவன் யாரெனில் வானிடைச்
சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்றிவட்
டன்ன னாரில் சமுத்திர சாரனே.


22ஆற்ற லாலரி மாவவ னாணையாற்
கூற்ற மேயெனக் கூறலு மாங்குடி
போற்ற றாயனை யான்பொருந் தார்கண்மேற்
சீற்றத் தாற்றெறு தீத்திர ளேயனான்.


23தீய தீரத் திருவிளை யாடிய
தேயங் காவல னாய்த்திசை யாவினு
மீய நீண்டகை யேந்த னகர்திசை
போய புண்ட வருத்தன மென்பதே.


24வளங்கெழு நெடுமதில் வாயில் யாவையு
முளம்புக விழுங்கியிட் டுமிழ்வ வொத்துமேல்
விளங்கிவெண் மதிசெலல் விலக்கி நீள்விசும்
பளந்ததன் றுணைமையு மறிவ தொத்தவே.


25விரைசெல லிவுளியும் வேழ வீட்டமு
நிரைசெலற் கொடுஞ்சிநன் னேமி யூர்தியு
மரசுடைப் பெருங்கடை நெருங்கு மார்கலி
திரைபொரு கடலொலி யன்ன செம்மற்றே.


26அகிற்புகை யளாவியு மணிகொள் வீதியிற்
றுகிற்கொடித் தொகுதியுந் தூய சுண்ணமு
முகிற்றலைக் கலலிவான் மூடி மாநகர்
பகற்கிடை கொடாததோர் பான்மை மிக்கதே.


27ஆங்க மாநக ரணைந்தது பலாலைய மென்னும்
பங்கொள் பேரதவ் வூரது பிணம்படு பெருங்கா
டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி
யாங்கு நீர்வையத் தோசையிற் போயதொன் றுளதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;