பாயிரம்
கடவுள் வாழ்த்து
வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண் ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும் சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார் |
நுதல் முதலிய பொருள்
அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான் வெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள் பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன் |
அவை அடக்கம்
கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால் உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன் மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார் அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே |
நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்
நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல் தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும் தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின் கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே |
செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர் அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே |
நூல் வந்த வழி
விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார் வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே |
முதல் பாகம்
1.நாட்டுச் சருக்கம்
சுரமை நாட்டின் சிறப்பு
மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர் இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுந்ணணள் ந்தியது சுரமை யென்பவே. | 1 |
கயல்களும் கண்களூம்
பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும் மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே. | 2 |
வயல்களும் ஊர்களும்
ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே. | 3 |
பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை
நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளீயும் பாடுமே குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே. | 4 |
வண்டுகளுங் கொங்கைகளும்
காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ் ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர் நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம் மேவிநின் றவரையு மெலிய விம்முமே. | 5 |
சுரமை நாட்டின் நானிலவளம்
வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த் தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர் பானலங் கழனியுங் கடலும் பாங்கணி நானிலங் கலந்துபொன்னரலு நாடதே. | 6 |
குறிஞ்சி நிலம்
முன்றி லெங்கு முருகயர் பாணியும் சென்று வீழரு வித்திர ளோசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். | 7 |
முல்லை நிலம்
ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர் கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல் காறு கொண்டவர் கம்பலை யென்றிவை மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம். | 8 |
மருத நிலம்
அணங்க னாரண வாடல் முழவமும் கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும் மணங்கொள் வார்முர சும்வய லோதையும் இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம். | 9 |
நெய்தல் நிலம்
கலவ ரின்னிய முங்கட லச்சிறார் புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும் நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய் உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம். | 10 |
குறிஞ்சி நிலம்
கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண் மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன் நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம். | 11 |
முல்லை நிலம்
கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும் முன்றி லேறிய முல்லையம் பந்தரும் நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ மன்றெ லாமண நாரும ருங்கினே. | 12 |
மருதம்
நாற விண்டன நெய்தலு நாண்மதுச் சேறு விண்டசெந் தாமரைக் கானமும் ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன் ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம். | 13 |
நெய்தல்
கோடு டைந்தன தாழையுங் கோழிருள் மோடு டைந்தன மூரிக் குவளையும் தோடு டைந்தன சூகமுங் கற்பகக் காடு டைந்தன போன்றுள கானலே. | 14 |
குறிஞ்சி
நீல வால வட்டத்தி னிறங்கொளக் கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல் ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும் ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம். | 15 |
முல்லை
நக்க முல்லையு நாகிளங் கொன்றையும் உக்க தாதடர் கொண்டொலி வண்டறா எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப் பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம். | 16 |
மருதம்
துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு கள்ள றாதசெந் தாமரைக் கானகத் துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப் புள்ள றதுபு லம்பின பொய்கையே. | 17 |
நெய்தல்
வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள் முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண் டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால் கண்மு ளைத்த தடத்த கழியெலாம். | 18 |
குறிஞ்சி
காந்த ளங்குலை யாற்களி வண்டினம் கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ டேந்து சந்தனச் சர லிருங்கைமா மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம், | 19 |
முல்லை
தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண் டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக் கார்செய் காலை கறித்தொறு மெல்லவே போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே. | 20 |
மருதம்
அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக் கள்ள லைத்தக வுட்கரு மேதிபால் உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால் புள்ள லைத்த புனலபு லங்களே. | 21 |
நெய்தல்
கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய் முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா வண்டல் வார்கரை மாமக ரக்குழாம் கண்டு நின்று கனலும் கழியெலாம். | 22 |
குறிஞ்சி
கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும் மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும் எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும் உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. | 23 |
முல்லை
பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர் தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே. | 24 |
மருதம்
மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும் பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த் தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின் காடு கொண்டுள கண்ணக னாடெலாம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.