(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
நரககதி வரலாறு
37 | முழமொரு மூன்றிற் றொட்டு மூரிவெஞ் சிலைக ளைஞ்ஞூ றெழுமுறை பெருகி மேன்மே லெய்திய வுருவ மெல்லாம் அழலினுள் மூழ்கி யன்ன வருநவை நரகந் தம்முள் உழைவிழி நம்மொ டொன்றி யொருவின வுணர லாமோ. |
விலங்குகதி வரலாறு
38 | அங்குலி யயங்கம் பாக மணுமுறை பெருகி மேன்மேல் பொங்கிய வீரைஞ் ஞூறு புகைபெறு முடையு டம்பு வெங்கனல் வினையின் மேனாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து நங்களை வந்து கூடி நடந்தன வனந்த மன்றோ. |
மனுஷ்யகதி வரலாறு்
39 | ஓரினார் முழங்கை தன்மே லோரொரு பதேசமேறி மூரிவெஞ் சிலைகண் மூவி ராயிர முற்ற வுற்ற (விட்ட பாரின்மேல் மனிதர் யாக்கை பண்டுநாங் கொண்டு வாரிவாய் மணலு மாற்றா வகையின வல்ல வோதான். |
தேவகதி வரலாறு
40 | இருமுழ மாதி யாக வெய்திய வகையி னோங்கி வருசிலை யிருபத் தைந்தின் வந்துறு மங்க மெல்லாந திருமலி தவத்திற் சென்று தேவர்தமுலகிற் பெற்ற(றோ. தொருவரா லுரைக்க லாமோ வுலந்தன வனந்தமன் |
தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்
41 | துன்பகா ரணமி தென்றே துடக்கறு கெனவுஞ் துஞ்சா அன்புறா நரகர் யாக்கை யவைகளு மமரர் கற்பத் தின்பக்காரணமி தென்றே யெம்முட னியல்க வென்றே அன்புசெய் தனக டாமு மழியுநா ளழியு மன்றே. |
42 | வந்துடன் வணங்கும் வானோர் மணிபுனை மகுடகோடி தந்திரு வடிக ளேந்துந் தமனிய பீட மாக இந்திர விபவம் பெற்ற விமையவ ரிறைவ ரேனுந் தந்திரு வுருவம் பொன்றத் தளர்ந்தன ரனந்த மன்றோ. |
43 | மக்களின் பிறவி யுள்ளும் மன்னர்தம் மன்ன ராகித் தி¢க்கெலா மடிப்ப டுத்துந் திகிரியஞ் செல்வ ரேனும் அக்குலத் துடம்பு தோன்றி யன்றுதொட் டின்று காறும் ஒக்கநின் றார்கள் வையத் தொருவரு மில்லை யன்றே. |
44 | ஆடைமுன் னுடீஇய திட்டோ ரந்துகி லசைத்த லொன் மாடமுன் னதுவி டுத்தோர் வளமனை புதிதின் வாழ்தல் [றோ நாடினெவ் வகையு மஃதே நமதிறப் பொடுபி றப்பும் பாடுவ தினியென் நங்கை பரிவொழிந் திடுக வென்றான். |
அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்
45 | அண்ணனீ யருளிற் றெல்லா மருவருப் புடைய மெய்யின் நண்ணிய நமதென் னுள்ளத் தவர்களுக் குறுதி நாடி விண்ணின்மே லின்ப மல்லால் விழைபயன் வெறுத்துநின்ற கண்ணனாய் நங்கட் கின்ன கட்டுரை யென்னை யென்றாள். |
இதுவுமது.
46 | அருவினை விளையு ளாய அருந்துயர்ப் பிறவி தோறும் வெருவிய மனத்து நம்மை வீடில விளைந்த வாறுந் திருவுடை யடிக டந்த திருவறப் பயனுந் தேறி (டோ.) வெருவிநாம் விடுத்த வாழ்க்கை விடுவதற் கஞ்ச லுண் |
இதுவுமது
47 | பெண்ணுயி ரௌ¤ய தாமே பெருந்திற லறிவும் பேராத் திண்மையு முடைய வல்ல சிந்தையி னென்ப தெண்ணி அண்ணனீ யருளிச் செய்தா யன்றிநல் லறத்திற்காட்சி கண்ணிய மனத்த ரிம்மைக் காதலு முடைய ரோதான். |
48 | இன்றிவ ணைய வென்க ணருளிய பொருளி தெல்லாம் நன்றென நயந்து கொண்டே னடுக்கமு மடுத்த தில்லை என்றெனக் கிறைவ னீயே யெனவிரு கையுங் கூப்பி இன்றுயான் யாது செய்வ தருளுக தெருள வென்றாள். |
இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்.
49 | ஒன்றிய வுடம்பின் வேறாம் உயிரின துருவ முள்ளி நன்றென நயந்து நங்கள் நல்லறப் பெருமை நாடி வென்றவர் சரண மூழ்கி விடுதுநம் முடல மென்றான் நன்றிது செய்கை யென்றே நங்கையும் நயந்த கொண் |
இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்.
50 | ‘அறிவொடா லோக முள்ளிட் டனந்தமா மியல்பிற் றாகி அறிதலுக் கரிய தாகி யருவமா யமல மாகிக் (வேறா குறுகிய தடற்றுள் வாள்போற் கொண்டிய லுடம்பின் யிறுகிய வினையு மல்ல தெமதியல் பென்று நின்றார்.‘ |
இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்
51 | உறுதியைப் பெரிது மாக்கி யுலகினுக் கிறைமை நல்கிப் பிறவிசெற் றரிய வீட்டின் பெருமையைத் தருதலானும் அறிவினிற் றெளிந்த மாட்சி யரதனத் திரய மென்னும் பெறுதலுக் கரிய செல்வம் பெற்றனம் பெரிதுமென்றார். |
சித்தர் வணக்கம்
52 | ஈங்குநம் மிடர்க டீர்க்கு மியல்பினார் நினைது மேலிவ் வோங்கிய வுலகத் தும்ப ரொளிசிகாமணியி னின்றார் வீங்கிய கருமக் கேட்டின் விரிந்தவெண் குணத்த ராகித் தீங்கெலா மகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பா£.¢ |
அருகர் வணக்கம்
53 | பெருமலை யனைய காதிப் பெரும்பகை பெயர்த்துப்பெற்ற திருமலி கடையி னான்மைத் திருவொடு திளைப்பரேனும் உரிமையி னுயிர்கட் கெல்லா மொருதனி விளக்கமாகித் திருமொழியருளுந் தீர்த்த கரர்களே துயர்க டீர்ப்பார். |
ஆசார்¢யர் வணக்கம்
54 | ஐவகை யொழுக்க மென்னு மருங்கல மொருங் கணிந்தார மெய்வகை விளக்கஞ் சொல்லி நல்லற மிகவ ளிப்பார் பவ்வியர் தம்மைத் தம்போற் பஞ்சநல் லொழுக்கம் பாரித் தவ்விய மகற்றந் தொல்லா சிரியரெம் மல்ல றீர்ப்பார். |
உபாத்தியாயர் வணக்கம்
55 | அங்க நூலாதி யாவு மரிறபத் தெரிந்து தீமைப் பங்கவிழ் பங்க மாடிப் பரமநன் னெறிப யின்றிட் டங்கபூ வாதி மெய்ந்நூ லமிழ்தகப் படுத்த டைந்த நங்களுக் களிக்கு நீரார் நம்வினை கழுவு நீரார். |
சர்வசாது வணக்கம்
56 | பேதுறு பிறவி போக்கும் பெருந்திரு வுருவுக் கேற்ற கோதறு குணங்கள் பெய்த கொள்கல மனைய ராகிச் சேதியின் நெறியின வேறு சிறந்தது சிந்தை செய்யாச் சாதுவ ரன்றி யாரே சரண்நமக் குலகி னாவார். |
57 | இனையன நினைவை யோரு மிளைஞரை விரைவிற் கொண்டு தனைர சருளும் பெற்றிச் சண்டனச் சண்ட மாரி முனைமுக வாயிற் பீட முன்னருய்த் திட்டு நிற்பக கனைகழ லரச னையோ கையில்வா ளுருவி னானே. |
இளைஞர் புன்முறுவல் செய்தல்
58 | கொலைக்களங் குறுகி நின்றுங் குலுங்கலர் டம்மால் இலக்கண மமைந்த மெய்ய ரிருவரு மியைந்து நிற்ப நிலத்திறை மன்னன் வாழ்க நெடிதென வுரைமி னென்றார். மலக்கிலா மனத்தர் தம்வாய் வறியதோர் முறுவல் செய்தார். |
இளைஞர் மன்னனை வாழ்த்துதல்
59 | மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா தறவியன் மனத்தை யாகி யாருயிர்க் கருள் பரப்பிச் சிறையன பிறவி போக்குந் திருவற மருவிச் சென்று நிறைபுக முலகங் காத்து நீடுவாழ்க கென்று நின்றார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.