58 | சிந்தித் தாளிது செறியெயிற் றரிவைய துருவாய்ப் பந்தித் தாகிய பழவினை கெடுகெனப் படிற்றால் வந்தித் தியான்கொண்ட வடிவினின் மனநிறை யழித்தா னொந்தித் தீநிகர் நோன்புகை விடுமிவ னெனவே.] |
59 | யாம நீங்கலு மரசன்ற னொருமக ளுரைசால் காம லேகைதன் னுருவொடு திருவெனத் தோன்றித் தாமஞ் சாந்துதண் மலரின்ன பலகொண்டு துணைசால் சேமங் காவல சேவடி போற்றெனச் சென்றாள். |
60 | வணங்கி வந்திடம் வலங்கொண்டு வழிபடு பொழுதில் கணங்க டாம்பல கடன்சொல்லிக் கலந்தெடுத் தேத்தித் துணங்கை யாடத்தன் றுகிலிடை மேகலை துளங்க வணங்கு மெய்யவ ளருந்தவ னுழைவர நினைந்தாள். |
61 | காவ லாளகுங் கடையிறந் திவண்வர வொழிக வேவ லாளரு மிதற்கெய்து மியல்குறை முயல்க கூலி யான்குறை யுளதெனக் குறுகுமி னமரென் றோவில் பல்புக ழுறுதவ னறியநின் றுரைக்கும். |
62 | ஆண்டைக் கோட்டத்தை அணைந்ததோ ரகலிலை யால மாண்டைக் காயதோர் மரமுத லிருந்தமா தவனைக் காண்டக் காயென்செய்கருவினை தணிக்கெனப் பணிந்தாள் வேண்டிக் கொண்டவவ் வியத்தகுவிளங்குரு வுடையாள் |
63 | வேண்டிய வுருவத னாலும் வேட்கைசெய் யுருவத னாலுங் காண்டகு மடவர லுருவங் காமுறு வதுநனி தாங்கி யீண்டிய மிகுகுணத் திறைவ னியல்பினை யெனையது நினையா நீண்டதோர் கொடியயற் கொடிபோ னிறைதவ வருளென நின்றாள். |
64 | உடம்பொடு முயிரிடை மிடைந்த வொற்றுமை வேற்றுமை விகற்பிற் றொடர்ந்தபல் வினைகளைத் துணிக்குஞ் சுதநெறி முறைமையு மறிவான் படர்ந்ததன் யோகினை நிறுவிப்பணிந்தவரட் காசிடை மொழிந்தா னிடம்பக மகளிவள் பெரிது மிராசபுத் திரியல ளெனவே. |
65 | என்னைஈண் டைக்கு வரவென் றருந்தவன் வினவலு மெழிலார் பொன்னனாள் புடைபெயர்த் திட்ட பொலங்கல மனங்கலக் குவபோன் மின்னொளி யோடுற மிழற்றமிழற்றுவ கிளியென மொழிந்தாள் முன்னநான் பரவிய வரங்கண்முடிகுறை கொடுப்பதற் கெனவே. |
66 | யாதுநீ கொண்ட வரமென் றருந்தவ னியல்பினின் வினவ வேதினாட் டிறையெங்க ளிறைமே லியல்பின்றி யெழலொழி கெனவே போதுசாந் தவியொடு புகையும் பொருந்திய பொருந்தெய்வக் கெனலு மோதிஞா னியிது வாயி னுரையழ கீதென மொழிந்தான். |
67 | தோடுகொண் டொருசெவி விளங்கத் துளங்குவ மகரமொன் றாடப் பாடுவண் டோடுசுரும் பரற்றப் பல்கலம் வயிரவில் வீச வாடுகொம் பனையவ ருரைக்கு மச்சமோ பெரிதுடைத் தடிகள் காடுகண் டாற்பிறர்க் கறியேன் கவற்றுவ தொக்குமீ தெனக்கே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.