28 | விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி யிண்டு மீங்கையு மிருள்பட மிடைந்தவற் றிடையே குண்டு கண்ணின பேய்களுங் கூகையுங் குழறிக் கண்ட மாந்தர்தம் மனங்களைக் கலமலக் குறுக்கும். |
29 | ஈமத் தூமமு மெரியினு மிருளொடு விளக்கா வூமைக் கூகையு மோரியு முறழுறழ் கதிக்கும் யாமத் தீண்டிவந் தாண்டலை மாண்பில வழைக்கும் தீமைக் கேயிட னாயதோர் செம்மலை யுடைத்தே. |
30 | வெள்ளின் மாலையும் விரிந்தவெண் டலைகளுங் கரிந்த கொள்ளி மலையுங் கொடிபடு கூறையு மகலும் பள்ளி மாறிய பாடையு மெலும்புமே பரந்து கள்ளி யாரிடைக் கலந்ததோர் தோற்றமுங் கடிதே. |
31 | காக்கை யார்ப்பன கழுதுதங் கிளையொடு கதறித் தூக்க ளீர்ப்பன தொடர்ந்தபல் பிணங்களுந் தூங்கச் சேக்கை கொள்வன செஞ்செவி யெருவையு மருவி யாக்கை கொண்டவர்க் கணைதலுக் கரிதது பெரிதும். |
32 | கோளி யாலமுங் கோழரை மரங்களும் குழுமித் தூளி யார்த்தெழு சுடலையு முடலமுந் துவன்றி மீளி யாக்கைய தாக்கியுண் பேய்க்கண மிகைசூழ் கூளி தாய்க்கென வாக்கிய கோட்டமொன் றுளதே. |
33 | இறைவி கோட்டத்து ளீரிரு திங்கள தகவை யுறையு ளாகவவ் வுறையருங் காட்டகத் துறைவான் பொறையு மாற்றலும் பூமியு மேருவு மனையான் தான். சிறைசெய் சிந்தைய னந்தமில் பொருள்களைத் தெரிந் |
34 | அத்தி காயங்க ளளவைக ளாலளந் தறிவான் குத்தி யாதிய குணங்களிற் பெரியவ னரிய பத்தின் மேலிரு தவத்தினிற் பவத்தொட ரறுக்கும் முத்தின் யான்முனிச் சந்திர னெனும்பெயர் முனிவன். |
35 | அன்றக் கோட்டத்து ளறிவிலா மறிதலை யறுப்பான் சென்ற தெய்வதைக் கெனச்சிலர் சிறப்பயர் பொழுதின் நின்றக் கோண்மின மெனச் சொல்லி நெறியறி வுறுவோ னொன்றற் பல்வகை யுயிர்க் கொலை யுரைமின மெனவே. |
36 | பண்டிந்நின்ற பணைத்தோளி பாலற்பெ றாமையைக் கண்டியாமிக் கணமோடி தன்பாற்சொன் னோமாக வுண்டதாயிற் றோர்குழவி யென்னவுவப் பித்தற்குக் கொண்டுவந்தே மறியறுக்க வென்றார் கொலையாளர். |
37 | ஊனுடம் போவுயிரோ வுறுகுழவி யாத றேனொடுங்குங் குழலாட்குத் தேவர்மன னுந்தந்த தூனுடம் பென்னி லுதிரமா முயிரென்னின் மானிடமாம் வினைமேலைச் செய்தன்றோ வந்ததென்றான். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.