கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 25 மார்ச், 2012

உதயண குமார காவியம், -15

உதயணன் விரிசிகை மணம்


தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்துவிட்ட
பூவின் மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தானன்றே.
240


உதயணனின் ஆட்சிச் சிறப்பு


நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்னனுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான்.
241



நரவாகன காண்டம்


வாசவதத்தை மசக்கை எய்துதல்


எத்திக்கு மடிப்படுத்தி யெழில் பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற்றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில் சீர் மயற்கை யானாள் 242


வாசவதத்தையின் விருப்பம்


நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதாந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தினெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே.
243


உருமண்ணுவாவின் உரை


உருமண்ணு விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தினீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோ ர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பேரிடர் தீர்த்தானன்றே.
244


இன்னமோர் இடர் வந்தாலு மென்னை நீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையினளித்துப் போந்தான்
சொன்னமா மந்திரத்தைச் சூழ்ச்சியினினைக்க வென்றான்
பின்னவன் நினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான்.
245


தேவன் கூற்று


பலவுப சாரஞ் சொல்லிப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியலந் தலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும்.
246


மித்திரனென்றே யென்னை வேண்டிமுன் நினைத்தாயில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையினினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியும் ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான்.
247


உதயணன் உரை


எங்களிற் கரும மாக்கு மியல்புள தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவு நின்னாலே யன்றி
எங்களி லாகா தென்றிப் பொழுதுனை நினைத்தேனென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான்.
248


தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்


வெள்ளிய மலையிற் தேவன் விரைக்குழ லாள் வயிற்றின்
உள்ளவின் பத்தினாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரினேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான்.
249


அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்


வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையினேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கினின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றார்.
250


உதயநற் கிரியுங் கண்டே யுற்றுடன் றெற்கிற் சென்று
பொதியமா மலையுங் காணாப் பொருவில்சீர்க் குடபானின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரிய டைந்தார்.
251


நரவாகனன் பிறப்பு


மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றோன்றப் புரவலனினியனாகிச்
சோதிப்பொன்னறைதி றந்து தூவினன் சனங்கட்கெல்லாம்.
252


மக்கட்குப் பெயரிடுதல்


நரவாகனன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்க நாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசகனாக தத்தன்
குரவம்பூ மேனியான குலமறி பூதியாமே.
253


நரவாகனன் கலைபயிலுதல்


நால்வருந் துணைவராகி நறுநெய்பாலுடன ருந்தி
பான்மரத் தொட்டிலிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வளர்ந்து வரிசையினிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தாரன்றே.
254


நரவாகனன் உலாப் போதல்


ஞானநற் குமரி தன்னை நலமுழுதுண்டு மாரன்
மானவிற் கணக்கி லக்கா மன்மதனென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான்.
255


நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்


ஒளிர்குழற் கலிங்க சேனை யுதரத்தினுற்ப வித்த
வளிற்றும் பூஞ்சு கந்த மதனமஞ்சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான்.
256


நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்


மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்ட நன் மாரனம்பா லிறுவரு மயக்கமுற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தானன்றே.
257


மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்


இருவரும் போகந் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேகனென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே.
258


மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்


தன்னுடை நோயுரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை யினிமையினினைத் திருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தானன்றே.
259


வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்


அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாதனிந்திரன் போலுமென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக்கண்டாளே.
260


வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்


கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனினிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூதினிலே வந்தால்.
261


மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்


மதன மஞ்சிகை மான்விழிரூபம் போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
262


தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதையைக் கண்டுபீடுடைக் களையும்
தீதறுந் திறந் தேர்ந்து புரைந்தனன்.
263


மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்


ஆங்கொர் நாளிலரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்குழாஅல்நீ புதியைமற்றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.
264


நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்


கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பி நீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே.
265


மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்


மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.
266


மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்


வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தனன்.
267


நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்


வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.
268


போதி தன்வலிப் போத வுணர்ந்து தன்
காதலிற்சென்று காளைதன்னாமமும்
ஏதமில் தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
269


நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்


தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில் குணத் தையநீ ராரென்
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்றும் கேட்டனன்.
270


விஞ்சை யம்பதி வெற்றி கொண்டாளுமென்
தஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்சு லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
271


முனிவனின் கூற்று


வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்ளில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ள விழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்
272


நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்


மாதவன் விட வள்ளனகர்ப்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.
273


மேனி கழ்வென மெய்த்தவர் கூறின்
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும் ரன்னினி தேறினான்.
274


நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்


அன்பால் வான்வழியாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
275

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;