நெய்தல்
சங்கு நித்தில முத்தவ ழிப்பியும் தெங்கந் தீங்குலை யூறிய தேறலும் வங்க வாரியும் வாரலை வாரியும் தங்கு வாரிய தண்கட னாடெலாம். | 26 |
திணை மயக்கம் [மலர்]
கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே. | 27 |
திணை மயக்கம் [ஒலி]
கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே. | 28 |
சுரமை நாட்டின் சிறப்பு
மாக்கொடி மாணையு மெளவற் பந்தரும் கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும் தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. | 29 |
2.நகரச் சருக்கம்
சுரமை நாட்டுப் போதனமா நகரம்
சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர் நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே. | 30 |
நகரத்தின் அமைதி
சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச் செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும் நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே. | 31 |
அகழியும் மதிலரணும்
செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும் மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத் தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. | 32 |
அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு
இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக் கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின் அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம் | 33 |
மாடங்களின் மாண்பு
மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம் தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங் கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார் வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே. | 34 |
இதுவுமது - வேறு
அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும் முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும் துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும் இகலின மலையொடு மாட மென்பவே. | 35 |
மாடங்களின் சிறப்பு
கண்ணெலாங் கவர்வன கனக கூடமும் வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும் தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ மண்ணினா லியன்றில மதலை மாடமே. | 36 |
மாடத்திற் பலவகை ஒலிகள்
மாடவாய் மணிமுழா விசையு மங்கையர் ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும் பாடுவார் பாணியும் பயின்று பல்கலம் முடிமா ணகரது முரல்வ தொக்குமே | 37 |
வண்டுகளின் மயக்கம்
தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர் மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென் றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே. | 38 |
கடைத்தெரு
பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம் துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால் வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே. | 39 |
சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்
காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம் பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும் தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே. | 40 |
அரசர் தெருவழகு
விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர் நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள் புலத்திடைத் தாமரை பூத்த போலுமே. | 41 |
செல்வச் சிறப்பு
கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும் வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும் வண்ணவான் மல்லிகை வளாய மாலையும் அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே. | 42 |
மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி
தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே. | 43 |
இன்ப உலகம்
மைந்தரு மகளிரு மாலை காலையென் றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால் சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே. | 44 |
பயாபதி மன்னன் மாண்பு
மற்றமா நகருடை மன்னன் றன்னுயா ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப் பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே | 45 |
பயாபதி மன்னன் சிறப்பு
எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான் அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான் நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும் தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே. | 46 |
மக்கட்குப் பகையின்மை
நாமவே னரபதி யுலகங் காத்தநாட் காமவேள் கவர்கணை கலந்த தல்லது தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை நாமநீர் வரைப்பக நலித தில்லையே. | 47 |
குடிகளை வருத்தி இறை கொள்ளாமை
ஆறிலொன் றறமென வருளி னல்லதொன் றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே மாறிநின் றவரையும் வணக்கி னல்லது சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே. | 48 |
மன்னனின் முந்நிழல்
அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர் முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன் குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே. | 49 |
இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்
மன்னிய பகைக்குழா மாறும் வையகம் துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால் தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம் மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ | 50 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.