68 | மணிநகு நெடுமுடி மறவேன் மன்னவன் மகளெனின் மடவாய் அணிநகை யாயமோ டாடி அரும்பெறற் சுற்றமோ டிருப்பாய் பிணிமிகு பேய்வன மிதனுட் போதுற லொருதலை பிறவோ துணிவொடு துறந்தவர்க் கல்லாற் றுன்னதற் கரிதிது பிறர்க்கே. |
69 | வேணுவோ டினையன பிறவும் வியப்புறு பெருவனம் வினவிற் பேணுதற் கரிதிது பெரிதும் பிணிதரு பேய்வன மெனவே வாணுதன் மயிர்குளிர்த் துரைக்கும் மாதவத் தடிகளென் றானுங் காணுதற் கரியன வுருவங் கண்டறி வனகளு முளவோ. |
70 | புக்கிருந் தொருமனை யுறைவார் போவதும் வருவதுங் கண்டான் மக்களுந் தாயரந் தம்முள் மருள்வதும் வெருள்வது முளதோ மிக்கபல் கதிகளு முயிரின் மெய்ம்மையு முணர்ந்தவர்க் கரிதே ஒக்குமற் றவையுள வேனு முரைப்பது பொருத்தமின் றெமக்கே. |
71 | சந்திர முனிவர னுரைப்பத்தளிரியல் சாவுகள் சாரா மந்திர முளதெனி னடிகள்மனத்தொடு பணிமின மெனவே யந்தரத்தவர்களும் வணங்குமருந்தவ னவையுனை யடையா இந்திரன் வேண்டினும் பேய்களென்னமற் றிலங்கிழை மடவோள்; |
72 | துப்படு துவரிதழ் துடிக்குந்துகிலிடை யகலல்கு றுளக்குஞ் செப்படு வனமுலை செறிக்குஞ்சிதரரி மழைக்கணுஞ் சிறைக்கு மொப்படு துடியிடை யொசிக்குமுவ்வுறு மதிமுக முழற்று மிப்படி யவளிவை செயலுமிவையெனை யெமக்கென வுரைத்தான். |
73 | காதின கனகப் பைந்தோடுங்கைவெள் வளைகளுங் கழலத் தாதின வினமலர் பலவுந்தலையன நிலமிசை யுதிரப் போதன புணரரி நெடுங்கண்புனல்வரப் பூந்துகிற் புடையா வேதனை பெரிதுடைத் தடிகள்விளிகவிப் பிறப்பென வுரைத்தாள். |
74 | பிறவியும் பிறவியுட் பிறக்கும் பிணியுமப் பிணியினைத் துணிக்கு மறவியின் மருந்துமம் மருந்தின்மாட்சியுங் கேட்குறின் மடவா யறவிய மனத்தினை யாகி அலங்கழித் தொழிலொழிந் தடங்கி உறவினை யோம்பினை யிருவென்றுயர்தவ னுரைத்தலு மிருந்தாள். |
75 | நாற்கதி யுள்ள நரகரை நாஞ்சொல்லின் மூன்றுவகைக் காற்று வலையங்க ளேந்து நிரையக் கதிநிலந்தா மேற்ற நிகோதத்தி னிம்ப ரிருளி னிரளிருண்மே லாற்றப் புகையள றார்மணற் கூர்ம்பர லாய்மணியே. |
76 | ஏழா யவைவிரிந் தெண்பத்து நான்குநூ றாயிரமாம் போழா மவற்றப் புரையின் விகற்பமும் பொற்றொடியாய் கீழா ரலிகண் முழுச்செவி கிண்ணர்க ளெண்ணிகந்த வூழாம் பிறப்புமுவ் வாதமல் லாருரு வொப்பினரே. |
77 | விலங்கின் வகையும் விரிவன யான்சொல்ல வேண்டுதியே லலங்கலம் பூணா யிருவகை யாமவை யென்கொலென்னின் நிலங்களி னிற்பவுஞ் செல்பவு மாமென நிற்பனதா மிலம்பட லின்றியிவ் வையகத் தைந்தா யியன்றனவே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.