நீலகேசி என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி - அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.
நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதுஅவிழ்ந்து
கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே
(வளையாபதி 3: 1-2)
என்ற வளையாபதிப் பாடல் ‘நீலகேசி’ சொல்லுக்கு விளக்கமாக அமையும். மகாபாரத்தில் திரௌபதி கூந்தலை அவிழ்த்து விட்டுச் சூளுரைத்ததுபோல இங்கு நீலகேசி, சமய வாதத்தில் இறங்கி, தர்க்க ரீதியாகப் பிற சமயத்தாரோடு வாதிட்டுத் தன் சமயத்தை நிலைநாட்டிய பின்னரே கூந்தலை முடிப்பது எனச் சபதம் செய்து வென்றதையே நீலகேசி உணர்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.