சூளாமணி காப்பியப் பண்பில் சிறப்பானது; விரிவானது; நுட்பமானது. கவிதைச் சிறப்புடன் பல்வேறு பண்புகளுடனும் சிறந்து விளங்குவது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது. பயாபதி வரலாற்றை முழுமையாக பெருங்காப்பிய அமைப்பில் பேசுகிறது. இடையில் காவியம் முழுக்கத் திவிட்டனின் ஆற்றல், வீரம், காதல் எனத் திவிட்டனே காப்பியத் தலைவனாக உருவெடுக்கிறான். மூன்று தலைமுறையினர்தம் வாழ்வைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அறம், பொருள், இன்பம், வீடுபேறு; மந்திராலோசனை, தூது, போர், வெற்றி, வேனில் விழா, சுயம்வரம், தெய்வப் போர் எனக் காப்பியம் முழுக்கத் தமிழ் மணம், தமிழர் மரபு ஆதிக்கம் செலுத்துகிறது. சமண சமயக் கொள்கையைக் கற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் கோட்பாடாக அமைந்தாலும், பிற சமயக் காழ்ப்பு மற்றும் பழிப்பை ஓரிடத்தில் கூடக் காண முடியவில்லை.
சனி, 3 மார்ச், 2012
சூளாமணி
சூளாமணி காப்பியப் பண்பில் சிறப்பானது; விரிவானது; நுட்பமானது. கவிதைச் சிறப்புடன் பல்வேறு பண்புகளுடனும் சிறந்து விளங்குவது. காப்பியக் கதை பயாபதி மன்னன் ஆட்சியோடு தொடங்கி, அவன் முக்தி மகளை மணந்து, உயர்ந்து, உலகின் முடிக்கோர் சூளாமணியானான் என்று முடிகிறது. பயாபதி வரலாற்றை முழுமையாக பெருங்காப்பிய அமைப்பில் பேசுகிறது. இடையில் காவியம் முழுக்கத் திவிட்டனின் ஆற்றல், வீரம், காதல் எனத் திவிட்டனே காப்பியத் தலைவனாக உருவெடுக்கிறான். மூன்று தலைமுறையினர்தம் வாழ்வைக் காப்பியம் எடுத்துரைக்கிறது. ஐந்திணை நிலவளம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அறம், பொருள், இன்பம், வீடுபேறு; மந்திராலோசனை, தூது, போர், வெற்றி, வேனில் விழா, சுயம்வரம், தெய்வப் போர் எனக் காப்பியம் முழுக்கத் தமிழ் மணம், தமிழர் மரபு ஆதிக்கம் செலுத்துகிறது. சமண சமயக் கொள்கையைக் கற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது இதன் கோட்பாடாக அமைந்தாலும், பிற சமயக் காழ்ப்பு மற்றும் பழிப்பை ஓரிடத்தில் கூடக் காண முடியவில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.