வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீர்இயல் பொலிய நீர்அல நீங்க | 135 |
வாரம் இரண்டும் வரிசையில் பாடப் பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும் கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம் குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் | 140 |
பின்வழி நின்றது முழவே, முழவொடு கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக் கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி | 145 |
வந்த முறையின் வழிமுறை வழாமல் அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர், மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து | 150 |
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை, ஆறும் நாலும் அம்முறை போக்கிக் கூறிய ஐந்தின் கொள்கை போலப் | 155 |
பின்னையும் அம்முறை பேரிய பின்றை, பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னுல் நன்குகடைப் பிடித்துக் காட்டினள் ஆதலின், காவல் வேந்தன் இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் | 160 |
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை, | 165 |
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து நகர நம்பியர் திரிதரு மறுகில் பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த, மாமலர் நெடுங்கண் மாதவி மாலை | 170 |
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு மணமனை புக்கு மாதவி தன்னொடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி விடுதல் அறியா விருப்பினன் ஆயினன். வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன். | 175 |
(வெண்பா)
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும் பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல் போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன் வாக்கினால் ஆடரங்கில் வந்து. |
திங்கள், 28 மே, 2012
சிலப்பதிகாரம்-14
லேபிள்கள்:
சிலப்பதிகாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.