5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல் கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை புதைஇருள் படாஅம் போக நீக்கி உடைய மால்வரை உச்சித் தோன்றி | 5 |
உலகுவிளங்கு அவிர்ஒளி மலர்கதிர் பரப்பி, வேயா மாடமும், வியன்கல இருக்கையும், மான்கண் காதலர் மாளிகை இடங்களும், கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும் பயன்அறிவு அறியா யவனர் இருக்கையும், | 10 |
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும், வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும், | 15 |
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும், தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா | 20 |
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும், காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர் | 25 |
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரொடு ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும், கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும் | 30 |
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் துன்ன காரரும் தோலின் துன்னரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும் குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் | 35 |
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும், சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும், கோவியன் வீதியும், கொடித்தேர் வீதியும், | 40 |
பீடிகைத் தெருவும், பெருங்குடி வாணிகர் மாட மறுகும், மறையோர் இருக்கையும், வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும், | 45 |
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும், சூதர் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் | 50 |
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர் பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும், கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் | 55 |
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும், பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும், இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய | 60 |
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில் சித்திரைச் சித்திரத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க எனத் | 65 |
தேவர் கோமான் ஏவலின் போந்த காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குஉடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்குஎழுந்து ஆடிப் | 70 |
பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையின் உரைக்கும் மூதிற் பெண்டிர் ஓதையின் பெயர, | 75 |
மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் முந்தச் சென்று முழுப்பலி பீடிகை வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் | 80 |
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல் பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுனோக்குக் கருந்தலை வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கவென | 85 |
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி, இருநில மருங்கின் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன் | 90 |
வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப் புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள் அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப் | 95 |
பகைவிலக் கியதுஇப் பயம்கெழு மலைஎன இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு, மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் | 100 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.