மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும் பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும் | 105 |
நுண்வினைக் கம்மியர் காணா மரபின, துயர்நீங்கு சிறப்பின்அவர் தொல்லோர் உதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின, இவைதாம் ஒருங்குடன் புணர்ந்துஆங்கு உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம் அன்றியும், | 110 |
வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய ஆகிக் கட்போர் உளர்எனின் கடுப்பத் தலைஏற்றிக் | 115 |
கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும், கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்று | 120 |
வலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும், வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர் நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோ ர் | 125 |
சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும், தவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர் அவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர் அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் | 130 |
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக் காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப் பூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும், அரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து | 135 |
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவைநின்று அழுஉம் பாவை மன்றமும், மெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ, | 140 |
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி, வால்வெண் களிற்றுஅரசு வயங்கிய கோட்டத்துக் கால்கோள் விழவின் கடைநிலை சாற்றித் தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து | 145 |
மங்கல நெடுங்கொடி வான்உற எடுத்து, மரகத மணியொடு வயிரம் குயிற்றிப் பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும் கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத்து ஒழுக்கத்து | 150 |
மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரணம் நிலைஇய தோம்அறு பசும்பொன் பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொன் படாகை தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து | 155 |
மேவிய கொள்கை வீதியில் செறிந்துஆங்கு, ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்ப்பரித் தேரினர் இயைந்துஒருங்கு ஈண்டி | 160 |
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றம் கொள்கென மாஇரு ஞாலத்து மன்உயிர் காக்கும் ஆயிரத்து ஓர்எட்டு அரசுதலைக் கொண்ட தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் | 165 |
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி மண்ணகம் மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி, பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் | 170 |
வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் தீமுறை ஒருபால், | 175 |
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந்து ஒருபால், அறவோர் பள்ளியும் அறன்ஓம் படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் | 180 |
திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால், கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந்து ஒருபால், கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர் பண்யாழ்ப் புலவர் பாடல் பாணரொடு | 185 |
எண்அருஞ் சிறப்பின் இசைசிறந்து ஒருபால், முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள் ஆங்கண் காதல் கொழுநனைப் பிரிந்துஅலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு | 190 |
இல்வளர் முல்லை மல்லிகை மயிலை தாழிக் குவளை சூழ்செங் கழுநீர் பயில்பூங் கோதைப் பிணையலிற் பொலிந்து காமக் களிமகிழ்வு எய்திக் காமர் பூம்பொதி நறுவிரைப் பொழில்ஆட்டு அமர்ந்து | 195 |
நாள்மகிழ் இருக்கை நாள்அங் காடியில் பூமலி கானத்துப் புதுமணம் புக்குப் புகையும் சாந்தும் புலராது சிறந்து நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக் குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு | 200 |
திங்கள், 28 மே, 2012
சிலப்பதிகாரம்-17
லேபிள்கள்:
சிலப்பதிகாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.