ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.
203 | அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன் வணிகர் தம்பொருள் வாரி மயிடமும் பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான் கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர். |
204 | அரச னாணை யறிந்தரு ளில்லவர் சரண நான்கினை யுந்தளை செய்தனர் கரண மானவை யாவுங் களைந்தனர் அரண மாமற னில்லது தன்னையே. |
205 | கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந் தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர் நெய்பெய் சலாகை கடைந்தபின் கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர். |
206 | ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி மேய மேதித் தசைமிக வெந்ததை வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள் மாயை செய்தன ளென்றனர் மற்றையார். |
207 | இன்னு மாசை யெனக்குள திவ்வழித் துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது தன்னி னாய குறங்குக டித்தது தின்னி னாசை சிதைந்திட மென்றனள். |
இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்
208 | அனங்க னான பெருந்தகை யண்ணலைச் சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில் கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள் மனங்கொ ளாவொரு மானுட நாயினை. |
209 | குட்ட மாகிய மேனிக் குலமிலா அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின் நட்ட மாகிய நல்லெழின் மேனியள் குட்ட நோயிற் குளித்திடு கின்றனள். |
210 | அழுகி நைந்துட னஃகு மவயவத் தொழுகு புண்ணி னுருவின ளாயினள் முழுகு சீயின் முடைப்பொலி மேனியள் தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள். |
211 | உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள் இம்மைச் செய்த வினைப்பய னேயிவை எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல. |
212 | நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல் தீய வல்வினை தேடுத லேகொலோ மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள் மாய மற்றிது தன்னையும் வவ்வுமே. |
பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்
213 | என்று தன்புறத் திப்படிக் கூறினர் சென்று சேடியர் பற்றிய வத்தகர் ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும் சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ. |
214 | தேவி யென்னை முனிந்தனை சென்றொரு பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ பாவி நின்னுரு வின்னண மாயது பாவி யென்னையும் பற்றினை யின்னணம். |
215 | நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை வஞ்ச னைமட வாய்மயி டம்மது துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ. |
216 | என்று கண்ட மொறுமொறுத் தென்செயும் நின்று நெஞ்சம துள்சுட நின்றது அன்று தேவி யலைப்ப வழிந்துயிர் சென்ற தம்மயி டத்தொடு செல்கதி. |
எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்
217 | மற்றம் மாநகரத்து மருங்கினில் சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின் உற்று வாரணப் புள்ளுரு வாயின வெற்றி வேலவன் கண்டு விரும்பினான். |
218 | கண்டு மன்னவன் கண்களி கொண்டனன் சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக் கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன் மண்டு போர்வினை வல்லவு மாயவே. |
219 | தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே. |
நான்காஞ் சருக்கம்
220 | செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங் கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ. |
221 | இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன் வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢ இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான். |
222 | பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற் சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார் பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான். |
223 | வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன் தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான் |
224 | அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத் தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த் தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர் மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான். |
225 | வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான் முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான். |
226 | ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச் சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே. |
227 | அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச் சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான். |
228 | கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும். |
229 | மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும் இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன் உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும் மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே. |
முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.
230 | பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும். |
இதுவும் அது
231 | சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப் புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும் ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த் திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும். |
232 | இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம் வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர் ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும். |
233 | ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர் ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும் போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க் காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான். |
234 | அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக் குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும் முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான். |
235 | உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும் அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல் இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான். |
236 | பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண் தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும் மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான். |
237 | கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும் மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும் விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும். |
238 | தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம் பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள். ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ. |
239 | சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம் உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக் கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம் அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான். |
முனிவரர் மீண்டும் கூறல்
240 | ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால் ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல் வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான். |
241 | இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க் கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய் பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ் சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ. |
242 | நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக் கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச் சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய் அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம். |
243 | இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக் கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன் பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ. |
244 | வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந் தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார் ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார் ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான். |
245 | உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம் மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால் உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார் செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான். |
246 | மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச் செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல் பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான். |
247 | கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக் கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட் டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும். |
248 | பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர் மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம் பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே. |
249 | அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக் குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச் செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன் முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான். |
250 | சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢ நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச் சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢ வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே. |
251 | விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல் அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம் முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே. |
252 | இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள் பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங் இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள் பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே. |
253 | அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம் பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார் இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும். |
254 | பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும் வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க் குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும் அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன். |
255 | நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல் வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான். |
256 | இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச் சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும் பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக் கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான் |
257 | கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற் கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான் மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே. |
258 | கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய் ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான் நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே. |
259 | அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால் உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக் கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான். |
இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
260 | காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர் ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன் வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான். |
261 | வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர் அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண் சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான் மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய். |
262 | ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும் மாகமழை வண்கைமத யானைமணி முடியோய். |
263 | அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர் கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர் அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே. |
264 | இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும் நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும் தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார் அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய். |
265 | இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென் றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ் செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢ வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய். |
266 | என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன் கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான். |
267 | இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.