கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 28 மே, 2012

யசோதர காவியம்-17

ஏவலர் ‘வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த‘ தென்று அரசனுக்கு அறிவித்தன ரென்க.


203அணிகொன் மாமுடி மன்ன னழன்றனன்
வணிகர் தம்பொருள் வாரி மயிடமும்
பிணிசெய் தெம்முறை வம்மெனப் பேசினான்
கணித மில்பொருள் சென்று கவர்ந்தனர்.


204அரச னாணை யறிந்தரு ளில்லவர்
சரண நான்கினை யுந்தளை செய்தனர்
கரண மானவை யாவுங் களைந்தனர்
அரண மாமற னில்லது தன்னையே.


205கார நீரினைக் காய்ச்சி யுறுப்பரிந்
தார வூட்டி யதன்வயி றீர்ந்தவர்
நெய்பெய் சலாகை கடைந்தபின்
கூர்முண் மத்திகை யிற்கொலை செய்தனர்.


206ஆயி டைக்கொடி யாளமிர் தம்மதி
மேய மேதித் தசைமிக வெந்ததை
வாயின் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தன ளென்றனர் மற்றையார்.


207இன்னு மாசை யெனக்குள திவ்வழித்
துன்னி வாழ்தக ரொன்றுள தின்றது
தன்னி னாய குறங்குக டித்தது
தின்னி னாசை சிதைந்திட மென்றனள்.


இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்


208அனங்க னான பெருந்தகை யண்ணலைச்
சினங்கொ ளாவுயிர் செற்றனள் நஞ்சினில்
கனங்கொள் காமங் கலக்கக் கலந்தனள்
மனங்கொ ளாவொரு மானுட நாயினை.


209குட்ட மாகிய மேனிக் குலமிலா
அட்ட பங்கனோ டாடி யமர்ந்தபின்
நட்ட மாகிய நல்லெழின் மேனியள்
குட்ட நோயிற் குளித்திடு கின்றனள்.


210அழுகி நைந்துட னஃகு மவயவத்
தொழுகு புண்ணி னுருவின ளாயினள்
முழுகு சீயின் முடைப்பொலி மேனியள்
தொழுவல் பல்பிணி நோய்களுந் துன்னினாள்.


211உம்மை வல்வினை யாலுணர் வொன்றிலாள்
இம்மைச் செய்த வினைப்பய னேயிவை
எம்மை யும்மினி நின்றிடு மிவ்வினை
பொய்ம்மை யன்றிவள் பொன்றினும் பொன்றல.


212நோயி னாசைகொல் நுண்ணுணர் வின்மைகொல்
தீய வல்வினை தேடுத லேகொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்றிது தன்னையும் வவ்வுமே.


பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்


213என்று தன்புறத் திப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய வத்தகர்
ஒன்று முற்ற வுணர்ந்தவள் தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்தரோ.


214தேவி யென்னை முனிந்தனை சென்றொரு
பாவி தன்னை மகிழ்ந்த பயன்கொலோ
பாவி நின்னுரு வின்னண மாயது
பாவி யென்னையும் பற்றினை யின்னணம்.


215நஞ்சி லன்னையோ டென்னை நலிந்தனை
எஞ்ச லில்சின மின்ன மிறந்திலை
வஞ்ச னைமட வாய்மயி டம்மது
துஞ்சு நின்வயிற் றென்னையுஞ் சூழ்தியோ.


216என்று கண்ட மொறுமொறுத் தென்செயும்
நின்று நெஞ்சம துள்சுட நின்றது
அன்று தேவி யலைப்ப வழிந்துயிர்
சென்ற தம்மயி டத்தொடு செல்கதி.


எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்


217மற்றம் மாநகரத்து மருங்கினில்
சிற்றில் பல்சனஞ் சேர்புறச் சேரியின்
உற்று வாரணப் புள்ளுரு வாயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.


218கண்டு மன்னவன் கண்களி கொண்டனன்
சண்ட கன்மியைத் தந்த வளர்க்கெனக்
கொண்டு போயவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர்வினை வல்லவு மாயவே.


219தரள மாகிய நயனத்தொ டஞ்சிறை சாபம்போற் சவியன்ன
மருள மாசனம் வளர்விழி சுடர்சிகை மணிமுடி தனையொத்த
வொளிரு பொன்னுகிர்ச் சரணங்கள் வயிரமு ளொப்பிலபோ
தளர்வில் வீரியந்தகைபெற வளரந்தன தமக்கிணையவைதாமே.



நான்காஞ் சருக்கம்


220செந்தளிர் புதைந்த சோலைத் திருமணி வண்டுந் தேனுங்
கொந்துகள் குடைந்து கூவுங் குயிலொடு குழுமி யார்ப்பச
செந்துண ரளைந்து தென்றற் றிசைதிசை சென்று வீச
வந்துள மகிழ்ந்த தெங்கும் வளர்மதுப் பருவ மாதோ.


221இணர்ததை பொழிலி னுள்ளா லிசோமதி யென்னுமன்னன்
வணர்ததை குழலி புட்பா வலியெனுந் துணைவி யோடு
வணர்ததை வல்லி புல்லி வளரிளம் பிண்டி வண்டா£¢
இணர்ததை தவிசி னேறி யினிதினி னமர்ந்தி ருந்தான்.


222பாடக மிலங்கு செங்கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொற்
சூடக மணிமென் றோளிற் றொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளி ராடு நாடக நயந்து நல்லார்
பாடலி னமிர்த வூறல் பருகினன் மகிழ்ந்தி ருந்தான்.


223வளையவர் சூழ லுள்ளான் மனமகிழ்ந் திருப்ப மன்னன்
தளையவிழ் தொடையன் மார்பன் சண்டமுற் கருமன்போகி
வளமலர் வனத்துள் தீய மனிதரோ டனைய சாதி
களைபவன் கடவுட் கண்ணிற் கண்டுகை தொழுது நின்றான்


224அருவினை முனைகொ லாற்ற லகம்பன னென்னு நாமத்
தொருமுனி தனிய னாகி யொருசிறை யிருந்த முன்னர்த்
தருமுதல் யோகு கொண்டு தன்னள விறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டி ருந்தான்.


225வடிலநுனைப் பகழி யானு மலரடி வணங்கி வாழ்த்தி
அடிகணீ ரடங்கி மெய்யி ருள்புரி மனத்தி ராகி
நெடிதுட னிருந்து நெஞ்சி னினைவதோர் நினைவு தன்னான்
முடிபொருடானு மென்கொல் மொழிந்தருள் செய்கவென்றான்.


226ஆரருள் புரிந்த நெஞ்சி னம்முனி யவனை நோக்கிச்
சீரருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலுமென்றே
பேரறி வாகித் தம்மிற் பிறழ்விலா வுயிரை யன்றே
கூரறி வுடைய நீரார் குறிப்பது மனத்தி னாலே.


227அனந்தமா மறிவு காட்சி யருவலி போக மாதி
நினைந்தவெண் குணங்க ளோடு நிருமல நித்த மாகிச்
சினஞ்செறு வாதி யின்றித் திரிவித வுலகத் துச்சி
அனந்தகா லத்து நிற்ற லப்பொருட்டன்மை யென்றான்.


228கருமனு மிறைவ கேளாய் களவுசெய் தோர்க டம்மை
இருபிள வாகச் செய்வ னெம்மர சருளி னாலே
ஒருவழி யாலுஞ் சீவ னுண்டெனக் கண்ட தில்லை
பெரியதோர் சோரன் றன்னைப் பின்னமாய்ச் சேதித் திட்டும்.


229மற்றொரு கள்வன் றன்னை வதைசெய்யு முன்னும் பின்னும்
இற்றென நிறைசெய் திட்டு மிறைவனே பேதங் காணேன்
உற்றதோர் குழியின் மூடி யொருவனைச் சிலநாள் வைத்தும்
மற்றவ னுயிர்போ யிட்ட வழியொன்றுங் கண்டி லேனே.


முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.


230பையவே காட்டந் தன்னைப் பலபின்னஞ் செய்திட் டன்று
வெய்யெரி கண்ட துண்டோ விறகொடு விற்கை யூன்ற
ஐயென வங்கி தோன்றி யதனையு மெரிக்க லுற்ற
திவ்வகைக் காண லாகு மென்றுநீ யுணரத்ல் வேண்டும்.


இதுவும் அது


231சிக்கென வாயு வேற்றித் தித்திவாய் செம்மித் தூக்கிப்
புக்கவவ் வாயு நீங்கிப் போயபின் நிறைசெய் தாலும்
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.


232இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர்
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ ரறிவ தாகும்.


233ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது கண்டீர்
ஏகசித் தத்த ராய விறைவர்கட் கௌ¤து போலும்
போகசித் தத்தோ டொன்றிப் பொறிவழிப் படரு நீரார்க்
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள வென்றான்.


234அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.


235உறுபொரு ணிலைமை தன்னை யுற்றுணர் வறிவ தாகும்
அறிபொரு ளதனிற் றூய்மை யகத்தெழு தௌ¤வு காட்சி
நறுமலர்ப் பிண்டி நாதன் நல்லறப் பெருமை தன்மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டா யிதனது பிரிவு மென்றான்.


236பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்ம னைக்கண்
தெரிவிலாச் செலவும் சிந்தை பொருள்வயிற் றிருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதமிவை யைந்தோ டொன்றி
ஒருவின புலைசு தேன்கள் ஒழுகுத லொழுக்க மென்றான்.


237கொலையின் தின்மை கூறிற் குவலயத் திறைமை செய்யும்
மலைதலில் வாய்மை யார்க்கு வாய்மொழி மதிப்பை யாக்கும்
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதலில் பெருமை திட்ப முறுவலி யொழிந்த தீயும்.


238தெருளுடை மனத்திற் சென்ற தௌ¤ந்துணர் வாய செல்வம்
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும் புலைசு தேன்கள்.
ஒருவிய பயனு மஃதே யொளியினோ டழகு வென்றி
பொருள்மிகு குலனோ டின்பம் யுணர்தலு மாகு மாதோ.


239சிலைபயில் வயிரத் தோளாய் செப்பிய பொருளி தெல்லாம்
உலைதலில் மகிழ்வோ டுள்ளத் துணர்ந்தனை கொள்கவென்னக்
கொலையி¢னி லொருவலின்றிக் கொண்டனெனருளிற்றெல்லாம்
அலைசெய்வ தொழியின் வாழ்க்கை யழியுமற் றடிகளென்றான்.


முனிவரர் மீண்டும் கூறல்


240ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக கண்ணால்
ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந துய்ய நிற்றல்
வாரியின் வதங்கட் கெல்லா மரசமா வதமி5 தற்கே
சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான்.


241இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.


242நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம்.


243இன்னுமீ தைய கேட்க இசோமதி தந்தை யாய
மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்
பின்னவர் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ.


244வீங்கிய வினைக டம்மால் வெருவரத் தக்க துன்பந்
தாங்கினர் பிறந்தி றந்து தளர்ந்தனர் விலங்கிற் செல்வார்
ஆங்கவர் தாங்கள் கண்டாய் அருவினை துரப்ப வந்தார்
ஈங்குநின் அயலக் கூட்டி லிருந்த கோழிகளு மென்றான்.


245உயிரவ ணில்லை யேனு முயிர்க்கொலை நினைப்பி னாலிம்
மயரிகள் பிறவி தோறும் வருந்திய வருத்தங் கண்டால்
உயிரினி லருளொன் றின்றி யுவந்தனர் கொன்று சென்றார்
செயிர்தரு நரகி னல்லாற் செல்லிட மில்லை யென்றான்.


246மற்றவ னினைய கூற மனநனி கலங்கி வாடிச்
செற்றமுஞ் சினமு நீக்கித் திருவறத் தௌ¤வு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன வனைத்துங் கொண்டு
பெற்றன னடிக ணுமமாற் பெரும்பய னென்று போந்தான்.


247கேட்டலு மடிகள் வாயிற் கெழுமிய மொழிக டம்மைக்
கூட்டினு ளிருந்த மற்றக் கோழிகள் பிறப்பு ணர்ந்திட்
டோட்டிய சினத்த வாகி யுறுவத முய்ந்து கொண்ட
பாட்டருந் தன்மைக் தன்றே பான்மையின் பரிசு தானும்.


248பிறவிக ளனைத்து நெஞ்சிற் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றின் மறுகினம் மறுகு சென்றே
அறவிய லடிக டம்மா லறவமிர் தாரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெந்நோய் பிழைத்தன மென்ற வன்றே.


249அறிவரன் சரண மூழ்கி யறத்தெழு விருப்ப முள்ளாக்
குறைவில வமுதங் கொண்டு குளிர்ந்தக மகிழ்ந்து கூவச்
செறிபொழி லதனுட் சென்று செவியினு ளிசைப்ப மன்னன்
முறுவல்கொண் முகத்து நல்லார்முகத்தொருசிலைவளைத்தான்.


250சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன் விடுத்தலோடும¢
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய தடுத்து வீழச்
சில்லறி வினக ளேனுந் திருவறப் பெருமை யாலே¢
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய வன்றே.


251விரைசெறி பொழிலி னுள்ளால வேனிலின் விளைந்த வெல்
அரைசனு மமர்ந்து போகி யகநகர்க் கோயி லெய்தி (லாம்
முரைசொலி கழுமப் புக்கு மொய்ம்மலர்க் குழலி னாரோ
டுரைசெய லரிய வண்ண முவகையின் மூழ்கி னானே.


252இன்னண மரசச் செல்வத் திசோமதி செல்லு நாளுள்
பொன்னிய லணிகொள் புட்பா வலியெனும் பொங்கு கொங்
இன்னிய லிரட்டையாகு மிளையரை யீன்று சின்னாள்
பின்னுமோர் சிறுவன் றன்னைப் பெற்றனள் பேதை தானே.


253அன்னவர் தம்முள் முன்னோ னபயமுன் னுருசி தங்கை
அன்னமென் னடையி னாளு மபயமுன் மதியென் பாளாம்
பின்னவர் வளரு நாளுட் பிறந்தவ னிறங்கொள் பைந்தார்
இன்னிளங் குமரனாம மிசோதர னென்ப தாகும்.


254பரிமிசைப் படைப யின்றும் பார்மிசைத் தேர்க டாயும்
வரிசையிற்கரிமேற்கொண்டும் வாட்டொழில்பயின்று மன்னர்க்
குரியவத் தொழில்க ளோடு கலைகளின் செலவை யோர்ந்தும்
அரசிளங் குமரன் செல்நா ளடுத்தது கூற லுற்றேன்.


255நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.


256இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு¢ மியற்கைச்
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
பதத்தயன் மதக்களி றெனப்படிம நிற்பக்
கதத்துட னிழித்தடு கடத்திடை மடுத்தான்


257கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.


258கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன் விடுத்தான்
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.


259அறப்பெருமை செய்தரு டவப்பெருமை தன்னால்
உறப்புணர்த லஞ்சியொரு விற்கணவை நிற்பக்
கறுப்புடை மனத்தெழு கதத்தரச னையோ
மறப்படை விடக்கருதி வாளுருவு கின்றான்.


இதுமுதல் நான்கு கவிகளின் வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்


260காளைதகு கல்யாண மித்திர னெனும்பேர்
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன்
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான்.


261வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.


262ஆகவெனி னாகுமிவ ரழிகவெனி னழிப
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.


263அடைந்தவர்கள் காதலினொ டமரரச ராவர்
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.


264இந்திரர்கள் வந்தடிபணிந்தருளு கெனினும்
நிந்தையுடன் வெந்துயர்க ணின்னனர்கள் செயினும்
தந்தம்வினை யென்றுநமர் பிறரெனவு நினையார்
அந்தர மிகந்தருள் தவத்தரசர் தாரோய்.


265இவ்வுலகி னெவ்வுயிரு மெம்முயிரி னேரென்
றவ்விய மகன்றருள்சு ரந்துயிர் வளர்க்குஞ்
செவ்விமையி னின்றவர்தி ருந்தடி பணிந்துன்¢
வெவ்வினை கடந்துயிர் விளங்கு விறல்வேலோய்.


266என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.


267இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட
சி¢ங்கமிவ னென்றுதௌ¤ தேர்ந்துணரின் வேந்தே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;