கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 28 மே, 2012

நீலகேசி-22

98உண்ண வாவ நீரெனக்
கண்ண வாவ வாபவர்
நண்ண லாவ வல்லதே
ரெண்ண லாவ தில்லையே.


99கரிவ கன்றி நின்றகம்
பொரிவ பொங்கி வீழ்ந்தழைத்
தெரிவ வின்ன மாதுயர்
பரிப வரு மில்லையே.


100அங்கு வெங்க னலினுட்
டங்கி யுந்த லைத்தலை
பொங்கி யும்பு கைபுக
நுங்கி யுந்நு கர்வவே.


101ஓச னைய பல்லுயிர்
வீவி னையு றவருங்
காய்சி னக்க டுவிடம்
பேசி னார்க்க ருளுணா.


102ஓச னைய பல்லுயிர்
வீவி னையு றவருங்
காய்சி னக்க டுவிடம்
பேசி னார்க்க ருளுணா.


103நலங்களில் பிறவியு ணஞ்சுணா ரகர்கள்பின்
விலங்கின்வே தனைகளும் விரிக்கல்வேண் டும்மெனிற்
கலங்கியொன் றொன்றினைக் கண்டுகாற் றென்னப்போ
மலங்கிநின் றும்மனம் மன்னுமஞ் சுங்களே.


104தண்ணென்மா மழையினாற் றாமழிந் துழல்பவும்
புண்ணினா லழியமெய்ப் போரிடைப் புகுத்தவு
முண்ணல்கா ரணத்தினா லோட்டியிட் டொறுக்கவு
மெண்ணில்பல் வலையினு மிழக்குமவ் வுயிர்களே


105வேதவா தியர்கடம் வேள்விவாய விட்டவும்
பூததே வர்கட்கெனாப் புல்லியோர்கள் கொல்லவு
மோதுநோய் மருந்தெனவ் வூட்டுதற் குரைப்பவும்
சாதலால் வரும்மிடர் தாமெனைப் பலவுமே.


106நடுக்கமுறு நாற்கதியு ணரர்கள்படுந் துன்ப
மெடுக்கிலவை தாமிரண்டு பாகினவு மாகு
மடக்கமிலர்க் காவனவு மன்றிப்பொது வென்றும்
வடுப்பிளவு வாட்பகழி வாட்டியவொண் கண்ணாய்.


107தீவினைசெய் வாயிலொடு செற்றமனக் குற்ற
மாவினையி னாம்வெகுளி மானமொடு மாய
மோவினையிற் பற்றவல மச்சமொடு மற்று
மாவனவெ லாமடக்க மில்லவர்த நோவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;