98 | உண்ண வாவ நீரெனக் கண்ண வாவ வாபவர் நண்ண லாவ வல்லதே ரெண்ண லாவ தில்லையே. |
99 | கரிவ கன்றி நின்றகம் பொரிவ பொங்கி வீழ்ந்தழைத் தெரிவ வின்ன மாதுயர் பரிப வரு மில்லையே. |
100 | அங்கு வெங்க னலினுட் டங்கி யுந்த லைத்தலை பொங்கி யும்பு கைபுக நுங்கி யுந்நு கர்வவே. |
101 | ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா. |
102 | ஓச னைய பல்லுயிர் வீவி னையு றவருங் காய்சி னக்க டுவிடம் பேசி னார்க்க ருளுணா. |
103 | நலங்களில் பிறவியு ணஞ்சுணா ரகர்கள்பின் விலங்கின்வே தனைகளும் விரிக்கல்வேண் டும்மெனிற் கலங்கியொன் றொன்றினைக் கண்டுகாற் றென்னப்போ மலங்கிநின் றும்மனம் மன்னுமஞ் சுங்களே. |
104 | தண்ணென்மா மழையினாற் றாமழிந் துழல்பவும் புண்ணினா லழியமெய்ப் போரிடைப் புகுத்தவு முண்ணல்கா ரணத்தினா லோட்டியிட் டொறுக்கவு மெண்ணில்பல் வலையினு மிழக்குமவ் வுயிர்களே |
105 | வேதவா தியர்கடம் வேள்விவாய விட்டவும் பூததே வர்கட்கெனாப் புல்லியோர்கள் கொல்லவு மோதுநோய் மருந்தெனவ் வூட்டுதற் குரைப்பவும் சாதலால் வரும்மிடர் தாமெனைப் பலவுமே. |
106 | நடுக்கமுறு நாற்கதியு ணரர்கள்படுந் துன்ப மெடுக்கிலவை தாமிரண்டு பாகினவு மாகு மடக்கமிலர்க் காவனவு மன்றிப்பொது வென்றும் வடுப்பிளவு வாட்பகழி வாட்டியவொண் கண்ணாய். |
107 | தீவினைசெய் வாயிலொடு செற்றமனக் குற்ற மாவினையி னாம்வெகுளி மானமொடு மாய மோவினையிற் பற்றவல மச்சமொடு மற்று மாவனவெ லாமடக்க மில்லவர்த நோவே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.