கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 மே, 2012

யசோதர காவியம் 18

இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தெரிவிக்கின்றான்

268 
மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.

269 
நாடுநக ரங்களும் நலங்கொள்மட வாரும்
ஆடுகொடி யானையதிர் தேர்புரவி காலாள்
சூடுமுடி மாலைகுழை தோள்வளையொ டாரம்
ஆடைமுத லாயினவொ டகல்கவென விட்டான்.

270 
வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்
தானவரும் வந்துதொழு தவவுருவு கொண்டான்
ஊனமன மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்
கானமலை நாடுகள்க லந்துதிரி கின்றான்.

271 
யானுமல தெனதுமல திதமுமல தென்று
மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே
ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.

272 
ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக்
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய்
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய்.

273 
என்றவ னுளங்கொள வியம்பின னியம்பச்
சென்றுதிரு வடிமலர்கள் சென்னிமிசை யணியா
இன்றெனது பிழைதணிய வென்றலை யரிந்து
நின்றமுனி சரணிலிட லென்றுநினை கின்றான்.

274 
இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.

275
முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந்
துன்னுயிரின் முன்னிது துணிந்தபிழை தூரப்
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.

276 
மன்னவன் மனத்ததை விரித்தருள் வளர்க்குஞ்
சொன்னவில் சுதத்தமுனி தொன்மல ரடிக்கட்
சென்னிமுடி துன்னுமலர் சென்றுற வணங்கிப்
பன்னியரு ளிறைவவெமர் பவமுழுது மென்றான்.

277 
ஆங்குமுனி யவதியி னறிந்தபொரு ளதனை
வாங்கியவ னுணரும்வகை வைத்தருள் செய்கின்றான்
ஈங்குமு னியற்றிய தவத்தினி லசோகன்
ஓங்குபுக ழமருலக மொன்றினு ளுவந்தான்.

சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்

278 
அருமணியி னொளிதிகழு மமரனவ னாகிப்
பிரமனுல கதனுண்மிகை பெறுகடல்கள் பத்துந்¢
திருமணிய துணைமுலைய தெய்வமட வாரோடு
அருமையில் னகமகிழ்வின் மருவுமன் மாதோ.

279 
வஞ்சனையி லன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும்வகை சூழ்ந்துதொழு நோய்முழுது மாகி
அஞ்சின் மொழி யமிர்தமதி யருநரகின் வீழ்ந்தாள்
நஞ்சனைய வினைநலிய நாமநகை வேலோய்.

280 
இருளினிரு ளிருள்புகையொ டளறுமணல் பரலின்
மருள்செயுரு வினபொருளின் வருபெயரு மவையே
வெருள்செய்வினை தருதுயரம் விளையுநில மிசையத்¢
தெருளினெழு வகைநரக குழிகளிவை தாரோய்.

281 
மேருகிரி யுய்த்திடினும் வெப்பமொடு தட்பம்
நீரெனவு ருக்கிடுநி லப்புரைய வைந்தாம்
ஓரினுறு புகைநரகி னுருகியுடன் வீழ்ந்தா
ளாருமில ளறனுமில ளமிர்தமதி யவளே.

282 
ஆழ்ந்தகுழி வீழ்ந்தபொழு தருநரக ரோடிச்
சூழ்ந்துதுகை யாவெரியு ளிட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண்பெருக வன்றறிபு டைத்தார்
மூழ்ந்தவினை முனியுமெனின் முனியலரு முளரோ.

283 
செந்தழலின் வெந்தசைக டின்றனைமு னென்றே
கொந்தழலின் வெந்¢துகொது கொதுகென வுருகுஞ்
செந்தழலி னிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.

284 
கருகருக ரிந்தன னுருவி னொரு பாவை
பெரு கெரியி னிட்டுருகு மிதுவுமினி தேயென்
றருகணைய நுந்துதலு மலறியது தழுவி
பொருபொருபொ ரிந்துபொடி யாமுடல மெல்லாம்.

285 
நாவழுகி வீழமுது நஞ்சுண மடுத்தார
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ
சாவவரி திவணரசி தகவில்வினை தருநோ
யாவும்விளை நிலமதனி னினியவுள வாமோ.

286 
முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்
கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே
தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்
தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.

287 
திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.

288
ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும
பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.

289 
தொல்லைவினை நின்று சுடுகின்றநர கத்துள்
அல்லலிவை யல்லனவு மமிழ்தமதி யுறுவ
வெல்லையில விதுவிதென வெண்ணியெரு நாவிற்
சொல்லவுலவா வொழிக சுடருநெடு முடியோய்.

290 
எண்ணமி லிசோதரனொ டன்னையிவர் முன்னாள்
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை யாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர் தொடர்ந்த
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய்.

291 
மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின மீனாய்
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான்.

292
சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத மருவி
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள்.

293 
இதுநுமர்கள் பவம்வினை கள் விளையுமியல் பிதுவென்
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
விதுவிதுவி திர்த்தக நெகிழ்ந்துமிகை சோரா
மதுமலர்கொள் மணிமுடிய மன்னவன் மருண்டான்.

294 
ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.

295
தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.

296 
எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும
வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும் [கேனோ.
வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.

297 
அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ
அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.

298 
மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல்
காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.

299 
அறிவில ராய காலத் தமைவில செய்த வெல்லாம்
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.

300 
அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய நல்கிப்
பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்¢
டிருள்புரி வினைகள்சேரா விறைவன தறத்தையெய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்.

301 
என்றலு மடிகள் பாதத் தெழின்முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைக டீரக் கருணையி னுருகி நெஞ்சிற்
சென்றன னறிவு காட்சி திருவறத் தொருவ னானான்
வென்றவர் சரண டைந்ததார் விளைப்பதுவென்றியன்றோ.

302 
வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்

303 
ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ் வணிகள் றன்னை
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய நீயும்
நேரெனக் கிறைவ னாக நினைவலென் றினிய கூறிப்
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான்.

304 
மணிமுடி மகனுக் கீந்து மன்னவன் றன்னோ டேனை
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த் துணைவ னாய
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை வாழ்த்தித்
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு முருவங்கொண்டார்.

305 
தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்
காதலன் குமரன் றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.

306 
மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே.

307 
வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.

308 
ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ மமர்ந்து செய்மின
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா சய்யமத்தின்
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு துய்மி னென்றான்
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி யொழுகு கின்றார்.

309 
அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற்
கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்
அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான்.

310 
அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ னிசோ மதிக்குத
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர் சரியை போமின்
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக ரத்து வந்தார்
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச வென்றான்.

311 
இணையது பிறவி மாலை யெமரது மெமது மெண்ணின்
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த முறைமைதானும்
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின்
இனையது பெருமை தானு மிறைவன தறத்த தென்றான்.

312 
செய்த வெந்தியக் கொலையொரு துகள்தனில் சென்றுறு பவந்
எய்து மாயிடிற் றீர்ந்திடாக் கொலையிஃ திருநில முடிவேந்தே
மையல் கொண்டிவண்மன்னுயிரெனைப்பலவதைசெயவருபாவ
தெய்தும் வெந்துய ரெப்படித் தென்றுளைந் திரங்குகின்

313 
ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்
தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே
பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன்
மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.

314 
இன்சொல் மாதரு மிளங்கிளைச் சுற்றமு
    மெரித்திர ளெனவஞ்சிப்
    பொன்செய் மாமுடிப் புதல்வருட் புட்பதந்
    தற்கிது பொறையென்றே
    மின்செய் தாரவன் வெறுத்தன னரசியல்
    விடுத்தவ ருடன்போகி
    முன்சொன் மாமலர்ப் பொழிலினுண் முனிவரற்
    றெழுதுநன் முனியானான்.

315 
வெய்ய தீவினை வெருவுறு மாதவம
    விதியினின் றுதிகொண்டான்
    ஐய தாமதி சயமுற வடங்கின
    னுடம்பினை யிவணிட்டே
    மையல் வானிடை யனசனர் குழாங்களுள்
    வானவன் றானாகித்
    தொய்யின் மாமுலைச் சுரவரர் மகளிர்தம்
    தொகுதியின் மகிழ்வுற்றான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;