108 | இழுக்கலுறு தீக்கதியி லுய்க்குமென வெண்ணார் விழுக்குலங்கள் மாசுபடு மென்பதனை வேண்டார் புழுக்குலங்க ளானிறைத்த போர்வையென வோரா ரழுக்குடம்பிற் கேகெடுவ ராடவர்க ளந்தோ. |
109 | மதுவொன்றுங் கோதை மலரன்ன கண்ணாய் பொதுவென்ற நோயும் புணர்ந்திரண்டு பாகா மிதுவொன் றிடையூ றிரண்டாய் விரியு மதுவன்றி மெய்ப்பிணியு மூன்றா யலரும். |
110 | பெடையூடு சாயற் பிணையன்ன நோக்கி யிடையூ றிரண்டு மினியாவை யென்னி னடையா வுயிரதுவு மல்லதுவு மன்ன நடையாய் முதலதுவு நாற்பூத மாமே. |
111 | பெருமழையு நீரும் பெரிதெறியுங் காற்றுங் கருமலையுங் கல்லுங் கடுநவையு நஞ்சுஞ் செருமலையும் பல்படையுஞ் செந்தீயும் வந்திங் குருமிடியு மெல்லா முயிரல்ல வூறே. |
112 | செத்துவங்க டாக்கிச் செயிரி னணங்குதலும் மக்கள் பலவகையின் மன்னு மலைகொலையுங் துக்கஞ்செய் பல்விலங்கிற் றோன்று மிடையூறு மொக்கவிவை மூன்று முயிருடைய வூறே. |
113 | தீர்வனவுந் தீராத் திறத்தனவுஞ் செய்ம்மருந்தி னூர்வனவும் போலா துவசமத்தி னுய்ப்பனவும் யார்வினவுங் காலு மவைமூன்று கூற்றவா நேர்வனவே யாகு நிழறிகழும் பூணாய். |
114 | நல்லாய்நா ரின்றியே நாமுன் விரிசெய்த வெல்லா விமையோர்க்குமென்று மிறுதி சார்ந்த தல்லா லகன்றுன்ப மாகா நுமரன்றிப் பொல்லா தவர்களுறு மல்லைப் புகலுறுங்கால். |
115 | தீயே யெனவெவர்க்குஞ் செல்லல் பலவாக்கி வேயே புரைதோளாய் மிக்க விடமெங்கும் பேயே யெனப்பட்டுப் பேணா தனசெய்வர் நீயே யெனினல்லை நின்போல்வ ரன்றோ. |
116 | பேர்தற் கரும்பிணி தாமிவை யப்பிணி தீர்தற் குரியதிரி யோக மருந்திவை யோர்தற் றெளிவோ டொழுக்க மிவையுண்டார் பேர்த்த பிணியுட்பிற வார்பெரி தின்பமுற்றே. |
117 | மானொத்த நோக்கிமருந் தென்றவைமூன் றினுள்ளும் ஞானத்தி னன்மைநனி கேட்குவை யாயினக்கா லூனத்தை யின்றியுயி ராதிய வுள்பொருள்க டானற் குணர்தலிது வாமதன் றத்துவம்மே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.