திரிதரு மரபின் கோவலன் போல
இளிவாய் வண்டினொடு இன்இள வேனிலொடு மலய மாருதம் திரிதரு மறுகில், கருமுகில் சுமந்து குறுமுயல் ஒழித்துஆங்கு இருகருங் கயலொடு இடைக்குமிழ் எழுதி | 205 |
அங்கண் வானத்து அரவுப்பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டுகொல். நீர்வாய் திங்கள் நீள்நிலத்து அமுதின் சீர்வாய் துவலைத் திருநீர் மாந்தி மீன்ஏற்றுக் கொடியோன் மெய்பெற வளர்த்த | 210 |
வான வல்லி வருதலும் உண்டுகொல். இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத் திருமகள் புகுந்ததுஇச் செழும்பதி ஆம்என எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங் குவளையும் குமிழும் பூத்துஆங்கு | 215 |
உள்வரி கோலத்து உறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல். மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல்உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்துதன் அருந்தொழில் திரியாது | 220 |
நாண்உடைக் கோலத்து நகைமுகம் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவுயாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டுஎன, உருவி லாளன் ஒருபெருஞ் சேனை இகல்அமர் ஆட்டி எதிர்நின்று விலக்கிஅவர் | 225 |
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு உடன்உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் | 230 |
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் மருந்தும் தரும்கொல்இம் மாநில வரைப்புஎனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள்: உள்அகம் நறுந்தாது உறைப்பமீது அழிந்து | 235 |
கள்உக நடுங்கும் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உள்நிறை கரந்துஅகத்து ஒளித்துநீர் உகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன். | 240 |
6. கடலாடு காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக் கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன் தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள் | 5 |
இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக் கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட | 10 |
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும், அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத் தமரில் தந்து தகைசால் சிறப்பின் | 15 |
பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும், நாரதன் வீணை நயம்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய | 20 |
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவள்எனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும், | 25 |
துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே. அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச் சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் | 30 |
காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச் சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன் மாயோன் பாணியும் வருணப் பூதர் | 35 |
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச் சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப் பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட | 40 |
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும், தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும், | 45 |
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண் நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற | 50 |
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும், படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக் குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும், வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும், | 55 |
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடி ஆடலும், காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும், செருவெம் கோலம் அவுணர் நீங்கத் | 60 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.