திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள் அயிராணி மடந்தை ஆடிய கடையமும், அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின் நிலையும் படிதமும் நீங்கா மரபின் | 65 |
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும் விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய். தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய மாதவி மரபின் மாதவி இவள்எனக் காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய | 70 |
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும், அந்தரத்து உள்ளோர் அறியா மரபின் வந்துகாண் குறுஉம் வானவன் விழவும் ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப் | 75 |
பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத்து இருவகை ஓமா லிகையினும் ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம் நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி, புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை | 80 |
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி, அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப், பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, | 85 |
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து, பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ் நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ, காமர் கண்டிகை தன்னொடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து, | 90 |
மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை பரியகம் வால்வளை பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து, வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம் | 95 |
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து, சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, | 100 |
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு இந்திர நீலத்து இடைஇடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை அங்காது அகவயின் அழகுற அணிந்து, | 105 |
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து, கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப் பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள், | 110 |
உருகெழு மூதுர் உவவுத்தலை வந்தெனப் பெருநீர் போகும் இரியல் மாக்களொடு மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி, பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப | 115 |
வைகறை யாமம் வாரணம் காட்ட வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத் தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து வான வண்கையன் அத்திரி ஏற மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக் | 120 |
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின் மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப | 125 |
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து மகர வாரி வளம்தந்து ஓங்கிய நகர வீதி நடுவண் போகிக் கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள் | 130 |
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில் கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும் மாலைச் சேரி மருங்குசென்று எய்தி, வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும், | 135 |
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும், காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும், கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும், நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும், இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும், | 140 |
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும், விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும், பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும், கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும் எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி | 145 |
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில் கடிப்பகை காணும் காட்சியது ஆகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றும் கைதை வேலி நெய்தல்அம் கானல் | 150 |
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும் வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும் | 155 |
பரத குமரரும் பல்வேறு ஆயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும் விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாள் போல | 160 |
புதன், 30 மே, 2012
சிலப்பதிகாரம்-19
லேபிள்கள்:
சிலப்பதிகாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.