வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப, | 165 |
கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச் சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர் புன்னை நீழல் புதுமணல் பரப்பில் ஓவிய எழினி சூழஉடன் போக்கி விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை | 170 |
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.
(வெண்பா)
வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக் களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெங்கதிரோன் தேர். |
7. கானல் வரி
சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப் பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவுதீர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஓர்த்(து) ஏவலன், பின் பாணி யாதுஎனக் கோவலன் கையாழ் நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன். | 1 |
வேறு (ஆற்று வரி)
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. | 2 |
மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய். மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி. | 3 |
உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி. விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி. | 4 |
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல்தெய்வம் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று ஏழையம்யாங்கு அறிகோம் ஐய விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம்என்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல் பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர். | 5 |
காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாம்இரப்ப நிற்பதையாங்கு அறிகோம் ஐய மாதரார் கண்ணும் மதிநிழல்நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப் போதும் அறியாது வண்டுஊச லாடும் புகாரே எம்மூர். | 6 |
மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதுஅழிப்ப மாழ்கி ஐய கோதை பரிந்துஅசைய மெல்விரலால் கொண்டுஓச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர். | 7 |
வேறு (முகம் இல் வரி)
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத தோற்றம் மாய்வான் பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது போர்க்கும் கானல் நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும். | 8 |
(கானல் வரி)
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் தலைக்கீடு ஆகக் கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர் அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. | 9 |
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம் கொண்டு வேறுஓர் கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ. | 10 |
வேறு (நிலைவரி)
கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர். திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. | 11 |
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர். கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே. | 12 |
புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர். அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல் பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே. | 13 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.