பாக்கு மரங்கள்
வேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப் பாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச் சேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப் போய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே | 126 |
மாடங்களும் மரங்களும்
காந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப் பாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய வாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப் போந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே. | 127 |
இன்பத்திடையே தென்றல்
மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில் பூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால் வாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய் வீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே | 128 |
பலவகை மரங்கள்
ஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும் தாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின மாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால் தேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே | 129 |
இன்ப துன்பம்
தெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில் பெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம் எவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால் கவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே | 130 |
சுவலனசடி
மற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன் அற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான் முற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப் பெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார் | 131 |
சுவலனசடியின் பெருமை
இங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல் வெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான் கொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய் அங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான் | 132 |
கல்விநலம் முதலியன
விச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின் றிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக் கச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான் வெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான் | 133 |
அம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு
வெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள் குற்ற மாயதொன் றுண்டு குணங்களா லற்ற கீழுயிர் மேலரு ளாமையே | 134 |
அவ்வரசன் ஆட்சியில் நடுங்கியன
செம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை வெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம் நம்பி யாள்கின்ற நாளி னடுங்கின கம்ப மாடக் கதலிகை போதுமே | 135 |
ஆடவர் மேல் வளைந்த வில்
மின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார் துன்னு தொன்முடி யானொளி சென்றநாள் மன்னு மாடவர் மேல்வளைந் திட்டன பொன்னு னார்புரு வச்சிலை போலுமே | 136 |
உண்ணாத வாய்கள்
வெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை எண்ணி லாப்புக ழானினி தாண்டநா ளுண்ணி லாப்பல வாயுள வாயின கண்ண னாரொடு காமக்க லங்களே | 137 |
அந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்
மாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல் நோக்கி வைக நுனித்தவ னாண்டநாள் தாக்க ணங்கனை யார் தம தாயரால் வீக்கப் பட்டன மென்முலை விம்முமே | 138 |
கடியவையுங் கொடியவையும்
வடிய வாளவ னாளவும் வாய்களில் கடிய வாயின கள்ளவிழ் தேமல ரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க் கொடிய வாயின கொங்கவிழ் சோலையே | 139 |
அரசன் மனைவி வாயுவேகை
மாய மாயநின் றான்வரை மார்பிடை மேய பூமகள் போல விளங்கினாள் தூய வாமுறு வற்றுவர் வாயவள் வாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள் | 140 |
வாயுவேகையின் மேன்மை
பைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான் அம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம் செம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல் அம்பொற் பட்டுடை யாளணி யாயினான் | 141 |
இருவரின் இன்பநிலை
கோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள் காவி வாணெடுங் கண்ணியக் காவலற் காவி யாயணங் காயமிழ் தாயவன் மேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள் | 142 |
அருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்
முருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை யுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள் பெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல் அருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான் | 143 |
சுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்
நாம நள்லொளி வேனம்பி நங்கையா யேம நல்லுல கின்னிழிந் தந்நகைத் தாம மல்லிகை மாலைச் சயம்பவை காம வல்லியுங் காமுறத் தோன்றினாள் | 144 |
சுயம்பிரபையின் அழகுச் சிறப்பு
கங்கை நீரன ஞான்ற கதிரிளந் திங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான் மங்கை மார்பிறப் பும்மட மாதரிந் நங்கை யாற்றெழப் பாடு நவின்றதே | 145 |
முகம் , கண், புருவம், இடை ஆகியவை
வண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி கொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங் கெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை உண்டு கொல்லென வுண்டும ருங்குலே | 146 |
புருவங்கள் துவளுதல்
காதின் மீதணி கற்பகத் தொத்திணர் ஊது தேனிற கூன்றியி ருத்தொறும் போது தேர்முகத் தும்புரு வக்கொடி நோத லேகொல்நொ சிந்துள வாங்களே | 147 |
சுயம்பிரபையின் அழகு
விண்ண ணங்க விழித்துவி ளங்கொளி மண்ண ணங்குற வேவளர் வெய்திய பெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ கன்ன ணங்குறு காரிகை கண்டதே | 148 |
கொங்கு போதரு வான்குமிழ் கின்றன அங்க ராகம ணிந்ததை யன்றியும் நங்கை நாகரி கம்பொறை நாண்மதுத் தங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே | 149 |
வளருதல்
மங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி நங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல் மங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன் கொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.