கனவின் பயனை நிமித்திகன் கூறுதல்
மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ நன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான் | 101 |
தூதன் ஒருவன் வருவான் என்றல்
கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித் திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிகநா னேளு சென்றால் ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு புட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான் | 102 |
நிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்
என்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச் சென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம் ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும் பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார் | 103 |
அரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்
உரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட முரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான் | 104 |
வேறு - அரசன் பேசுதல்
கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும் மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும் கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த் தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான் | 105 |
அமைச்சர்கள் பேசுதல்
சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான் ஆழியங் கிழவனா யலரு மென்பது பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே | 106 |
திவிட்டன் சிறந்தவனே என்றல்
நற்றவ முடையனே நம்பி யென்றுபூண் விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக் கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார் | 107 |
வேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்
சங்க லேகையுஞ் சக்கர லேகையும் அங்கை யுள்ளன வையற் காதலால் சங்க பாணியான் சக்க ராயுதம் அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே | 108 |
வித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்
விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன் வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான் எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில் அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே | 109 |
பளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்
நாமினி மற்றவன் மொழிந்த நாளினால் தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம் தூமரு மாலையாய் துரும காந்தனைக் காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே | 110 |
அரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்
என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான் நன்றது பெரிதுமென் றருளி நாடொறும் சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல் இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான் | 111 |
துருமகாந்தன் பொழிலையடைதல்
எரிபடு விரிசுட ரிலங்கு பூணினான் திருவடி தொழுதுசெல் துரும காந்தனும் வரிபடு மதுகர முரல வார்சினைச் சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான் | 112 |
4.இரதநூபுரச் சருக்கம்
நுதலிப்புகுதல்
புரிசை நீண்மதிற் போதன மாநகர் அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல் உரையை யாமுரைப் பானுற நின்றதே | 113 |
வெள்ளிமலை
நிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண் டுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய் இலகு வின்மணி வானியன் மாடெலாம் விலக நின்றது விஞ்சையர் குன்றமே | 114 |
தேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்
தொக்க வானவர் சூழ்குழ லாரொடும் ஒக்க வாங்குள ராய்விளை யாடலால் உக்க சோதிகள் சோலையி னூடெலாம் செக்கர் வானக முஞ்சிறி தொக்குமே | 115 |
பொழிலில் தார் மணம்
அவிழுங் காதல ராயர மங்கையர் பவழ வாயமு தம்பரு கிக்களி தவழு மென்முலை புல்லத் ததைந்ததார் கமழு நின்றன கற்பகச் சோலையே | 116 |
பொழிலிற் குளிர்ச்சி
கிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம் வளரும் பூண்முலை யாரொடு வைகலால் துளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம் நளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே | 117 |
வாடையின் வருகை
மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப் பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித் தங்க ராகம ளாயர மங்கையர் கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே | 118 |
தழைப் படுக்கை
தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக் கான கத்தழை யின்கமழ் சேக்கை மேல் ஊன கத்தவர் போகமு வந்தரோ வான கத்தவர் வைகுவர் வைகலே | 119 |
பாறையில் மகரந்தப்பொடி
மஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய அஞ்சி லோதிய ராரள கப்பொடி பஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத் துஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே | 120 |
பாறையில் அடிக்குறி
மாத ரார்நடை கற்கிய வானிழிந் தாது வண்டுண வூழடி யூன்றிய பாத ராகம்ப தித்தப ளிக்கறை காத லார்தம கண்கவர் கின்றவே | 121 |
அருவிநீரில் மல்லிகை மணம்
ஆகு பொன்னறை மேலரு வித்திரள் நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா வேக மும்மத வெள்ளம ளாவிய போக மல்லிகை நாறும்பு னல்களே | 122 |
சேடி நாட்டின் சிறப்பு
பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில் காக்க ளாவன கற்பகச் சோலைகள் வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே லூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ | 123 |
இரதநூபுரச் சக்கரவாள நகரம்
வரையின் மேன்மதி கோடுற வைகிய திருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே லிரத நூபுரச் சக்கர வாளமென் றுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே | 124 |
வேறு -- வாழையின் மாண்பு
அம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க் கொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப் பைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால் வம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே | 125 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.