155 | மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர் நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப் பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப் புற்ற தாகு முரைக்குறு கின்றதே. |
157 | அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன் வம்பு வாரண முட்டையின் வைத்துடன் கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென நம்பு காமர் புளிஞிகை நல்கினான். |
158 | சந்தி ரம்மதி யாகிய தாயவள் வந்து மாநக ரப்புறச் சேரிவாய முந்து செய்வினை யான்முளை வாளெயிற் றந்த மிக்க சுணங்கம் தாயினாள். |
159 | மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக் கியலு பாயன மென்று கொடுத்தனர் மயரி யாகு மிசோமதி மன்னவன இயலு மாளிகை யெய்தின வென்பவே. |
160 | மன்ன னாகிய மாமயின் மாளிகை தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத் தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண் டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே . |
161 | அஞ்சி லோதியர் தாமடி தைவரப் பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல் துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல். |
162 | சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத் தரைய மேகலை யாரி மைர்ந்துணும அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய இரைய வாவி யிருந்தயில் கின்றதே. |
163 | வந்து குப்பையின் மாசன முண்டபின் சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின் றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச் சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே |
164 | நல்வ தத்தொ டறத்திற நண்ணலார கொல்வ தற்குள முன்செய் கொடுமையான ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர் வெல்வ தற்கரி தால்வினை யின்பயன். |
165 | மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை முற்று வார்முலை யாண்முயங் குந்திறம மற்ற மாமயில் வந்தது கண்டதே. |
166 | அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின தப்பி லன்னது சாரன்றன் கண்களைக் குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே. |
167 | முத்த வாணகை யாண்முனி வுற்றனள் கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும் மத்த கத்தை மடுத்து மறித்தது தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே. |
168 | தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள் நாய்பின் னோடி நலிந்தது கவ்விய வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது தீமை செய்வினை செய்திற மின்னதே. |
169 | நாயின் வாயில் நடுங்கிய மாமயில் போய தின்னுயிர் பொன்றின மன்னவன் ஆயு மாறறி யாத விசோமதி நாயை யெற்றின னாய்பெய் பலகையால். |
யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்
170 | மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை இன்னல் செய்யுமோ ரேனம தாகிய தன்ன தாகு மருவினை யின்பயன்.. |
171 | சந்தி ரம்மதி நாயுமச் சாரலின் வந்து காரிருள் வண்ணத்த நாகமாய அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர் வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே. |
172 | தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற் சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர் பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே. |
மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்
173 | மன்னன் மாமயில் சூகரம் வார்புனல் இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள் உன்னு மொப்பி லுலோகித விப்பெயர் மன்னு மீனின் வடிவின தாயிற்றே. |
சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்
174 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் முந்து சன்று முதலைய தாயது¢ வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில். |
175 | அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள் வந்து வாயின் மடுத்தது கொண்டது¢ கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத் தந்த கொல்கென மன்னவன் சாற்றினான் |
176 | வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢ கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர் அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார். |
சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்
177 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்து வார்வலைப் பட்ட கராமரித தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய் வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே. |
178 | மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர் கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக் குற்ற செய்கைக் குரித்தென வோதினார். |
179 | அறுத்த மீனி னவயவ மொன்றினைக் கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன சிறக்க வென்றனர் தீவினை யாளரே. |
180 | நின்ற கண்டத்து நீளுயிர் போமது சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது தின்று தின்று துறக்கத் திருத்துதல் நன்று நன்றென நைந்திறந் திட்டதே |
மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்
181 | மன்னன் மாமயில் சூகர மாயமீன் முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே. |
தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.
182 | தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢ ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே. |
183 | தாய்வ யிற்கரு வுட்டக ராயது போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன தாயை வாளியிற் றானுயிர் போக்கினான். |
184 | வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத் தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென ஆளி மொய்ம்ப னருளின னென்பவே. |
யசோமதி பலியிடும் செய்தி கூறல்
185 | மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன் பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய் உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான் கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ. |
186 | இன்றெ றிந்த வெருமை யிதுதனைத் தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின் நன்றி தென்றன ரந்தணர் நல்கினார நின்று பின்சில நீதிகள் ஓதினார். |
187 | ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற் காது காகங் கவர்ந்தன வாமெனின் தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென ஓதி னாரினி யொன்றுள தென்றனர். |
188 | தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி சாத நல்ல தகர்முகத் துப்படின பூத மென்றனர் புண்ணிய நூல்களின் நாத னாரத் துராதிக ணன்றரோ. |
189 | என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன் நன்று நாமுன் வளர்க்க விடுத்தது சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின நன்றி தென்று நயந்தன ரந்தணர். |
190 | சென்று நல்லமிர் துண்டது தின்றனர் அன்று மன்ன னிசோதர னன்னையோ டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென நன்று சொல்லினர் நான்மறை யாளரே. |
இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்
191 | அத்த லத்தக ராங்கது கேட்டபின் ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன இத்த லத்திறை யான விசோமத மத்த யானையின் மன்னவ னென்மகன். |
192 | இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம் இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம் இதுவென் யானிவ ணின்னண மாயதே. |
193 | யான்ப டைத்த பொருட்குவை யாமிவை யான்வ ளர்த்த மதக்களி றாமிவை யான ளித்த குலப்பரி யாமிவை யான்வி ளைத்த வினைப்பய னின்னதே. |
194 | இவர்க ளென்கடைக் காவல ராயவர் இவர்க ளென்படை நாயக ராயவர் இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர் இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே. |
195 | என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத் தன்ன மென்னடை யாளமிர் தம்மதி மன்னு தன்மறை யானொருட வைகுமோ என்னை செய்தன ளோவிவ ணில்லையால். |
196 | அசைய தாகி யரும்பட ரொன்றிலா இசையி லாதன யானுற வித்தலைத் தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ் வசையின மன்னவன் வானுல குய்க்குமோ. |
197 | பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம் மேதி னிப்பதி யாதல் விடுத்தபின் யாது செய்தன னோவினை யேனிடை யாது செய்குவ னோவுண ரேனினி. |
சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்
198 | இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா வினையி னாகிய வெந்துயர் தந்திடத் தனையன் மாளிகை தன்னுள நோகமுன் சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே. |
199 | சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய் வந்தி டங்கரு மாகிய வாடது நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து வந்து மாயிட மாகி வளர்ந்ததே. |
200 | வணிகர் தம்முடன் மாமயி டம்மது பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள் அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல் வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே. |
201 | தூர பாரஞ் சுமந்த துயரது தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள் ஆர மூழ்குவ தம்மயி டங்கரை சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே. |
202 | வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால் அரைச வன்ன மெனும்பெய ராகும்நம் அரைச வாகன மாயது போயதென் றுரைசெய் தாரர சற்குழை யாளரே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.