கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 27 மே, 2012

யசோதர காவியம்-16

155மற்றம் மன்னன் மதிமதி யென்றிவர்
நற்ற வத்திறை நல்லறம் புல்லலாப்
பற்றி னோடு முடிந்தனர் பல்பிறப்
புற்ற தாகு முரைக்குறு கின்றதே.


157அம்பின் வாய்விழு மண்ட மெடுத்தவன்
வம்பு வாரண முட்டையின் வைத்துடன்
கொம்ப னாயிது கொண்டு வளர்க்கென
நம்பு காமர் புளிஞிகை நல்கினான்.


158சந்தி ரம்மதி யாகிய தாயவள்
வந்து மாநக ரப்புறச் சேரிவாய
முந்து செய்வினை யான்முளை வாளெயிற்
றந்த மிக்க சுணங்கம் தாயினாள்.


159மயிலு நாயும் வளர்ந்தபின் மன்னனுக்
கியலு பாயன மென்று கொடுத்தனர்
மயரி யாகு மிசோமதி மன்னவன
இயலு மாளிகை யெய்தின வென்பவே.


160மன்ன னாகிய மாமயின் மாளிகை
தன்னின் முன்னெழு வார்க்குமுன் தானெழாத்
தன்னை யஞ்சினர் தங்களைத் தான் வெருண்
டின்ன வாற்றின் வளர்ந்திடு கின்றதே .


161அஞ்சி லோதியர் தாமடி தைவரப்
பஞ்சி மெல்லணை பாவிய பள்ளிமேல்
துஞ்சு மன்னவன் மாமயிற் றோகையோ
டஞ்சி மெல்ல வசைந்தது பூமிமேல்.


162சுரைய பாலடி சிற்சுவை பொற்கலத்
தரைய மேகலை யாரி மைர்ந்துணும
அரையன் மாமயி லாய்ப்புறப் பள்ளிவாய
இரைய வாவி யிருந்தயில் கின்றதே.


163வந்து குப்பையின் மாசன முண்டபின்
சிந்து மெச்சில்கள் சென்று கவர்ந்துதின்
றந்து ளும் மக ழங்கணத் தூடுமாய்ச்
சந்தி ரம்மதி நாய்தளர் கின்றதே


164நல்வ தத்தொ டறத்திற நண்ணலார
கொல்வ தற்குள முன்செய் கொடுமையான
ஒல்வ தற்கரு மாதுய ருற்றனர்
வெல்வ தற்கரி தால்வினை யின்பயன்.


165மற்றொர் நாண்மணி மண்டபத் தின்புடை
யற்ற மாவிருந் தட்டபங் கன்றனை
முற்று வார்முலை யாண்முயங் குந்திறம
மற்ற மாமயில் வந்தது கண்டதே.


166அப்பி றப்பி லமர்ந்த தன் காதலி
ஒப்பில் செய்கை யுணர்ந்த துணர்ந்தபின
தப்பி லன்னது சாரன்றன் கண்களைக்
குப்பு றாமிசைக் குத்தி யழித்ததே.


167முத்த வாணகை யாண்முனி வுற்றனள்
கைத்த லத்தொரு கற்றிரள் வீசலும்
மத்த கத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.


168தாய்முன் னாகி யிறந்து பிறந்தவள்
நாய்பின் னோடி நலிந்தது கவ்விய
வாய்முன் மஞ்ஞை மடிந்துயிர் போயது
தீமை செய்வினை செய்திற மின்னதே.


169நாயின் வாயில் நடுங்கிய மாமயில்
போய தின்னுயிர் பொன்றின மன்னவன்
ஆயு மாறறி யாத விசோமதி
நாயை யெற்றின னாய்பெய் பலகையால்.


யசோதரனாகிய மயில் (2வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்


170மன்னன் மாமயில் வந்துவிந் தக்கிரி
துன்னுஞ் சூழலுட் சூழ்மயிர் முள்ளுடை
இன்னல் செய்யுமோ ரேனம தாகிய
தன்ன தாகு மருவினை யின்பயன்..


171சந்தி ரம்மதி நாயுமச் சாரலின்
வந்து காரிருள் வண்ணத்த நாகமாய
அந்தி லூர்தர வேர்த்துரு ளக்குடர்
வெந்தெ ழும்பசி விட்டது பன்றியே.


172தாய்கொல் பன்றி தளர்ந்தயர் போழ்தினிற்
சீய மொன்றெனச் சீறுளி யம்மெதிர்
பாய நொந்து பதைத்துடன் வீ¢ழ்ந்தரோ
போய தின்னுயிர் பொன்றுபு பன்றியே.


மன்னனாகிய முட்பன்றி (3வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்


173மன்னன் மாமயில் சூகரம் வார்புனல்
இன்னல் செய்யுஞ் சிருப்பிரை யாற்றினுள்
உன்னு மொப்பி லுலோகித விப்பெயர்
மன்னு மீனின் வடிவின தாயிற்றே.


சந்திரமதியாகிய நாகம் (3வது) முதலையாகப் பிறத்தல்


174சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
முந்து சன்று முதலைய தாயது¢
வெந்து வேர்த்தின மீனை விழுங்குவான
உந்தி யுந்தி யுளைந்திடு போழ்தினில்.


175அந்த ரத்தொரு கூனிநின் றாடுவாள்
வந்து வாயின் மடுத்தது கொண்டது¢
கொந்து வேய்குழற் கூனியைக் கொல்கராத்
தந்த கொல்கென மன்னவன் சாற்றினான்


176வலையின் வாழ்நரின் வாரிற் பிடித்தபின
சிலர்ச லாகை வெதுப்பிச் செறித்தனர்¢
கொலைவ லாளர் குறைத்தன ரீர்ந்தனர்
அலைசெய் தார்பலர் யாரவை கூறுவார்.


சந்திரமதியாகிய முதலை (4வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்


177சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்து வார்வலைப் பட்ட கராமரித
தந்தில் வாழ்புலை யாளர்தஞ் சேரிவாய்
வந்தொ ராட்டின் மடப்பிணை யாயதே.


178மற்றை மீனுமோர் வார்வலைப் பட்டதை
அற்ற மில்லரு ளந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின்குலத் தார்களுக்
குற்ற செய்கைக் குரித்தென வோதினார்.


179அறுத்த மீனி னவயவ மொன்றினைக்
கறித்தி சோமதி யிப்புவி காக்கவோர
இறப்ப ருந்துறக் கத்தி லிசோதரன
சிறக்க வென்றனர் தீவினை யாளரே.


180நின்ற கண்டத்து நீளுயிர் போமது
சென்ற தன்பிறப் போர்ந்து தௌ¤ந்தது
தின்று தின்று துறக்கத் திருத்துதல்
நன்று நன்றென நைந்திறந் திட்டதே


மன்னனாகிய லோகித மீன் (4வது) தகராய்ப் பிறத்தல்


181மன்னன் மாமயில் சூகர மாயமீன்
முன்னை யாட்டின் வயிற்றின் முடிந்ததோர
மன்ன மாணுரு வெய்தி வளர்ந்தபின
தன்னை யீன்றவத் தாய்மிசைத் தாழ்ந்ததே.


தகர் (5ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்.


182தாயி னன்னலந் தானுகர் போழ்தினில்¢
ஆய கோபத் தடர்த்தொரு வன்றகர
பாய வோடிப் பதைத்துயி¢ர் போயபின
தாய்வ யிற்றினில் தாதுவிற் சார்ந்ததே.


183தாய்வ யிற்கரு வுட்டக ராயது
போய்வ ளர்ந்துழிப் பூமுடி மன்னவன
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன
தாயை வாளியிற் றானுயிர் போக்கினான்.


184வாளி வாய்விழும் வன்றகர்க் குட்டியை
நீள நின்ற புலைக்குலத் தோன்றனைத்
தாள்வ ருத்தந் தவிர்த்து வளர்க்கென
ஆளி மொய்ம்ப னருளின னென்பவே.


யசோமதி பலியிடும் செய்தி கூறல்


185மற்றொர் நாண்மற மாதிற்கு மன்னவன்
பெற்றி யாற்பர விப்பெரு வேட்டைபோய்
உற்ற பல்லுயிர் கொன்றுவந் தெற்றினான்
கொற்ற மிக்கெரு மைப்பலி யொன்றரோ.


186இன்றெ றிந்த வெருமை யிதுதனைத்
தின்று தின்று சிராத்தஞ் செயப்பெறின்
நன்றி தென்றன ரந்தணர் நல்கினார
நின்று பின்சில நீதிகள் ஓதினார்.


187ஆத பத்தி லுலர்ந்ததை யாதலாற்
காது காகங் கவர்ந்தன வாமெனின்
தீது தாமுஞ் சிராத்தஞ் செயற்கென
ஓதி னாரினி யொன்றுள தென்றனர்.


188தீதி தென்ற பிசிதமுந் தேர்ந்துழி
சாத நல்ல தகர்முகத் துப்படின
பூத மென்றனர் புண்ணிய நூல்களின்
நாத னாரத் துராதிக ணன்றரோ.


189என்ற லும்மிணர் பெய்முடி மன்னவன்
நன்று நாமுன் வளர்க்க விடுத்தது
சென்று தம்மெனச் சென்றன ரொற்றர்பின
நன்றி தென்று நயந்தன ரந்தணர்.


190சென்று நல்லமிர் துண்டது தின்றனர்
அன்று மன்ன னிசோதர னன்னையோ
டொன்றி யும்ப ருலகினுள் வாழ்கென
நன்று சொல்லினர் நான்மறை யாளரே.


இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்


191அத்த லத்தக ராங்கது கேட்டபின்
ஒத்த தன்பிறப் புள்ளி யுளைந்துடன
இத்த லத்திறை யான விசோமத
மத்த யானையின் மன்னவ னென்மகன்.


192இதுவென் மாநக ருஞ்சயி னிப்பதி
இதுவென் மாளிகை யாமென் னுழைக்கலம்
இதுவெ லாமிவ ரென்னுழை யாளராம்
இதுவென் யானிவ ணின்னண மாயதே.


193யான்ப டைத்த பொருட்குவை யாமிவை
யான்வ ளர்த்த மதக்களி றாமிவை
யான ளித்த குலப்பரி யாமிவை
யான்வி ளைத்த வினைப்பய னின்னதே.


194இவர்க ளென்கடைக் காவல ராயவர்
இவர்க ளென்படை நாயக ராயவர்
இவர்க் ளென்னிசை பாடுந ராடுநர்
இவர்க ளும்மிவ ரென்பரி வாரமே.


195என்னை நஞ்சுபெய் தின்னண மாயிழைத்
தன்ன மென்னடை யாளமிர் தம்மதி
மன்னு தன்மறை யானொருட வைகுமோ
என்னை செய்தன ளோவிவ ணில்லையால்.


196அசைய தாகி யரும்பட ரொன்றிலா
இசையி லாதன யானுற வித்தலைத்
தசைதி னாளர்கள் தங்களி னென்னையிவ்
வசையின மன்னவன் வானுல குய்க்குமோ.


197பேதை மாதர்பெய் நஞ்சினி லெஞ்சியிம்
மேதி னிப்பதி யாதல் விடுத்தபின்
யாது செய்தன னோவினை யேனிடை
யாது செய்குவ னோவுண ரேனினி.


சந்திரமதியாகிய பெண்யாடு (5வது) எருமையாய்ப் பிறத்தல்


198இனைய வாகிய சிந்தைக ளெண்ணிலா
வினையி னாகிய வெந்துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன்னுள நோகமுன்
சினைகொண் டாடுயிர் சென்று பிறந்ததே.


199சந்தி ரம்மதி நாய்கரு நாகமாய்
வந்தி டங்கரு மாகிய வாடது
நந்து பல்பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிட மாகி வளர்ந்ததே.


200வணிகர் தம்முடன் மாமயி டம்மது
பணிவில் பண்டம் பரிந்துழல் கின்றநாள்
அணிகொ ளுஞ்சயி னிப்புறத் தாற்றயல்
வணிகர் வந்த மகிழ்ந்துவிட் டார்களே.


201தூர பாரஞ் சுமந்த துயரது
தீர வோடுஞ் சிருப்பிரை யாற்றினுள்
ஆர மூழ்குவ தம்மயி டங்கரை
சேரு மாவினைச் சென்றெறிந் திட்டதே.


202வரைசெய் தோண்மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச வன்ன மெனும்பெய ராகும்நம்
அரைச வாகன மாயது போயதென்
றுரைசெய் தாரர சற்குழை யாளரே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;