கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 27 மே, 2012

நாககுமார காவியம், -7 முடிவு

ஐந்தாம் சருக்கம்

நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு

145  நாவலந் தீவு தன்னுள் நன்குஅயிராவதத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோகப்புரத்துக்
காவிநன் விழிமாதர்க்குக் காமன்விக்கிரமராசன்
தாவில் சீர் வணிகன் நாமம் தனதத்தன் என்பது ஆமே.


146  மனைவிதன் தனதத்தைக்கு மகன்நாகதத்தன் ஆகும்
வனைமலர் மாலை வேலான் மற்றுஒரு வணிகன் தேவிப்
புனைமலர்க் கோதை நல்லாள் பொற்புடை வசுமதிக்கு
மனையின்நன்மகள்தன் நாமம் இயன்நாகவசுஎன் பாள்இம்.


147  நண்புறு நாகதத்தன் நாகநல்வசுஎன்பாளை
அன்புறு வேள்வி தன்னால் அவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நல்தவத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தார் இறைவன் ஆலையத்தின் உள்ளே.


148  நாகதத்தன்சென்று அந்த நன்முனி சரண்அடைந்து
வாகுநல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில்
ஏகநல் தினத்தின் நன்று இடர்பசி ஆயிற்று அன்றே.


149  தருமநல் தியானம் தன்னால் தன்னுடை மேனி விட்டு
மருவினான் அசோத மத்தின் வானவன் ஆகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந்து அமரனுக்கு
மருவிய தேவி ஆகி மயல்உறுகின்ற அன்றே.


150  அங்குஐந்து பல்ல மாயு அமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந்து அரசன் ஆனாய் இனிஅந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி ஆனாள் தவமுனி உரைப்பப் பின்னும்
எங்களுக்கு அந்த நோன்பு இனிதுவைத்து அருள என்றான்.

நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்

151  திங்கள் கார்த்திகையில் ஆதல் சேர்ந்தபங்குனியில் ஆதல்
பொங்குஅனல் ஆடி ஆதல் பூரண பக்கம் தன்னில்
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு
தங்கும்ஆண்டு ஐந்து நோற்றான் தான்ஐந்து திங்கள் அன்றே.


152  இந்தநல் கிரமம் தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்இல் அருகர் பூசை அருள்முனி தானம் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந்து அரசர் ஆகிப்
பந்ததீவீனையை வென்று பஞ்சமகதியும் ஆமே.

முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன்வந்து அழைத்தல்

153  என்றுஅவர்உரைப்பக் கேட்டு இறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழையோடு மன்னன்
நன்றுடன் செல்லும் நாளுள் நயந்தரன் வந்துஇறைஞ்சி
உன்னுடைத் தந்தை உன்னை உடன் கொண்டு வருக என்றான்.

நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும் பிறரோடும் திரும்புதல்

154  அமையும்நன்கு அமைச்சன் சொல்லை அருமணி மார்பன் கேட்டு
சமையும்நால் படையும் சூழச் சாலலக் கணையினோடும்
இமையம்போல் களிற்றின்ஏறி இனியநல் தோழன் மாரும்
இமையவர்க்கு இறைவன் போல எழில்பெறப் புக்க அன்றே.

மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்

வேறு

155  தாதைஎதிர் கொள்ளஅவன் தாழ்ந்துஅடி பணிந்தான்
ஆதரவினன் நன்மகனை அன்புற எடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதம்இல்சீர் இன்புற இனிதுடன் இருந்தார்.

நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு முடிசூட்டித் துறவு பூணுதலும்

156  வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியினாரை
உற்றுஉடனே மாதரை ஒருங்குஅழைக்க வந்தார்
சித்திரநல் பாவையரைச் சேர்ந்துஉடன் இருந்தான்
பற்றுஅறச் செயந்¢தரனும் பார்மகன்மேல் வைத்தான்.


157  நாககுமரன்தனக்கு நன்மகுடம் சூட்டிப்
போகஉப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகமன் அடைக்குமுனியவர் அடிபணிந்து
ஏகமனம் ஆகியவன் இறைவன் உருக்கொண்டான்.

பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்

158  இருவினை கெடுத்தவனும் இன்பஉலகு அடைந்தான்
பிரிதிவிநல் தேவியும்தன் பெருமகனை விட்டு
சிரிமதி எனும்துறவி சீர்அடி பணிந்து
அரியதவம் தரித்துஅவளும் அச்சுதம் அடைந்தாள்.

நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்

159  வேந்தன்அர்த்த ராச்சியம் வியாளனுக்கு அளித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக்கு அவனிகள் அளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக்கணைதன்னை
வாய்ந்த மகாதேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.

இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்

160  இலக்கணையார் தன்வயிற்றில் நல்சுதன் பிறந்தான்
மிக்கவன்தன் நாமமும் மிகுதேவகுமாரன்
தொக்ககலை சிலைஅயில் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுஉடனே ஊர்ந்துதினம் சென்றான்.

நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்

161  புரிசைஎழ நிலத்தின்மிசை பொற்புஉற விளங்கும்
அரியஅரியாசனத்தில் அண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்கள் எண்ஆயிரவர் சூழ
இருகவரிவீசஇனி எழில்பெற இருந்தான்.

மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்

162  அரசுஇனிது இயல்பினின் அமர்ந்துஇருக்கும் அளவில்
பரவுமுகில் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவம் தாங்கஅவன் அன்புடன் எழுந்தான்.


163  அமலமதி கேவலியின் அடிஇணை வணங்கி
விமலன்உருக் கொண்டனன்நல் வேந்தர்பலர் கூட
கமலமலராள் நிகர்நல் காட்சிஇலக்கணையும்
துமிலமனைப் பதுமைஎனும் துறவர்அடிபணிந்தாள்.

நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்

வேறு

164  நறுங்குழல் இலக்கணையும் நங்கைமார்தம் கூட
உறுதவம் தரித்துக்¢ கொண்டு உவந்துஅவர் செல்லும் நாளுள்
மறுவில்சீர் முனிவன் ஆய நாககுமாரன் தானும்
இறுகுவெவ் வினைகள் வென்று இனிச்சித்தி சேர்ந்தது அன்றே.


165  வியாள மாவியாளர் தாமும் விழுத்தவத்து அனயை என்னும்
நயாஉயிர் தியானம் தன்னால் நால்இரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்த பூசனையும் செய்ய
மயாஇறப் பிறப்பும் இன்றி மருவினார் முத்தி அன்றே.


166  அருந்தவ யோகம் தன்னால் லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று இன்புறும் சித்தி சேர்ந்தார்
மருவுநல் தவத்தி னாலே மற்றும் உள்ளோர்கள் எல்லாம்
திருநிறைச் சோதம் ஆதி சேர்ந்துஇன்பம் துய்த்தார் அன்றே.


167  நாகநல் குமரன்கு ஆயு நான்குஆண்டு ஐஞ்நூற்று இரட்டி
ஆகுநல் குமார காலம் ஐந்து முப்பத்து இரட்டி
போகபூமிஆண்ட பொருவில் எண்நூறு ஆண்டு
ஆருநல் தவத்தில் ஆண்டு அறுபத்து நான்குஅது ஆமே.


168  மறுஅறு மனையவர்க்கும் மாதவர் தமக்கும் ஈந்த
பெறும்இரு நிலங்கள் எங்கும் பெயர்ந்து நல்கேவலியாய்
அறமழை பொழிந்த காலம் அறுபத்து ஆறாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கும் உற்றுஎழு குழாத்தி னோடே.

நூற் பயன்

169  இதன்கதை எழுதி ஓதி இன்புறக் கேட்பவர்க்கும்
புதல்வர்நல் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதம்உறு கவலை நீங்கிக் காட்சிநல் அறிவு முன்பாய்ப்
பதமிகும் அமர யோகம் பாங்குடன் செல்வர் அன்றே.

உலகிற்கு அறவுரை

170  அறம்இன்றிப் பின்னை ஒன்றும் உயிர்க்குஅரண் இல்லைஎன்றும்
மறம்இன்றி உயிர்க்கு இடர்செய் மற்றுஒன்றும் இல்லை என்றும்
திறம்இது உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம்இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத் தீரே.


நாக குமார காவியம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;