கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 27 மே, 2012

நீலகேசி-21

88இன்குர லார்முத லாநும ரீறா விவருமெண்மர்
பொன்பிதிர்ந் தன்ன பொறிசுணங் காகத்துப் பூண்முலையா
யென்றலு மீரிழு தாரழ லுற்றாங் கினைபவளை
நின்றிறம் பின்னறி வாமறங் கேளென நேர்ந்தனளே.


89அந்தர வாழ்க்கையர் சோதிடர் தாங்களு மைவகையர்
சந்திர சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய்
மந்தர மாமலை தன்னை வலமுறை சூழ்பவருஞ்
சிந்துபு நின்றுசெல் லாதே விளங்குந் திறலவரும்.


90ஆரண னச்சுதன் சோதம னந்தமு மாதியுமாய்ப்
பாரணை நல்ல பதினறு கற்பத் தவரவர்மே (வோர்
லோரிண ராயமும் மூன்றொன்ப தைந்துக ளுள்ளுறை
வீரியர் வைமா னிகரெனக் கொண்ணீ விளங்கிழையாய்.


91இப்ப டிப்பி றவியு
ளொப்பி றீய நாரகர்
துப்ப ரிய மாதுயர்
செப்பு வாஞ் சிறிதினி.


92ஈரி ருள்ளி னார்கடம்
பேர ளவ்வைஞ் ஞூறுவி
லோரு மோச னையவை
யூரும் வேத னையரே.


93காள மான மெய்கடாம்
வாள வாய்க ளாற்பல
கீள வாப வாயினும்
மீளு மேனி நீரினே.


94மல்ல வர்ம றஞ்செய்துங்
கொல்ல வாவ வல்லமெய்
பல்ல வாவு முள்ளன
சொல்ல வாவ வல்லவே.


95பண்டை வோ¢ யர்கடாங்
கண்டு கண்க னல்களாய்
மண்டி மாம றஞ்செய்ப
வெண்ட வப்ப லவுமே.


96பேடி வேத னைபெரி
தோடி யூறு மாதலாற்
சேடி யாடு வன்மையிற்
கூடி யாவ தில்லையே.


97கொன்ற பாவ மென்றுமூன்
றின்ற பாவ மென்றுதீச்
சென்று வேவ வாயினு
ணின்று கூவ வாக்குவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;