88 | இன்குர லார்முத லாநும ரீறா விவருமெண்மர் பொன்பிதிர்ந் தன்ன பொறிசுணங் காகத்துப் பூண்முலையா யென்றலு மீரிழு தாரழ லுற்றாங் கினைபவளை நின்றிறம் பின்னறி வாமறங் கேளென நேர்ந்தனளே. |
89 | அந்தர வாழ்க்கையர் சோதிடர் தாங்களு மைவகையர் சந்திர சூரியர் கோளவர் நாளவ ரல்லவராய் மந்தர மாமலை தன்னை வலமுறை சூழ்பவருஞ் சிந்துபு நின்றுசெல் லாதே விளங்குந் திறலவரும். |
90 | ஆரண னச்சுதன் சோதம னந்தமு மாதியுமாய்ப் பாரணை நல்ல பதினறு கற்பத் தவரவர்மே (வோர் லோரிண ராயமும் மூன்றொன்ப தைந்துக ளுள்ளுறை வீரியர் வைமா னிகரெனக் கொண்ணீ விளங்கிழையாய். |
91 | இப்ப டிப்பி றவியு ளொப்பி றீய நாரகர் துப்ப ரிய மாதுயர் செப்பு வாஞ் சிறிதினி. |
92 | ஈரி ருள்ளி னார்கடம் பேர ளவ்வைஞ் ஞூறுவி லோரு மோச னையவை யூரும் வேத னையரே. |
93 | காள மான மெய்கடாம் வாள வாய்க ளாற்பல கீள வாப வாயினும் மீளு மேனி நீரினே. |
94 | மல்ல வர்ம றஞ்செய்துங் கொல்ல வாவ வல்லமெய் பல்ல வாவு முள்ளன சொல்ல வாவ வல்லவே. |
95 | பண்டை வோ¢ யர்கடாங் கண்டு கண்க னல்களாய் மண்டி மாம றஞ்செய்ப வெண்ட வப்ப லவுமே. |
96 | பேடி வேத னைபெரி தோடி யூறு மாதலாற் சேடி யாடு வன்மையிற் கூடி யாவ தில்லையே. |
97 | கொன்ற பாவ மென்றுமூன் றின்ற பாவ மென்றுதீச் சென்று வேவ வாயினு ணின்று கூவ வாக்குவார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.