10. நாடுகாண் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் கார்இருள் நின்ற கடைநாள் கங்குல் ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப ஏழகத் தகரும் எகினக் கவரியும் | 5 |
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும் தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின் நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு, அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, | 10 |
பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழுடன் போகி, புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து | 15 |
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய ஐவகை நின்ற அருகத் தானத்துச் சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் | 20 |
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல் நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு, | 25 |
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி, கலையி லாளன் காமர் வேனிலொடு மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் | 30 |
இலவந் திகையின் எயில்புறம் போகி, தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயில் கடைமுகம் கழிந்து, குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, | 35 |
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண் இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க | 40 |
மதுரை மூதுர் யாதுஎன வினவ, ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர் நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத், தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும், | 45 |
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் என்னோ உறுக ணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன, உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான் | 50 |
மதுரை மூதுர் வரைபொருள் வேட்கையேன். பாடகச் சீறடி பரல்பகை உழவா காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர் | 55 |
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர் அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத் தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின் போதுவல் யானும் போதுமின் என்ற | 60 |
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத் தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என, கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ: | 65 |
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே, மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச் சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் | 70 |
கையறு துன்பம் காட்டினும் காட்டும், உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும், மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச் செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். | 75 |
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ. வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப் பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் | 80 |
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக் குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும், | 85 |
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும், எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் | 90 |
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா, வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை | 95 |
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன, தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.