118 | காண்டலு மல்லதே யளவை காண்டன்முன் பூண்டவைம் பொறிமன மவதி புண்ணிய மாண்டகு மனப்பரி யாயங் கேவல நாண்டகு மரிவைய ருருவ நண்ணினாய். |
119 | நினைவு மீட்டுணர் வூக நேர்தரு புனைவுசே ரணுமைபொய் யின்மை மெய்யுரை முனைவர்தம் மாகம மொழியு மாகுமென் றனையன காட்சியி லளவை யைந்துமே. |
120 | வைப்பு நயனள வைபுகு வாயிலென்றும் பொய்ப்பி லுயிரே பொருவில்குண மார்க்கணை செப்பி னிவற்றிற் றிரியாதுள் புகுபவாயி னொப்பில் பெருமை யுணர்விற்குயர் மாட்சியாமே. |
121 | காட்சி வகைதான் கடவுண் முதலாய மாட்சி யமைந்தபொரு ளெட்டு மனத்துவைத்து மீட்சியில தாய்விரிந் துந்திய வின்பவெள்ள வேட்கையது வாந்தெளி வென்றனர் வென்றவரே. |
122 | முந்துற்ற மூடப் புலிமூன்றும் பிழைத்த பின்னை யன்பச்ச மாசை யுலகோடிலிங் காத்த ரொப்பு மென்பெற்று மேத்த லிலராயெண் மயத்து நீங்க லின்புற்ற காட்சி யுடையார்க்கியல் பாகு மன்றே. |
123 | ஐயுற்றல் வேட்கை யுவர்ப்பேமயக் கியாது மின்மை செய்குற்ற நீக்க றிரிந்தாரை நிறுத்த லின்றிப் பொய்யற்ற காதற் பொருவில்லறங் காட்ட லெட்டுங் கையுற்ற வாயில் லதுகாட்சியின் மாட்சி யாமே. |
124 | நன்றாய காட்சி யுடனாகிய ஞானந் தன்னோ டொன்றாகி யுள்ளத் தொழியாமை யொழுக்க மென்ப குன்றாத வொன்றுங் குறைபாட்டதுங் கூறு பவ்வே வென்றார்த நூலின் விதிமெய்ம்மை யுணர்ந்த வரே. |
125 | போற்றல் செறிவே பொறையாதிய நல்ல றமு மேற்ற நினைப்போ டிருசார்வி ழுத்த வமு மாற்றல் பரிசை முதலாகிய வன்ன வெல்லாம் மாற்ற மறுக்கு மொழுக்கத்தின் மாட்சி யாமே. |
126 | யோக மிவற்றை யுடனுண்ட வுயிர்க ளெல்லாம் மாக விசும்பி னவர்தம்மொடு மன்ன ரும்மாய்ப் போக நுகர்ந்து பொருந்தாவினை புல்ல லின்றி யேகநல் லின்ப மியைந்தாலிழ வில்லை நல்லாய். |
127 | பிறவியா மாறும் பிணியாந் திறமும் மறவிதா னில்லா மருந்தாம் வகையும் திறவியாள் கேட்டுத் தெரிந்துள்ளங் கொள்ள வறவியான் றானு மறவமிர்த மீந்தான். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.