செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார் | 233 |
மந்திரசாலையின் அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப் புள்ளுமல் லாதவும் புகாத நீரது வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை வள்ளறன் மந்திர சாலை வண்ணமே | 234 |
அரசன் பேசத் தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன் பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின் வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே | 235 |
வேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப் புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே | 236 |
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம் கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும் மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார் நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர் | 237 |
அரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே | 238 |
அமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர் பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப் பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே | 239 |
அரசன் முகமன் பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான் கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச் செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே | 240 |
அரசனும் அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான் செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார் | 241 |
தோள்வலியும் சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில் தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும் ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும் கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான் | 242 |
சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம் சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே | 243 |
சூழ்சியே அரசன் ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும் ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும் ஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே | 244 |
இன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க் கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே | 245 |
சூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும் மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே | 246 |
அமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே | 247 |
உங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான் | 248 |
அரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்
கொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு நங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான் தங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான் சங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே | 249 |
அமச்சர்கள் பதிலுரைத்தல்
இறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி யறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே நிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று முறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார் | 250 |
சச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்
பணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித் துணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான் இணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே | 251 |
சூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்
பொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந் தொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும் எழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே அழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே | 252 |
அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்
கோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல் பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான் | 253 |
திங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்
சூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித் நாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும் வீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே போழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய் | 254 |
நூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்
கண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு தண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே மண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான் விண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே | 255 |
பொறுமையின் பெருமை
கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந் தண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப் புண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின் மண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே | 256 |
அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்
நிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின் இறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ ? மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின் அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே | 257 |
இதுவுமது
மண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள் விண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற் கண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும் தண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே | 258 |
அரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை
தீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற் போயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே வேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய் மாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே | 259 |
அறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை
மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட விரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும் அறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும் சிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய் | 260 |
ஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே திருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி இருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப் பெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே | 261 |
உலகத்திற்குக் கண்கள் மூன்று
கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார் எண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின் மண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா | 262 |
இவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்
குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ் படிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார் முடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி அடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே | 263 |
அரசர்களைப்போல மக்கள் இலர்
தண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே விண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல மண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய் கண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே | 264 |
அருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்
அருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை வருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும் திருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற் பெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய் | 265 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.