(கட்டுரை)
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் | 5 |
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக் குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும் அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் | 10 |
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும் திணைநிலை வரியும் இணைநிலை வரியும் அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும் ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும் தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் | 15 |
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும் என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று. | 20 |
(வெண்பா)
காலை அரும்பி மலரும் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். |
புகார்க் காண்டம் முற்றிற்று.
மதுரைக் காண்டம்
11. காடுகாண் காதை
ங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக் கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் | 5 |
அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித் தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று | 10 |
வைகறை யாமத்து வாரணங் கழிந்து வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத் திருக்கை புக்குழி வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை | 15 |
ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள | 20 |
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி | 25 |
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி | 30 |
மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் | 35 |
பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் | 40 |
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு | 45 |
நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய | 50 |
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் | 55 |
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயெனக் கோவலற் குரைக்கும் கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி | 60 |
வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் | 65 |
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை தன்னுடன் அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று | 70 |
கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் | 75 |
பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும் நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமுங் கடந்தால் ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் | 80 |
கொய்பூந் தினையும் கொழும்புன வரகும் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் | 85 |
அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின் அவ்வழிப் படரீ ராயி னிடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து | 90 |
திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு இட்ட சித்தி யெனும்பெயர் போகி | 95 |
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் பவகா ரணி படிந் தாடுவி ராயிற் | 100 |
பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர் இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின் ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது | 105 |
சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலம் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப் பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற் கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் | 110 |
தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ் வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் | 115 |
உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின் திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும் கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள போகிடை கழியன ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் | 120 |
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும் உரையீ ராயினும் உறுகண் செய்யேன் நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் | 125 |
உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும் ஒருமுறை யாக உளங்கொண் டோதி | 130 |
வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற் காண்டகு மரபின வல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் | 135 |
புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு | 140 |
அந்நெறிப் படரீ ராயின் இடையது செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால் ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம் நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி | 145 |
இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும் மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட | 150 |
காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும் நலம்புரி கொள்கை நான்மறை யாள பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் | 155 |
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோநீ வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள் காமுறு தெய்வங் கண்டடி பணிய | 160 |
நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும் என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப் பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் | 165 |
கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் | 170 |
கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவில் தோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து | 175 |
வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று மேலோ ராயினும் நூலோ ராயினும் | 180 |
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் | 185 |
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் | 190 |
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென வியத்தகு மறையோன் விளம்பின னாதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் | 195 |
கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின் வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையா தேகென் றேகத் | 200 |
தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவரி தென்று கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் | 205 |
மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் | 210 |
கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக் கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும் விழிநுதற் குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி | 215 |
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.