அச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது
அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும் பொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி மதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும் கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே | 291 |
அச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்
சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங் கொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங் சுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும் வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே | 292 |
அச்சுவக்கிரீவனுடைய தம்பியர்
தம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன் வம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும் தும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய் | 293 |
வெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார் அவனுக்கு நிகரானவர் பிறர் இலர்
படையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண் புடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே விடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும் நடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான் | 294 |
அமைச்சனும் நிமித்திகனும்
ஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல் கோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான் பேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான் காணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய் | 295 |
அச்சுவக்கிரீவன் தன்மை
தன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க் கென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான் பொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி மன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா | 296 |
அச்சுவக்கண்டனது தோள்வன்மை
குளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே களிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால் ஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே வெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார் | 297 |
அச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்
முற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம் மற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா செற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே நற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம் | 298 |
சுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்
ஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித் தேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு மாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே தீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான் | 299 |
சுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்
மற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு முற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும் வெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண் கொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான் | 300 |
பவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்
சுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை யடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித் தொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே படர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான் | 301 |
வேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்
நூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான் மேலா ராயு மேதமை யாலு மிகநல்லான் தோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம் வேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ | 302 |
அச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்
தேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்! யானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே மானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ ரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன் | 303 |
பிறந்த நாட் குறிப்புக் கூறல்
மானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி நானக் கோதை நங்கை பிறந்த நாளானே வானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத் தானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார் | 304 |
காவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன் மேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால் ஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும் தேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள் | 305 |
இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்
நங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான் தங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான் எங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால் செங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன் | 306 |
என்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால் குன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய் நன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால் நின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான் | 307 |
சாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்
ஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே ஊழிக் கால மோடின வென்னு முரையாலும் தாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ சூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய் | 308 |
அச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்
கண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர் மண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின் றெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள் பெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம் | 309 |
இரத்தின கண்டன் இளவரசன்
வானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள் ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான் ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான் ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய் | 310 |
மன்னன் வினாதல்
அன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால் என்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும் இன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே அன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான் | 311 |
சிறந்தவனைத் தெரிந்துகொடு வென்றல்
மையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற் கையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை மெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக் கொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் | 312 |
வேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று
பவனஞ்சன் மாண்பு
கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும் தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல் பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித் தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான் | 313 |
அமிழ்தபதி நாட்டு வேகரதன்
அளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும் வளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார் விளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே இளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான் | 314 |
மேகபுரத்துப் பதுமரதன்
வேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும் ஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப் பாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை ஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய் | 315 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.