138 | அல்லற் பிறவி யகன்றோய்நீஆசை வெவ்வே ரறுத்தோய்நீ வெல்லற் கரிய வனங்கனைமெய் வெண்ணீ றாக வெகுண்டோய்நீ கொல்லக் கருதி வந்தேனைக்குணங்க ளாலே வணங்குவித்த சொல்லற் கரிய பெரியோய் நின்றோமில் பாதந் தொழுவல்யாள். |
139 | உடம்பின் மெய்ம்மை யுணர்ந்தோய்ந £யுறங்க லார்வ மறுத்தோய்நீ யிடங்கொ ளின்னா வினையெல்லா மெரிக்கும் வாயில் விரித்தோய்நீ யடங்க லில்லேற் கருளினாலறங்கூர் மாரி பொழிந்தோய்நின் றடங்கொள் செந்தா மரையடியென்றலைய வேயென் றலையவே. |
140 | தடம்படு மாரி தலைத்தலை நூற விடம்படு பல்லுயிர் மெய்வழி யேற வுடம்பொடு வேறெனு மோர்ப்பினை யாகி யடங்கிய நின்னடி யஞ்சலி செய்வேன். |
141 | கல்லுரு கக்கடுங் காற்றெறி போதினி னல்லிருள் கூர்சுடு காட்டிட மாகப் பல்வினை யும்பறிப் போய்நின் பாதம் நல்வினை யிற்றொழு வேனினி நாளும். |
142 | மங்குன் மழைபொழி மாரிபெந் நாளிற் கங்குலெண் ணில்லங் கவலைசெய் காட்டு ளெங்கு மியங்கல னென்றிருந் தோய்நின் பங்கயம் போல்வன பாதம் பணிவேன். |
143 | இற்றவர் தம்முட றின்றிட யாமம் முற்ற நரிமுர லும்முது காட்டுட் பற்றற வேநினை வோயிரு பாதம் சுற்றுபு யான்விதி யிற்றொழு வேனே. |
144 | திண்டிறல் சேர்சிறு பேயறை கீறி வெண்டலை யால்விளை யாடிய காட்டு ளெண்டுக ளும்மெரிப் போய்நின பாதம் வண்டறை பூவொடு வந்தனை செய்வேன். |
145 | பிணங்க ளிடையிடை போரழ லீமத் தணங்கு துணங்கைசெய் தாடிய காட்டுட் குணங்க ளுடையன குன்றுத லில்லாய் வணங்குவ னின்னடி வைகலி னாளும். |
146 | நுனித்தகு நன்னெறி நோக்கின ளாகி முனிப்பிறை யோனடி மும்மையி னேத்திப் பனிக்கட லன்னதொர் பாவமுஞ் செய்தே னினிச்செய்வ தென்னுரை யாயெனக் கென்றாள். |
147 | விலங்கு வெந்நர காதிக டம்முள் கலங்கி யெங்குங் கண்ணில வாகிக் நலங்களில் லாவுயிர் தங்களுக் கெல்லா சலங்களில் லாப்பெரி யோன்சரண் கொண்ணீ |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.