கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 14 ஜூன், 2012

நீலகேசி, -27

148உய்தல் வாயுரைத் தாயதன் மேலு
முயிருள்ளிட் டபல வுள்பொருள் சொன்னாய்
நைதலில் லாத்தெளி வோடுநன் ஞான
நானுங் கொண் டேனுன் னற்குண மெல்லாம்
பெய்துதந் தாய் பிழைத் தேற்கினி தாவோர்
பிராயச்சித் தம்பெரி யோயரு ளென்னச்
செய்த தீமை கெடக்கட னாட்டிற்
சினவ ரன்னெறி யேதெருட் டென்றான்.


149யாஅ தடிக ளதருளா
லருந்துய ரகல்வகை யதனான்
மாஅ துடைஅடி யிவைதா
மறவலெ னெனவலங் கொண்டு
வேஎ தடவியன் மலைமேல்
விரிகதிர் மணிவிளக் காதி
தீஇ தடுதலை விலங்குஞ் சினகர
முவகையிற் சென்றாள்.



குண்டலகேசி வாதம்


150கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ
நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம்
பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதிரி பிறவு
மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள்.


151நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி
மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக்
காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப
வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள்.


152அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மரிய
பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும்
வித்த கம்பெரி துடையவசித்திர வுருவநன் மலராற்
சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள்.


153தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே
தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தரிசிய துருவே
யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண்
ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும்.


154கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா
யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர
வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.


155சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண்
மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந்
தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப்
போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா.


156அரிய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து
புரிய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த
விரிகொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும்
பிரியும் பெற்றியை யுரைத்தாய்பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.


157பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;