கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 17 ஜூன், 2012

நீலகேசி, -30

178சொல்லியவந் நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து
நல்லவையை மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த
வெல்லையில் குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற்
பல்வகைய பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள்.


179முன்னெனப் படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம்
அன்ன தன்கட் பெரியனேலறங்கொண்ட தவமாகும்
பின்னதன்கட் பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ
லென்னென்றான் பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள்.


180பெருமைமுன் பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர்
கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற் பெற்றிலன்முன்
றருமந்தான் கருதிநீசொன்னாயேற் றலைவரே
யொருமையா லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார்.


181தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க வென்பதனை
யூன்கொடுமை யுரைத்தான்·துணர்ந்திலனே யாகாதோ
தான்கெடு மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான்
மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட் டொழிவதோ.


182வழிவாழக் கெடுகின்றார்மாந்தருள் மேலாயார்
பழிபாவ மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான்
ஒழிபாவி தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார்
கிழியோடு மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ.


183நுனைத்தலைய நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா
லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த பிறந்துழப்பு
நினைக்குங்காற் பிறர்க்கேயாமென்றியா னீயன்னா
யனைத்துணைய பெரும்பாவமவன் செய்தா னாகானோ.


184துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா
மென்பதனை நுமரேடீ யெப்பொழுது முரைப்பவாற்
பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா
லன்பினான் முன்செய்த தருவினையே யாகாதோ.


185தனக்கொன்றும் பயனின்றித்தளையாளென் றான்வருந்தி
யெனைப்பெருங் குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால்
நினைப்பதொன் றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும்
மனக்கினிதா வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ


186அவ்வகையா லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற
வுய்வகையில் போ¢டரையொழிப்பதன் பொருட்டாக
விவ்வகையா லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள்
கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்குண்டலமா கேசியே.


187அருளினாற் பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப்
புரளல்நீ பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப்
பொருளன்மை கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ
தெருளநீ யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;