மைந்தர்கள் கலங்கி மெலிதல்
நெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார் மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார் தொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின் உய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார் | 452 |
வேறு
நாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம் தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார் வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார் காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார் | 453 |
அம்மாதர்களின் தன்மை
இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார் பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார் கனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார் முனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் | 454 |
புலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி குலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே | 455 |
மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான் தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார் என்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால் பின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே. | 456 |
வாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த சாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது காம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த தூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே | 457 |
சூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்
சனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய் வனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல் தனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த கனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர் | 458 |
தூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும் தாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த காம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும் யாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ | 459 |
மங்கையர் மலர்ப்பொழிலை அடைதல்
என்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற் சென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார் இன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த வென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த | 460 |
வேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்
ஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன் மாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம் சேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங் கோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே | 461 |
மற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்
வண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங் கண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ் சுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ டெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார் | 462 |
மகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்
தகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க மகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ டுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த் துகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே | 463 |
மரீசிக்கு வேண்டுவன புரிதல்
துறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா வெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச் சிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் | 464 |
மங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்
ஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர் தீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச் சூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில் ஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான் | 465 |
மாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்
வயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார் வியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும் இயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா வயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான் | 466 |
வேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்
ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார் வீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப் பூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந் தாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான் | 467 |
யானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு
தம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு பைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான் செம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம் வம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான் | 468 |
விசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்
ஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம் தேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம் போர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம் வேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம் | 469 |
விசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்
பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார் ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின் சூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும் மாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார் | 470 |
கொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார் மண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம் குண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ வண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே | 471 |
கூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந் தோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய் மாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார் ஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார் | 472 |
தொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம் கொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம் வண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக் கெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே | 473 |
விசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்
மாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார் வேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால் சாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை நீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே | 474 |
சுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார் வண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார் நண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே கண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார் | 475 |
பாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும் ஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும் சூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண் நாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார் | 476 |
இட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும் விட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச் சுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள் பட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம் | 477 |
அலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா நிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார் கலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான் மலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம் | 478 |
பாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும் சூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும் ஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய் நாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார் | 479 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.