188 | ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான். வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ. |
189 | அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப் போவாரென் றிங்கிருந்து நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார் அங்கிருவ ருளரெனினு மவரின் முன் னவையீரே நங்கரும முலைப்பித்து நாம்போது மெனநக்காள். |
190 | முன்கொன்றான் றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து தின்கின்றான் பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே யென்கின்றா னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய் தன்கன்று சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ. |
191 | கண்ணொடுகா திவையிலள்கரந்தன முலையிரண்டு முன்னும்வா யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி பெண்ணழகிற் கிவள்பிறராற்பேசவும் படுவாளோ எண்ணுங்கா லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள். |
192 | பருவரலொன் றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள் கருவரைமேற் றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள் இருவரையும் போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும் பெருவழியார் பேரருளார்பிறர்யாரே யெனநக்காள். |
193 | ஒண்ணுதலா யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான் கண்முதலா வுரையவிக்கருவியிற் கண்டுகேட் டெண்ணியு முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ னுண்ணுணர்வு தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ. |
194 | ஐங்கந்த மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற் சிங்குந்தன் குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று மிங்கொன்று முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய் சங்கந்தா மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய். |
195 | முன்னைத்தன் முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும் பின்னைத்தன் பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய் என்னொக்கு மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத் தன்னைத்தந் தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ. |
196 | கள்ளனுந் தானேயாய்க்கையாப்புண் டவனேபோ லுள்ளந்தா னின்றவற்றை யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங் கெள்ளனைத்து மில்லென்றாலிறப்பறித லெவனாகுந் தெள்ளியாய் தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ. |
197 | கோன்பட்டான் குந்தத்தாற்கத்துண்டா னேனாதி தான்பட்டான் றளவீரன்தப்பியோ டவனருகே யான்பட்டே னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால் தான்பட்டான் பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.