218 | ஆவ தின்மை யறிந்து மவத்தமே சாவ தேயுங்கள் சத்துவர் சால்பெனிற் காவல் பூண்ட கணவனோ டீமத்தின் வேம வட்கும் விழுக்குண மாங்கொலோ. |
219 | சாந்தி யாகத் தரும முரைப்புழிக் காந்தி பாவியைக் கண்டு கலகன்றா னேந்தி வெம்படை யாலெறிந் தாற்கிடம் போந்து கொண்டதும் பொய்யினுட் பொய்யன்றோ. |
220 | யானை யுள்ளா செங்குள தங்கெலாம் வான நின்று வழிபடல் காண்டுமான் மீனு மல்லவும் வேதனை யெய்துழித் தான தாதற்றா தாகதர் தன்மையோ. |
221 | குரங்கு மாயவை கொல்லிய செல்வழி யிரங்கி யேயுயக் கொண்டது மென்றியாற் குரங்கு நேர்குதி யாக்குரங் கெங்குள மரங்கள் பாய்ந்திடு மாண்பின வல்லவோ. |
222 | சீல நல்லவர் நீள்குவர் சேணெனிற் கோல மில்குரங் காட்டிக் கொல் வார்களைக் காலுங் கையு மெழற்கெனக் காண்கிலான் வாலை நீட்டிக் கிடத்தறன் மாட்சியோ. |
223 | தாய்க்கொன் றான்றங்கு செங்குரு திப்புனல் பேய்க்கொன் றீதல் பெருங்கொடை யென்பதை வாய்க்கின் றாயினி மானுயர் மாசெலா நாய்க்கென் றாலிது நல்லற மாங்கொலோ. |
224 | யான்செ யும்பொரு ளென்றங்கொ ரேகாந்தன் தான்செய் திட்டனன் சாதக கற்பங்கள் மான்செய் நோக்கி மதிப்பொழி நீயெனக் கோன்சொ னானிது குண்டல கேசிக்கே. |
225 | முயலுரை யிதுவெனெ மூடிக் கொண்டிருக்ந் தயலார்க் குரைப்பவ ராத ரல்லரோ புயலிருங் கோந்தலி பொருந்தச் சொல்லினாள் வியலவ ருரையொடு விரோத மில்லையே |
226 | அரசிறை யிட்ஜுசொலவவை நார்களு முரைசெறி வுடையன வுரைத்த நீர்மைபூண் முரைசொடு நெடுங்கொடி முலூங்க நாட்டுக விரைவொடு படுகென வேந்த னேயினான். |
227 | இருப்பதென் னினியன்னா யிதுநுமக் குரைத்தார்யார் சும்க்கினைக் கடிதாகச் சொல்லெளூக் கெனலோடுக் திருக்கிளர் மதிலுஞ்சை தென்றிசை யகனகரு ளம்க்கசந் திரனென்னு மவாச்சிய னெளூச்சொன்னாள் |
228 | கட்டுரை பலசொல்லிக் காவல் நெடுங்கடை நாவலைமுன் னட்டிவ ணகரிடை நகைசெய்து புகுந்தவிந் நன்னுதலை வட்டிகொள் பறைகொட்டி வழுவுரை பலசொல்லி (வாரலென்று பெட்டன பலசெய்து பெருநகர் வாயிலைப் புறப்படுத்தார். |
229 | புனத்திடை நறுமலர்ப் பூங்கொடி யன்னதோர் பொற்பினளாய் எனைப்பல நூல்களு மியல்பினி னறிபவ ளேதமில்லாள் தனக்கினி யான்செயற் பாலதுதானென்னை யெனவுரைத்தான் இனத்தகை யேற்றரி யிடியுறுமேறெனு மிவற்றை யொப்பான். |
230 | ஆண்டகை அரசிறை அதுசொல்லக்கேட்டவவ் வறத்தகையா டீண்டல னணிபிற புனைவெனுநினைவிலன் றினையனைத்தும் வேண்டல னிலனொடு விழுநிதியினையவும் விறற்றகையா யீண்டினி யறநெறி யுறுகெனவேந்திழை யியம்பினளே. |
231 | வந்தது மிதுபொருண் மன்னவயானென நன்னுதலா ளிந்திர னனையநின் னிறைமையினறநெறி யிகழலென்றாங் கந்தர நெறிசெலற் காயிழையரசனை விடுத்தருக்க சந்திர னிருந்தவத் திசைமுன்னித்தளிரிய றானெழுந்தாள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.