அர்க்க சந்திர வாதம்
232 | உஞ்சை மாநக ரெய்தின ளாயத னிஞ்சி மாட்சியு மெல்லையில் செம்மலு மஞ்சு தோய்நெடு மாடமும் வீதியு மஞ்சி லோதி யவையவை கண்டபின் |
233 | பருக்கை மால்களி யானைப்பல் வேந்தரு மிருக்க போதக வென்னும் பெருமையான் றருக்க நீட்டமுந் தன்னிக ரில்லவ னருக்க சந்திர னென்னு மவாச்சியன். |
234 | போதி சத்துவர் புத்த ரெனப்படு நீதி யிற்பெரி யாரன நீ¡;மையா னோதி நூன்மும்மை யொப்ப வுணர்ந்தவன் வாதி கட்கோர் வயப்புலி யேறனான். |
235 | மாடமோங்கி மழைநுழைந் தின்குயில் பாடு பூம்பொழிற் பாங்கரோர் பள்ளியுட் பீட மேறிப் பெருந்தகை யார்க்கெலாம் வீடு பேறும் வினையு முரைப்புழி. |
236 | சென்று தானெய்திச் சிற்பிடத் தாற்புக்குத் துன்று நீண்மணித் தூணணிந் தெண்ணென நின்று நீலவைம் பாற்பெய ராளுமங் கொன்று பல்வகை யோத்துரை கேட்டனள். |
237 | கொள்ளு மாறுந்தன் கோரகை யுட்கஞ்சி மொள்ளு மாறு முதுகு நெளித்துண்டு னள்ளு மாறு மணலெடுத் திட்டவை மெள்ள மெள்ள விழுங்கு மவைகளும். |
238 | வழிக்கு மாறுந்தம் மண்டையி னுண்டுமன் ஒழிக்கு மாறும· தூட்டு மவைகளும் மழிக்கு மாறுந் தலைகளை மையிட்டு விழிக்கு மாறும் வினைய விதியினால். |
239 | இனைய வேசொல்லி யிட்ட தலையராய் வினைய நூலை வியப்பெய்து வார்க்கெலா மனைய தேநு மறநெறி யென்றனள் முனைவன் றன்னெறி முன்ன முணர்ந்தவள். |
240 | அவ்வு ரையம ரானுய ராசனச் செவ்வ ரைம்மிசைத் தீத்திரள் போல்பவ னிவ்வு ரையிவ ணென்னெனச் சொல்லினான் றெவ்வ ரைத்திறல் வாட்டிய திண்மையான். |
241 | வீரஞ் செய்து விழியல் வினையநூல் பேர த·தேல் பெரிது மழகிதே யோரு ம·தோ ருறுவினை யென்பதைத் தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள். |
242 | வினைய தாகிய பெற்றி விரித்துநீ தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே அனைய வவ்விர தத்தோ டறிசல மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே. |
243 | தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன் மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற் பின்னைச் செய்வன பேசலு மாகுமோ. |
244 | காம மூரிற் கணிகைய ரோடன்ன தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட் சேம மாவகைச் செல்கமற் றென்பதும் வாம நூலின் மறைபொரு ளல்லவோ. |
245 | சிங்க தத்த ரெனப்படுந் தேரனார் சங்க போதியி லாள்கட் டயாச்செய விங்கி தென்னென வேழாய் தவசிகட் கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ. |
246 | யாது மில்லை யுயிரென் றறநெறி யோதி னானவ் வுயிரிலி தன்னொடு வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும் சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர். |
247 | சித்த மோடிக் கலங்கித் திரியாத நத்தம் பெற்றது நற்றவ மேற்கொண்டான் பத்தின் மேலும் பழிசெய்யு மேற்பள்ளி வத்தன கண்டீ¡; வழக்கின்கட் கூரியீர். |
248 | போதி யாருரு வெய்திய புற்கலர் வேதி யாற்கிடந் தாருள ராயினான் ஞாதி யாரென நாட்டிய கூட்டமும் ஓதி வைத்ததொன் றுண்மை யுணர்த்துமால் |
249 | ஆரம் பிச்சி யலிவிலங் கவ்வுருச் சீரிற் கொத்தாள் கணிகை தெருண்டாள்பெண் ஒரு மில்லா ளுயிரிலி யூமையுந் தார மாக்கொ·டி ரென்றல் சலமதோ. |
250 | பிறந்த வில்லினுள் வாழ்க்கை பிழைப்பெனு மறங்கொண் டான்கொண் டவாச்சிய வேடத்தாற் சிறந்த வல்லன சிங்கின வெங்கணுந் துறந்த வான்பொருள் சொல்லவும் வல்லையோ. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.