துமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்
சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ தின்ன மொன்றுள வடிகள் யான்பல மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன னன்ன னீர்மையா ரரச ரில்லையே | 586 |
கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா முற்ற நோக்கினு முற்ற நோக்கல வுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப் பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே | 587 |
எரியு மாணையான் குளிரு மீகையான் பெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா னரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க் குரிய னோங்குதற் கோடை யானையான் | 588 |
எல்லை நீருல கினிது கண்பட வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி யில்லை யேலுல கில்லை யாமென நல்ல னேயவ னாம வேலினாய் | 589 |
கற்ற நூலினார் கலந்த காதலா லுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற் கொற்ற வேலவன் குடையி னீழலார் சுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய் | 590 |
கோதிலார் குல மக்கண் மாக்கண்மற் றேதி லாரென வியைந்த தின்மையார் ஆத லாற்றமர் பிறர்க ளாவதங் கோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே | 591 |
வைய மின்புறின் மன்ன னின்புறும் வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ் செய்ய கோலினாய் செப்ப லாவதன் றைய தாரினா னருளின் வண்ணமே | 592 |
வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க் காவி யாபவ ரரச ராதலாற் காவ லோவுங்கொ லென்று கண்படான் மாவ றானையம் மன்னர் மன்னனே | 593 |
இதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன
மங்குல் மாமழை மாரி வண்கையான் பொங்கு காதலால் புதல்வர் தாமுமற் றிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன் சிங்க வேறெனச் செப்பு நீரரே | 594 |
கைய வாச்சிலைக் காம னிங்கிரு மெய்யி னால் வெளிப் பட்ட நீரதால் வைய மாள்பவன் புதல்வர் வார்கழ லையன் மார்கடம் மழகின் வண்ணமே | 595 |
சங்க வண்ணனார் தம்பி தானுநீர் பொங்கு கார்முகில் புரையு மேனிய னங்க ணிவ்வுல காள நாட்டிய மங்க லப்பொறி மன்ன காண்டியால் | 596 |
செங்கண் மாலவன் தெய்வ மார்பகம் பங்க யத்துமேற் பாவை தன்னுட னங்கு லக்கொடி நங்கை சேர்வதற் கிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே | 597 |
மரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்
நங்கை யங்கவ னலத்திற் கொப்பவ ளிங்கி வட்குவ றேந்த லில்லிவர் பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது வெங்கண் யனையாய் வியக்கு நீரதே | 598 |
சடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்
என்று கூறலு மேந்து நீண்முடி வென்றி நீள்புகழ் வேக யானையா னன்று மற்றவற் கருளி யீந்தன னின்று மின்சுடர் நிதியின் நீத்தமே | 599 |
சடிமன்னன் அமைச்சரை வினாதல்
மற்ற வன்றனை மனைபு கப்பணித் துற்ற மந்திரத்தவர்க ளோடிருந் தெற்று நாமினிச் செய்வ தென்றனன் வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே | 600 |
அமைச்சரின் விடை
செங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு திங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு சிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே | 601 |
இதுவுமது
ஆதலா லஃதறியும் வாயிலா வோது மாண்பினா னொருவ னெற்றனாய்த் தீதி றானையாய் செல்ல வைப்பதே நீதி யாமென நிகழ்த்தி னாரரோ | 602 |
மன்னன் ஒற்றாய்தல்
உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல் வைத்த வொற்றினன் மன்ன னானபி னத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான் | 603 |
இனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்
இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா ளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா னெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற வைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம் | 604 |
இதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன
பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை யஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத் துஞ்ச லோவுந் தொழிலின னாயினான் | 605 |
முத்த வாணகை மோய்பவ ளத்துணி யொத்த வாயமு தொண்கடி கைத்திரள் வைத்த வாயின னாய்மட வார்கடஞ் சித்த வாரிக ளுட்சென்று தங்கினான் | 606 |
ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க் காருங் கொம்பனை யாருங் கலந்துழித் தாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில வாரம் பட்டணி வண்டின மார்த்தவே | 607 |
வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட் கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித் தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான் | 608 |
தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந் தேம யங்கிய செங்கழு நீரணி காம மென்பதொர் கள்ளது வுண்டரோ யாம மும்பக லும்மயர் வெய்தினான் | 609 |
சுற்று வார்முலை யார்தந் துகிற்றட முற்று மூழ்கும் பொழுது முனிவவ ருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான் மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான் | 610 |
மண்க னிந்த முழவின் மடந்தையர் கண்க னிந்திடு நாடகக் காட்சியும் பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும் விண்க னிந்திட வேவிழை வேய்தினான் | 611 |
வாவி யும்மது மண்டபச் சோலையுந் தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும் பாவும் வெண்மண லும்புனற் பட்டமு மேவு நீர்மைய னாய்விளை யாடினான் | 612 |
மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி துன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது என்னு மித்துணை யும்மறி யான்களித் தன்ன னாயின னச்சுவ கண்டனே | 613 |
அச்சுவக்கண்டனின் அரசியல்
சீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு மாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந் தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ் வாறு சென்ற தவற்கர சென்பவே | 614 |
பூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்
தோடு மல்கு சுரும்பணி கோதையர் கோடி மென்றுகிற் குய்யத் தடம்படித் தாடித் தன்னணை யாமையிற் பூமகள் ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள் | 615 |
சதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல் தாங்கி னான்சத விந்துவென் பானுளன் நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன் வீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் | 616 |
அரசர்க்குரிய அறுவகைப் பகைகள்
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந் தன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே பன்னி னாறு பகைக்குல மாமவை முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான் | 617 |
தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப் பின்னை வேறல பிறர்க்கரி தாதலான் மன்ன மற்றவ னாளும் வரைப்பகம் பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ | 618 |
மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ னேசி றண்டம் பரவவின் வையக மாசி றண்டத்த னாயினி தாளுமே | 619 |
பெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ் சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென் றுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங் கற்ற வன்பிறர் காவல னாகுவான் | 620 |
அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த் திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல் முருக்கு மற்றத னைமுகத் தாரினாய் | 621 |
இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப் புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட் டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே | 622 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.