251 | உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன் றிரைப்ப மெல்லனை செய்வ விழுத்தவம் கரைப்ப தீவினை கண்டது சூனியம் புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ. |
252 | எல்லா மசுசியு மென்ப வனவா லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர் சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று பல்லார் வருத்தம் பழுதெனப் பண்ணுப. |
253 | நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப விலையே யுயிரென் றிறந்த நினைப புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே |
254 | மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ் சயித்தியங் காணித் தலையினை முட்டும் பயித்தியங் கொண்டவர் பண்புமா· தொக்கும் |
255 | புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ் செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு மத்த னுடைய வருள்வகை வண்ணம். |
256 | பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம் மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந் கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந் தானறாப் ப·றொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம். |
257 | பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும் வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும் கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ. |
258 | பற்றே மிகப்பெருக்கிப் ப·றொடர்ப்பா டேயாக்கி யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர் பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ. |
259 | ஆங்கவ ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான் றேங்கம ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை தீங்கொழுக் கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார் பூங்கமழ் காராடைபோர்த்தவெம் புத்தரென்றான் |
260 | துத்தலே வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய் சித்தமே நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ கத்திகொண்டில் லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து குத்தவதின் னும்போழ்திற்கூடுமோகன் மையேடா. |
261 | உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம் கொள்ளுமேற் குற்றம·தாக் கூடுமே பற்றுமாங்கண் விள்ளுமேல் வேறதாய வேடமு மன்னதேயாங் கள்ளமே சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ. |
262 | புனைந்துநீ சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே நினைந்துநாங் காணி னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற் றுனைந்துதா னுண்மை நன்றுசூனிய மாதற் கென்றாட் கினைந்தினைந் தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான். |
263 | செத்தவ ரப்பொழுதே தேவருட் செல்பவேனு மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ தொத்துள வாகவென்னான் சூனிய வீடுசொன்ன புத்தனை நோதுமத்த புலம்பனீ போகவென்றாள். |
264 | புன்னெறி யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய் நன்னெறி நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென் சொன்னெறி திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி மன்னுதி யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே. |
265 | காட்டுழல் களிநல் யானைகால்கையி னோர்ப்பித் தேறித் தோட்டியிட் டூர்வ தேபோற்சூரிய சோமன் றானும் வாட்டடங் கண்ணி நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற் பூட்டுபு கொள்ளப் பட்டான்போதியார்க் காதி யன்னான். |
266 | அருக்கமா சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை யிருக்கும்வா யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப் பொருக்கநீ சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி முருக்குவாய்சென் றவனாம்மொக்கல னெனச்சொன்னான். |
மொக்கல வாதம் 267 | நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கே மாதிரந்தா னெறியாகமனம்போலச் சென்றெய்தி மூதுரையுங் காரணமுமுழுதெழுதி யழகிதாய்ப் போதுகளும் பொன்மணலும்புனைந்தினிய பொலிவிற்றாய். |
268 | கொடிமகரக் கோபுரமும்நெடுமதிலுங் குடிஞைகளும் தொடிமகரத் தூணிரையுஞ்சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின் படிமகரப் படிமையதப்பள்ளிகண் டளியள்போய்க் கடிமகரக் கடல்கடந்துகலந்தந்த நலமென்றாள். |
269 | ஒழுக்கமுங் கல்விகளுமுரைத்தனவே யொப்பனகள் இழுக்கில்லாப் பெருந்தவத்திலிங்கிகளைத் தான்கண்டு முழுத்தாள தாய்ப்பள்ளிமுற்றத்தோ ரரைமரத்தின் குழுக்கொம்பர் பிடித்தொருகாற்குஞ்சித்து நின்றுதான். |
270 | துன்னஞ்செய் தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும் பொன்னஞ்செய் புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து தன்னமு மளித்தாயதலைசொறியு மிடையிலையா லென்னவற்றி னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள். |
271 | ஆங்கவ ளதுவுரைப்பவதற்குரிய மறுமாற்றந் தாங்களு மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார் மூங்கைமையான் மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான் பாங்கினால் வினவுவன்படிறின்றி யுரையென்றாள். |
272 | வீடிற்கே யெனின் ஞானம்வேண்டாதே முடியுமாற் பீடிற்கே யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார் மூடிற்றின் பயனென்னையெனவினவ மொக்கலன மூடிற்றுஞ் சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான். |
273 | படைப்பெளிதாற் கேடறிதாற்பலகள்வர் நவையாரா லுடைக்கியைந்த வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால் விடக்கமர்ந்த வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந் தொடர்ப்பாடும் பெரிதன்றாற்றொட்டைந் பூணியோ. |
274 | பொன்கொண்டா ராயினும் போர்வைபூச் செனிற்புலையன் வன்கண்மை யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர் தன்றன்மை யாகியதான்பழிப்பார் தாமுளரோ வெண்கண்டு வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள். |
275 | உண்ணன்மை தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய் திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ் செய்தலால் பெண்ணென்றும் பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய் கண்ணன்றோ வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.