326 | உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற் கையிற் காட்டல் கரவுள தாமெனிற் பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை பொய்யு ரைத்தில bனன்றல் பொருந்துமோ. |
327 | கொல்வினை யஞ்சிப் புலால் குற்ற மென்பதை நல்வினை யேயென நாட்டலு மாமென்னை வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது சொல்லினை யாதலிற் சொல்வன் யானே. |
328 | புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற் புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட் பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய) பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ. |
329 | ஆங்கவர் போல வருள்செய் பவர்களை நீங்குமி னென்பது நீர்மை யெனினது வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும் தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள். |
330 | பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந் தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி னல்வினை யாமென்று நாட்டுதி யாய்விடிற் கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய். |
331 | ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை யேத்துநர் பெய்தவ ரெய்துவ நன்றெனில் வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார். |
332 | வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட் குற்றமன் றோசென்று கூடுவ தேடா. |
333 | பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி முடிப்ப தருளது போன்முடை தின்று கடிப்ப தெலும்பதன் காரண மேனி தடிப்பத லாலரு டானுனக் குண்டோ. |
334 | ஆட்டொரு கான்மயிற் பீலி யுகமவை ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக் காட்டியுந் தின்னுங் கருத்திலை நீ தசை வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ. |
335 | மானொடு மீனில மன்னு முடம்பட லூனடு வாரிடு வாரை யொளித்தலிற் றானடை யாவினை யாமென்ற றத்துவந் தீனிடை நீபட்ட தீச்செய்கை யென்னோ. |
336 | குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான் பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற் செறிக்கப் படுமுயிர் தீவினை பின்னு நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ. |
337 | விலையறம் போலு மெனின்வினை யாக்க நிலையுமீ றென்பது நேர்குவை யாயின் வலையினின் வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற் கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய். |
338 | நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள் செம்பக லேகொலை யாளரிற் சேரும். |
339 | நாவின்கண் வைத்த தசைபய னேயென வேவினை நீயுமற் றின்பம· தாதலிற் றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று தூவென வெவ்வினை யைத்துடைத் தாயால். |
340 | கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன் முன்றினப் பட்ட முயன்முத லாயின நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே. |
341 | தூய்மையி லாமுடை சுக்கில சோணித மாமது போன்மெனி னான்முலைப் பாலன்ன தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில வாம னுரைவையந் தன்னொடு மாறே. |
342 | மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற் றான்மெய்க்க ணின்ற தவசிமற் றெங்குள னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றாள். |
343 | பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி னீப்பவுங் கொள்பவு நேர்து மவையவை தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர் கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள். |
344 | தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற் றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு மோவெனு முன்விலை வாணிக ரென்றினர் மேவினர் தாம்விலை யேவினை வேண்டார். |
345 | அடங்கிய வம்பு பறித்தன் முதலா வுடங்குசெய் தார்வினை யொட்டல ரென்பாய் மடங்கினர் வாழ்க வெனுமாற் றார்போற் கடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ. |
346 | தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை மன்னு மிகவுடைத் தாய்வினைப் பட்டில்லா ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி தன்னை வினைப்பட நீசொல்லி னாயால். |
347 | அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங் கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய் புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற மென்று துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ. |
348 | அறந்தலை நின்றாங் கருளொடு கூடித் துரந்தனள் யானென்னுஞ் சொல்லு முடையாய் மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க் காமே சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய். |
349 | பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு காயக் கிலேசத்திற் கட்டுரைக் கின்றான். |
350 | வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன் டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த் துயிறுறந் திராப்பகற் றுன்பவெங் கடலினார்க் கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.