விசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்
வேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற் சாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால் மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய் நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார் | 793 |
விசயன் மருதநிலத்தின் மாண்புரைத்தல்
புதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு மதுநா றுபுனன் மருதத் தினைமற் றிதுகா ணெனவின் னனசொல் லினனே விதுமாண் மிகுசோ திவிளங் கொளியான் | 794 |
அயலோ தமிரட் டவலம் பொலிநீர் வயலோ தமயங் கமயங் கவதிர்ந் தியலோ தையிளஞ் சிறையன் னமெழக் கயலோ டியொளிப் பனகாண் கழலோய் | 795 |
வளவா சநிலப் பலவின் சுளையு மிளவா ழையினின் னெழிலங் கனியும் களமாங் கனியின் றிரளுங் கலவிக் குளமா யினயோ சனை கொண் டனவே | 796 |
வனமா வினிருங் கனியுண் டுமதர்த் தினவா ளையிரைத் தெழுகின் றனகாண் கனவா ழைமடற் கடுவன் மறையப் புனவா னரமந் திபுலம் புவகாண் | 797 |
வளமா நிலையே திமருப் பினிட விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக் குளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத் தளவா யுகுகின் றனகாண் டகவோய் | 798 |
இவைசெந் நெலிடை கருநீ லவன மவையந் நெலிடை கழுநீ ரழுவ முவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு நகைவென் றனதா மரைநாண் மலரே | 799 |
கழையா டுகரும் பினறைக் கடிகைப் பொழிசா றடுவெம் புகைபொங் கியயற் றழையோ டுயர்சோ லைகடாம் விரவி மழையோ டுமலைத் தடமொத் துளவே | 800 |
இதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர், மருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்
கருநீ லமணிந் தகதுப் பினயற் கருநீ லமணிந் தனகண் ணிணைகள் கருநீ லமணிக் கதிர்கட் டியெனக் கருநீ லமணிந் தகருங் குழலே | 801 |
வளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல் வளர்செங் கிடையி னொளிவவ் வியவாய் வளர்செங் கிடையின் வளையா டும்வயல் வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை | 802 |
வயலாம் பனெறித் தவகைத் தழையன் வயலாம் பன்மிலைத் தவடிச் சவியன் வயலாம் பன்மலிந் தபரப் புடையன் வயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள் | 803 |
வளர்தா மரையல் லிமலர்த் தியகை வளர்தா மரையல் லிமயக் குமொளி வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல் வளர்தா மரையல் லிவனத் திடையாள் | 804 |
நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந் தொளிர்வார் குழலா ளொருமா தவளு ளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத் கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள் | 805 |
மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர நுதிமா ளிகைமேல நுடங் குகொடி கதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந் ததுகா ணமதா ரொளிமா நகரே | 806 |
அறவே தியரா குதியம் புகையார் உறவே திகைவிம் மியவொண் புறவ நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற் புரவே திகையே றுவகாண் புகழோய் | 807 |
விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்
இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட் பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய மன்னவ குமரரும் வறுமை நீங்கினார் | 808 |
இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம் துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே | 809 |
துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற் கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன் பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார் | 810 |
காவியங் கருங்கணார் கமழ வூட்டிய வாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க் கோவையங் குழுநிலை மாடம் யாவையும் பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே | 811 |
மல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு முல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே | 812 |
பயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்
செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட் கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு நம்பிமார் வருகென நாறு நீரொளி அம்பொன்மா மணிமுடி யரச னேயினான் | 813 |
விசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்
அருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர் இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச் சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர் மருளுறு மனத்தினன் மன்னன் னாயினான் | 814 |
பயாபதி மக்களைத் தழுவுதல்
திருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக் கருவரை யனையவெங் களிதல் யானையா னிருவரும் வருகென விரண்டு தோளினு மொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான் | 815 |
மானவா மதகளிற் றுழவன் மக்கடந் தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட் கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான் | 816 |
என்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித் துன்னிய வனத்துக டுதைந்த வாறென மன்னவ னருளலு மகர வார்குழை மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான் | 817 |
விசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்
போற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான் சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ் வாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான் | 818 |
பயாபதியின் கழி பேருவகை
யானுமங் கிவனொடு மடிக ளேகினேன் வானுய ரிமகரி மருங்கி லென்றுபூந் தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந் தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான் | 819 |
சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம் அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத் தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப் படரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் | 820 |
சூளாமணி முதல் பாகம் முற்றிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.