351 | காயம்வாட்டி யுய்த்தலிற் கண்டநன்மை யுண்டெனின் தீயினாற் சுடுதலுந் தெற்றியேறி வீழ்தலு நோயினாற் றிரங்கலுந் நோன்மையென்ன லாம்பிற நீயனா யிதற்கினி நேமியென்று சொல்லென. |
352 | புண்ணினைத் தடிதலும் போழவாற்றி நிற்றலும் கண்ணினைக் கழிகள்ளான் மிண்டிக்கொண்டு நீட்டலும் விண்ணுயர் நெடுவரைவ் வீற்றுவீற்று வீழ்தலும் அண்ணலார்தஞ் செய்கையு மாவதில்லை யல்லதும். |
353 | தூக்கடம்மை யாக்கலே தொல்லைநல் லறம்மெனின் நாக்களைப் பறித்தலுந் நான்றுவீழ்ந்து பொன்றலுந் தீக்கள் பாய்ந்துசாதலுந் தீயசெங் கழுவ்வின்மேன் மேக்கினைக்கொண் டேறலு மேன்மையென்ன லாம்பிற. |
354 | தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம் மூனமில் தியானமே யுணர்ச்சியோ டுபாயமும் மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ் ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும். |
355 | விருக்கமூலி யாகலும் வெள்ளிடை யுறைதலும் மிருத்தனிற்ற லன்றியு மிட்டகூறை யெய்தலும் மருக்கையின் மயானத்துட் சேக்கையும் மனைகளை வருச்சியார் புகுதலும் மற்றவற்றொ டுண்டலும். |
356 | அத்திட்டாடை கோடலும்மமையுமென்ன நீங்கலும் பெற்றதன்னிற் சேக்கையும்பேர்த்துண்ணா தொழிதலும் குற்றமென்னப் பிச்சையுங்குறித்துழிப் புகாதுதான் றுற்றியுய்த்த றன்னொடுதுதாங்கென்றாத்தர் சொன்னவே. |
357 | பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும் நேருமனையி லுண்மையா னீரும்வேண்டி னீரெனக் கூரிமம் வெயில்பசி கூடலுங் கூடினாற் சேர்தலில்லை நல்லறஞ் சிந்தையென்று செப்பலும். |
358 | அருந்தடிக ளீரவும் மறஞ்செய்வாளிற் போழவும் வருந்தவான துள்ளநீ மாட்சிநன்று மென்றியா லிருந்துநின்று நன்னெறிக் கிடைப்படாத சிந்தையாற் பெருந்தவங்கள் செய்ந்நரைப் பேசுவாயோர் பேதையே. |
359 | புத்தராகு மாண்பினா போதிகத்து வர்கட்காம் பத்துமாய பாரமீதை பாரவட்ட மென்றலும் சித்தராகு மாண்பினாற் சீலமும் வதங்களும் மெத்துணையும் மாயிரம்மா மென்றுமியாமு மென்றனள். |
360 | உடம்பினுள்ள பல்லுயிர் சாவவூனுண் மானுக்குத் தடங்கொண்மா வரைமிசைத் தன்னையீத னன்மையேற் படம்புனைந்த வர்கடாம் பலருமுண்ணு நீரினுள் விடம்பெய்தாற்கு நன்றுகொல் வியாதியாளன் றீர்கென. |
361 | அல்லவர்கள் சாதலை அறிந்தனன் னவனெனில் நல்லதில்லை நஞ்சினா லென்றுநாட்டு வாயெனி னெல்லையில்ல பல்லுயிர் தன்கணுள்ள வெஞ்சலுங் கொல்லவந்த வூன்களும் குற்றமென்ற வாறுகொல். |
362 | நீட்சி திரிவா மயிருகி¡; காட்டினை மாட்சியில் லாமயிர் மன்னுயி ருள்வழித் தாட்க ணிமிருந் தலைநிமி ராவெழல் காட்சி மரத்திற்குக் காறலை யெங்கம். |
363 | மரங்கள் வளருமென மன்னுங் கூம்பி விரிந்த விலையின் வேற்றுமை சொன்னாய் பொருந்து மிவையு மல்லவு மன்றோ வொருங்கிவ் வுலகத் துயிர்களு மென்றாள். |
364 | வயாத்திரு வாக்கி வளர்பூ சணிக்குத் தயார்செய்கை தீதென்னுந் தத்துவங் கண்டா யுயாப்பிழைத் தாய்மெழு கூனொடு பட்ட வயாவதற் கீண்டுப் பயத்தலி லன்றே. |
365 | யாதினு மாழ்குமம் மாழ்கியு மென்றுழி நீதின்னுந் தோலை நெருப்பொடு கூட்டத்தி னோதினை தேறுற நீர்க்குரைத் தாய்மற்றுஞ் சேதனை யில்லாய் திரிவென்னை வண்ணம். |
366 | அரும்பு மலரு மரும்பிணி தீர்வு மொருங்குதங் காரணத் தாக்க முணர்த்து மரங்களு மன்னுயி ரெய்தின வென்ன விரும்பொடு காந்த மியைவி றிரிவே. |
367 | ஒப்ப மரங்கட் குயிருண்மை யாமினி யிப்படித் தோன்று மிருதுக்கள் சார்ந்தெனச் செப்பிய வேதுத் திரிவெனக் காட்டிய வெப்பங் குளிரவை தாமவை யேயால். |
368 | மரங்களை யொப்புமை யாலுயி ரென்னக் கிரந்தியும் வெப்பங் கிளக்குவை யாயி னிரந்த வுடம்பின் விகார நினக்குப் பரந்துண ருண்மையைப் பார்ப்படுத் தாயால். |
369 | வாட்டங்க ளுண்மையின் வாழ்மரஞ் சேர்ந்தவை நாட்டிய வாதலி னல்லுயி ரோவெனக் காட்டிய தோலொத் திராமையும் வாடுமத் தோட்டஞ்செய் சேம்புயிர் தொன்முடி வன்றோ. |
370 | அற்ற வுடம்புக ளாறுத லான்மரந் தெற்ற வுயிருண்மை செப்பத்தி னாமெனப் பெற்ற பிழைசொல்லிப் பித்தெழுந் தாரொப்பக் குற்ற மிவையெனக் கூறிதி யன்றோ. |
371 | காட்டின மண்ணை முதலா வுடையன வோட்டி யுரைத்த வுயிரென வொட்டலர் நாட்டினுள் வாழ்பவ ரின்னரென் றாவந்த நாட்டை யவரென்ன நாட்டிய வாறே. |
372 | தாவர மாய மரமிவை தாமென யாவருஞ் சொல்லுப வ·து மறிந்திலை நீவி ரெவர்சொல்லச் சொல்லினீ ரென்றுநின் சீவரம்போற் கட்டில் செப்புவ தென்னோ. |
373 | மக்களுட் டோன்றிய போழ்த மரவுயிர்க் கொப்ப வுடம்பறி வன்றியொன் றில்லெனிற் றக்கதன் றன்மையுடைப் போதி சத்துவன் மிக்கதென் னோதிக்கு வேற்றுமை வேண்டார். |
374 | நாண முடைய மரமுத லியாவையும் மூணின வாழ்ந்துமுண் ணாவிடிற் சாதலைக் காணவும் பட்டது கஞ்சியோ டல்லதை யாண மிலாப்பொரு ளாட்சியர் போன்றே. |
375 | மயக்குடை மாட்சியி னார்க்கு மரங்கட்கு மன்னுயிர்தாம் பயப்பட வொக்கு மெனவே யெனமன்னும் பற்றிலனாய் வியப்புடை யாகம மீதென நீயும் விரித்துரைக்கு நயப்பிர மாணங்கண் மேற்குற்ற நாடுவன் யானெனவே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.