376 | நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங் குற்ற மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே முற்ற மவளது பக்க மறிதலில் மொக்கலனே. |
377 | வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப் படுதலினாற் காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா நாசத் தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம் தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது சொல்லினனே. |
378 | நின்றன வேயென்று நில்லலவேயென்று நேர்பவர்க்கு மொன்றென வேயும்பின் வேறெனவேயுந்தம் முண்மையின்கட் சென்றன வேயென்றுஞ் செல்லலவேயென்றுஞ் செப்பினர்க்கே அன்றென லாமோ வறைந்தபல்குற்ற மவையவையே. |
379 | நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற் சென்ற குணங்க ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந் தொன்றங்கு நின்ற பொருளுள்ள தேலா தெனவுரைத்தான். |
380 | கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி னீடில வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய் மூடலை யாவதன் காரண மென்னை முடிகுணத்திற் கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள். |
381 | குணங்களல் லாற்பொருள் வேறில்லை யாயிற் குறிப்பொருளாம் பிணங்கல வாகிப் பிறபிற வாயிற பிறபொருளா முணர்ந்தன தாமிகு சொல்லினு மொன்றெனி னொன்றவையா நுணங்கிய கேள்வியி னாயொன் றுரையென நோக்கினனால். |
382 | நிலையா தெனவு முயிரில்லையென்று நெறிமையினாற் றொலையாத் துயரொடு தூய்தன்மையென்றின்ன தொக்குளவாக் கலையா விழுப்பொருட் கந்தங்களைந்திற்கும் காட்டுதலான் மலையா திதுநுங்கண் மார்க்கத்தொடென்றனள் மாணிழையே. |
383 | ஆரிய சத்தைய லாற்கந்தம்வேறில்லை யேற்குறியா மாரிய சத்தையுங் கந்தமும்வேறெனின் வேறவையாம் போ¢வை தாமிரண் டொன்றினுக்கேயெனி னொன்றவையாங் கூரிய சிந்தையி னாயொன்றுசொல்லென்று கூறினளே. |
384 | சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம் சொல்லல னென்ன வினவினுமென்னினுஞ் சொல்லிலையாம் சொல்லுவ னல்லன் ஒருவகையாச் சொலினவ் வகையாற் சொல்லிய குற்றங்க டுன்னுமெனவது சொல்லினனே. |
385 | தன்மையி னன்மையுந் தன்னல்பொருள்களி னுண்மையுந்தம் பன்மை யுடையவப் பண்புகளெல்லா முடனுரையுஞ் சொன்மை யுணரா தவர்கட்குத்தான்சொலற் பாடின்மையாற் புன்மை யுடைய புறத்தீருரைக்கு முரையுமென்றாள். |
386 | சேற்பொருள் போலரி சிந்தியகண்ணாய் சிதர்ந்துரைக்கு நூற்பொரு டாம்பரி ணாமத்திரிவென நோக்குதியேற் பாற்பொரு டான்றயி ராயபொழுதின்கட் பாழ்த்திலதேற் பாற்பொரு ளேயின் றயிரெனச்சொல்லப் பழுததென்றான். |
387 | உருவப் பிழம்பப் பொருளென்றுரைப்பனிப் பாறயிர்மோர் பருவத்தி னாம்பரி யாயப்பெயரென்பன் பாலழிந்து தருவித் துரைத்த தயிருருவாய்மும்மைத் தன்மையதாந் திருவத்த தென்பொரு ளாதலைத்தேர தெளியிதென்றாள். |
388 | பெற்றது தானுங்கும் மாயத்திரிபு பயற்றியல்டே யிற்ற திதுவென திட்டமென்பாயிவ் விரும்மையினுந் தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னைதேற்றினித் தேற்றிலையேன் மற்றது வாமை மயிரெனச்சொல்லுவன் மன்னுமென்றான். |
389 | கெட்ட திரிட்சியுந் தோன்றியசாந்தும் பொருளெனவும் பட்டன வப்பொருள் பையைகளேஎன்னும் பான்மையினால் விட்ட திரள்வினுந் தோன்றியசாந்தினும் வேற்றுமையாம் நட்டமுந் தோற்றமு நாட்டேனுருவிற்கு நானுமென்றாள். |
390 | திரியும் பொருள்க டிரிந்தாம்பயறுகும் மாயமுமாய் விரியும் மெனவது வேண்டுகின்றாயறக் கேட்டமைக்கேற் கரியும் முடையன் பயறொடுநீருங் கலந்துபெய்தா லெரியுறு கின்றதன் றேயிதுவோவொப்ப விற்றதென்றான். |
391 | பருமை யுடைய பயற்றின்வழியொன்று பாவியுண்டா யருமை யுடையவந் நீருக்குமாவியன் றோவதன்றி யிருமையுங் கெட்டுட னாயிற்கும்மாயமு மில்லற்கனும் பெருமையி னாலொன்று பெற்றொன்றுபேறின்மை பேதைமையே. |
392 | கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங் குணமென்றியேற் கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினற்காற் கெடுவது தோற்ற நிலையுத றானப் பொருளெனவும் படுவ· தாக வுரைப்ப தியாதின் பவத்ததென்றான். |
393 | கூறிய தெக்குண மக்குணந்தானக் குணிப்பொருளே தேறிய தெக்குணி யக்குணிதீர்ந்தில பல்குணமும் வேறென வொன்றென வில்வகைவேண்டுகின் றேற்கவைதா மாறென்னுங் கொள்ளா முடிபுமொழிநின் மயக்கமென்றாள். |
394 | புற்கல மாய முதற்பொருடத்தமுட் புல்லினவாய்க் கற்களு நீருந் நிலத்தொடுகற்றழ லென்றினைய பற்பல கூற்றாற் பிறங்கிப்பரக்குந் தியமென்னையோ வுற்றவை யொன்றொன்றி னுட்புகுமோத்துடை யாய்க்கெனலும். |
395 | யாத்தற் கமைந்த குணத்தின வாய வணுப்பொருள்க ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா லேத்தற் கியைந்த விரண்டணு வாதியி னின்னணமா மோத்திற்கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே. |
396 | இரண்டணு வாதியி னின்னணமேறுநின் கந்தமெனிற் றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன்றீண்டு மிடத்தவைதா முருண்டன தாமொன்றி னுள்ளும்புடையு முடைமையினாற் றெருண்டனம் பாகுபா டுற்றற்குமென்றனன் றேரனுமே. |
397 | ஓரிட மாய முதற் பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப் போ¢ட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா யாரிட மாய வறிவிற்கு மின்னண மாதலினா னோ¢டத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள். |
398 | வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின் காய தங்கை யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய் கண்டாயிம் மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான் பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான். |
399 | வெய்தாய தீயுங் குளிராகிய நீரும் விண்டோய்ந் தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற் பொய்யாகு மென்னா யவைபுத்த வசன மென்பாய் செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான். |
400 | கந்தின்கட்ட காணாய் களியானையை யில்லை யென்பாய் வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ தந்திங் குரைத்த வுரைதானுங் கெடுக வென்றான் வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.