கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

நீலகேசி-41

376நிற்றலுங் கேட்டினோ டுண்மையு மின்மையு நேர்தலினு
மொற்றுமை வேற்றுமை தம்மையு மொட்டப் படுதலினுங்
குற்ற மிவையிவை யாதலைக் கேளெனக் கூறினனே
முற்ற மவளது பக்க மறிதலில் மொக்கலனே.


377வேயொத்த தோளி நிலையுதல் வேண்டப் படுதலினாற்
காயத்தின் றன்மைய வாயெக் கருமமுங் காண்பரிதா
நாசத் தவமெனிற் றோன்றுவ தாமு நவநவமாம்
தோசத்த வாநின் பொருளெனக் கேட்டிது சொல்லினனே.


378நின்றன வேயென்று நில்லலவேயென்று நேர்பவர்க்கு
மொன்றென வேயும்பின் வேறெனவேயுந்தம் முண்மையின்கட்
சென்றன வேயென்றுஞ் செல்லலவேயென்றுஞ் செப்பினர்க்கே
அன்றென லாமோ வறைந்தபல்குற்ற மவையவையே.


379நின்ற குணங்களி னித்தியமென்று நிலையிலவா
மென்ற குணங்க ளநியத மென்று மியம்புதலாற்
சென்ற குணங்க ளிருமையு மல்ல தவற்றினிற்றீர்ந்
தொன்றங்கு நின்ற பொருளுள்ள தேலா தெனவுரைத்தான்.


380கேடில வாய குணத்தி னிலையுங் கெடுங்குணத்தி
னீடில வென்பது நேர்ந்தினி யப்பொரு ணேர்தலில்லாய்
மூடலை யாவதன் காரண மென்னை முடிகுணத்திற்
கூடல தாய குணிப்பொருள் கூறினர் யாவரென்றாள்.


381குணங்களல் லாற்பொருள் வேறில்லை யாயிற் குறிப்பொருளாம்
பிணங்கல வாகிப் பிறபிற வாயிற பிறபொருளா
முணர்ந்தன தாமிகு சொல்லினு மொன்றெனி னொன்றவையா
நுணங்கிய கேள்வியி னாயொன் றுரையென நோக்கினனால்.


382நிலையா தெனவு முயிரில்லையென்று நெறிமையினாற்
றொலையாத் துயரொடு தூய்தன்மையென்றின்ன தொக்குளவாக்
கலையா விழுப்பொருட் கந்தங்களைந்திற்கும் காட்டுதலான்
மலையா திதுநுங்கண் மார்க்கத்தொடென்றனள் மாணிழையே.


383ஆரிய சத்தைய லாற்கந்தம்வேறில்லை யேற்குறியா
மாரிய சத்தையுங் கந்தமும்வேறெனின் வேறவையாம்
போ¢வை தாமிரண் டொன்றினுக்கேயெனி னொன்றவையாங்
கூரிய சிந்தையி னாயொன்றுசொல்லென்று கூறினளே.


384சொல்லலன் யானெனச் சொல்லுவையாயினுஞ் சொன்மலைவாம்
சொல்லல னென்ன வினவினுமென்னினுஞ் சொல்லிலையாம்
சொல்லுவ னல்லன் ஒருவகையாச் சொலினவ் வகையாற்
சொல்லிய குற்றங்க டுன்னுமெனவது சொல்லினனே.


385தன்மையி னன்மையுந் தன்னல்பொருள்களி னுண்மையுந்தம்
பன்மை யுடையவப் பண்புகளெல்லா முடனுரையுஞ்
சொன்மை யுணரா தவர்கட்குத்தான்சொலற் பாடின்மையாற்
புன்மை யுடைய புறத்தீருரைக்கு முரையுமென்றாள்.


386சேற்பொருள் போலரி சிந்தியகண்ணாய் சிதர்ந்துரைக்கு
நூற்பொரு டாம்பரி ணாமத்திரிவென நோக்குதியேற்
பாற்பொரு டான்றயி ராயபொழுதின்கட் பாழ்த்திலதேற்
பாற்பொரு ளேயின் றயிரெனச்சொல்லப் பழுததென்றான்.


387உருவப் பிழம்பப் பொருளென்றுரைப்பனிப் பாறயிர்மோர்
பருவத்தி னாம்பரி யாயப்பெயரென்பன் பாலழிந்து
தருவித் துரைத்த தயிருருவாய்மும்மைத் தன்மையதாந்
திருவத்த தென்பொரு ளாதலைத்தேர தெளியிதென்றாள்.


388பெற்றது தானுங்கும் மாயத்திரிபு பயற்றியல்டே
யிற்ற திதுவென திட்டமென்பாயிவ் விரும்மையினுந்
தெற்றெனத் தீர்ந்தோர் பொருளென்னைதேற்றினித் தேற்றிலையேன்
மற்றது வாமை மயிரெனச்சொல்லுவன் மன்னுமென்றான்.


389கெட்ட திரிட்சியுந் தோன்றியசாந்தும் பொருளெனவும்
பட்டன வப்பொருள் பையைகளேஎன்னும் பான்மையினால்
விட்ட திரள்வினுந் தோன்றியசாந்தினும் வேற்றுமையாம்
நட்டமுந் தோற்றமு நாட்டேனுருவிற்கு நானுமென்றாள்.


390திரியும் பொருள்க டிரிந்தாம்பயறுகும் மாயமுமாய்
விரியும் மெனவது வேண்டுகின்றாயறக் கேட்டமைக்கேற்
கரியும் முடையன் பயறொடுநீருங் கலந்துபெய்தா
லெரியுறு கின்றதன் றேயிதுவோவொப்ப விற்றதென்றான்.


391பருமை யுடைய பயற்றின்வழியொன்று பாவியுண்டா
யருமை யுடையவந் நீருக்குமாவியன் றோவதன்றி
யிருமையுங் கெட்டுட னாயிற்கும்மாயமு மில்லற்கனும்
பெருமையி னாலொன்று பெற்றொன்றுபேறின்மை பேதைமையே.


392கெடுவன தோன்றுவ நிற்பன தாமுங் குணமென்றியேற்
கெடுவன தோன்றுவ நிற்பன தாங்குண மாயினற்காற்
கெடுவது தோற்ற நிலையுத றானப் பொருளெனவும்
படுவ· தாக வுரைப்ப தியாதின் பவத்ததென்றான்.


393கூறிய தெக்குண மக்குணந்தானக் குணிப்பொருளே
தேறிய தெக்குணி யக்குணிதீர்ந்தில பல்குணமும்
வேறென வொன்றென வில்வகைவேண்டுகின் றேற்கவைதா
மாறென்னுங் கொள்ளா முடிபுமொழிநின் மயக்கமென்றாள்.


394புற்கல மாய முதற்பொருடத்தமுட் புல்லினவாய்க்
கற்களு நீருந் நிலத்தொடுகற்றழ லென்றினைய
பற்பல கூற்றாற் பிறங்கிப்பரக்குந் தியமென்னையோ
வுற்றவை யொன்றொன்றி னுட்புகுமோத்துடை யாய்க்கெனலும்.


395யாத்தற் கமைந்த குணத்தின வாய வணுப்பொருள்க
ணீத்தற் கரியன நீத்த வருக்க நெறிமையினா
லேத்தற் கியைந்த விரண்டணு வாதியி னின்னணமா
மோத்திற்கிடந்த வகையிது கேளென் றுரைத்தனளே.


396இரண்டணு வாதியி னின்னணமேறுநின் கந்தமெனிற்
றிரண்டன வாய்த்தம்முட் சென்றுடன்றீண்டு மிடத்தவைதா
முருண்டன தாமொன்றி னுள்ளும்புடையு முடைமையினாற்
றெருண்டனம் பாகுபா டுற்றற்குமென்றனன் றேரனுமே.


397ஓரிட மாய முதற் பொருட் குள்ளும் புடையுஞ்சொல்லிப்
போ¢ட மாக்கிப் பிளப்ப னெனவும் பிதற்றுகின்றா
யாரிட மாய வறிவிற்கு மின்னண மாதலினா
னோ¢டத் தாற்பன்மை யெய்தி யுருவா நெறியுமென்றாள்.


398வண்டாயுங் கோதாய் வரைநெல்லியின் காய தங்கை
யுண்டாய போதே யுறையூரகத் தில்லை யென்பாய்
கண்டாயிம் மெய்ம்மை பிறர்காண்டற் கரிய தென்றான்
பெண்டான மீயு மறங்கொண்ட பெருமை யினான்.


399வெய்தாய தீயுங் குளிராகிய நீரும் விண்டோய்ந்
தைதாய காற்று மவையாரு மறிப வென்றாற்
பொய்யாகு மென்னா யவைபுத்த வசன மென்பாய்
செய்தாய் முழுக்கூ ழதுபோலச் சிதைக்க வென்றான்.


400கந்தின்கட்ட காணாய் களியானையை யில்லை யென்பாய்
வந்திங்க ணின்ற பொழுதுண்மை மறுக்க லாமோ
தந்திங் குரைத்த வுரைதானுங் கெடுக வென்றான்
வெந்திங்கு வித்தின் னனைத்தாகிய வீடு கண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;