கடற்கரையில் மணற்பரப்பி நடக்க முடியாது
கானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது
கச்சாயில் புளியிலே ஊஞ்சலும் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமொன் றாடி
காலோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளை பெண்டென் றிருந்தேன்
ஓடோடி புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்
கண்டபிணி கொண்டவலி கால்மாறிட ஓட
கண்ட சிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்
ஏறுமயில் ஏறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை தெரியுமடி தோழி
விளையாட வெகுதூரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலை தணியுமடி தோழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.