கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 3 ஏப்ரல், 2013

ஊஞ்சல் பாடல்கள்


கடற்கரையில் மணற்பரப்பி நடக்க முடியாது
கானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது

கச்சாயில் புளியிலே ஊஞ்சலும் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமொன் றாடி

காலோலை சரசரக்க வண்டென் றிருந்தேன்
காக்கொத்து மச்சாளை பெண்டென் றிருந்தேன்

ஓடோடி புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்
ஒரு கிண்ணச் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்

கண்டபிணி கொண்டவலி கால்மாறிட ஓட
கண்ட சிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்

ஏறுமயில் ஏறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை தெரியுமடி தோழி

விளையாட வெகுதூரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலை தணியுமடி தோழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;