| அபலம் | பயனின்மை ; வலியின்மை ; காய்ப்பு நின்ற மரம் ; இழப்பு ; திமிங்கிலம் ; கொழு . |
| அபலன் | வலியற்றவன் . |
| அபலை | பெண் ; துணையற்றவள் . |
| அபவர்க்கம் | முத்தி , வீடுபேறு . |
| அபவருக்கம் | முத்தி , வீடுபேறு . |
| அபவருத்தனம் | அகற்றுதுல் ; சுருக்குதல் . |
| அபவாதம் | பழிச்சொல் ; வீண்பழி . |
| அபவேட்டிதம் | அபிநயவகை . |
| அபாக்கியம் | பேறின்மை . |
| அபாங்கம் | கடைக்கண் பார்வை ; நெற்றிக் குறி . |
| அபாண்டம் | பொய்க்குற்றம் ; இடுநிந்தை . |
| அபாத்திரம் | தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் . |
| அபாத்திரன் | தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் . |
| அபாம்பதி | கடல் . |
| அபாமார்க்கம் | நாயுருவி என்னும் பூடுவகை . |
| அபாயம் | கேடு , ஆபத்து . |
| அபாரசக்தி | அளவிலா ஆற்றல் . |
| அபாரணை | உண்ணாமை . |
| அபாரம் | அளவற்றது . |
| அபாவம் | இன்மை ; ஓர் அளவை . |
| அபானம் | கடுக்காய் மரம் ; மலவாய் . |
| அபானவாயு | கீழ்நோக்கிச் செல்லும் காற்று . |
| அபானன் | பத்து வாயுக்களுள் ஒன்று . |
| அபானியம் | கடுக்காய் . |
| அபி | அதட்டல் , கண்டித்தல் , கேள்வி , ஐயம் , அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு . |
| அபிகதம் | அருகடைதல் . |
| அபிகாதம் | அடித்தல் , வருத்தம் . |
| அபிகாயம் | சூம்புகை ; காசநோய்வகை . |
| அபிசரன் | தோழன் . |
| அபிசாதன் | உயர்குலத்தோன் . |
| அபிசார ஓமம் | இறப்பைக் கருதிச் செய்யும் வேள்வி . |
| அபிசாரகம் | மந்திரத்தால் கொல்லல் . |
| அபிசாரம் | தீங்கு விளையச் செபிக்கும் மந்திரம் ; சூனியம் வைத்தல் . |
| அபிசாரி | வேசி ; விலைமகள் . |
| அபிசித்து | பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் எட்டாவது . |
| அபிட்டம் | பாதரசம் . |
| அபிடேகம் | திருமுழுக்கு ; பட்டஞ்சூட்டும் சடங்கு ; திருமுடி . |
| அபிதா | ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . |
| அபிதானம் | பெயர் ; மறைவு . |
| அபிதேயம் | செஞ்சொல்லால் சொல்லத்தக்கது . |
| அபிநயம் | நடிப்பு . |
| அபிநயன் | கூத்தன் . |
| அபிநயித்தல் | நடித்தல் . |
| அபிநவம் | புதியது . |
| அபிநிவேசம் | கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் . |
| அபிப்பிராயம் | நோக்கம் , கருத்து . |
| அபிமதம் | விருப்பம் ; இணக்கம் . |
| அபிமந்திரித்தல் | மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல் . |
| அபிமானபுத்திரன் | வளர்ப்பு மகன் ; வைப்பாட்டி மகன் . |
| அபிமானம் | தன்மதிப்பு ; உள்ளக்களிப்பு ; பற்று ; அறிவு ; கொலை . |
| அபிமானி | பற்றுடையோன் . |
| அபிமானித்தல் | மதித்தல் ; ஆதரித்தல் . |
| அபிமுகம் | நேர்முகம் ; சன்னிதி . |
| அபிமுகி | எதிர்நோக்கிய முகமுடையது ; நேர்முகமாயிருப்பது . |
| அபியுக்தன் | அறிஞன் . |
| அபரசன் | பின்பிறந்தோன் , இளவல் . |
| அபரஞ்சி | புடமிட்ட பொன் . |
| அபரஞானம் | நூலறிவு . |
| அபரபக்கம் | தேய்பிறை . |
| அபரபட்சம் | தேய்பிறை . |
| அபரம் | பின் , முதுகு ; யானையின் பின்புறம் ; கவசம் ; பொய் ; மேற்கு ; நரகம் ; நீத்தார் கடன் ; அமரம் என்னும் படகைத் திருப்பும் தண்டு . |
| அபராங்கம் | உடலின் பிற்பகுதி . |
| அபராசிதன் | வெல்லப்படாதவன் ; சிவன் ; திருமால் ; ஒரு பல்லவ மன்னன் . |
| அபராணம் | பிற்பகல் . |
| அபராதம் | குற்றம் ; தண்டம் . |
| அபராதி | குற்றவாளி . |
| அபராந்தம் | மேனாடு ; பிற்பகல் . |
| அபராந்தர் | மேனாட்டார் . |
| அபரான்னம் | காண்க : அபராணம் . |
| அபரிச்சின்னம் | பகுக்கப்படாமை ; அளவிட முடியாதது . |
| அபரிமிதம் | அளவின்மை . |
| அபரியந்தம் | மட்டில்லாமை , எல்லையற்றது . |
| அபரூபம் | மூளி . |
| அபரோட்சஞானம் | காட்சி அறிவு . |
| அபரோட்சம் | காட்சி அறிவு . |
| அபின்னம் | வேறுபடாதது ; சிதைவின்மை . |
| அபின்னாசக்தி | சிவத்தினின்றும் வேறுபடாத சக்தி . |
| அபினி | காண்க : அபின் . |
| அபீட்டம் | மிகுவிருப்பம் . |
| அபுத்திபூருவம் | அறியாமல் நிகழ்ந்தது . |
| அபுதன் | மூடன் . |
| அபூதம் | இல்பொருள் . |
| அபூதவுவமை | இல்பொருளுவமை . |
| அபூபம் | அப்பவகை . |
| அபூர்வம் | புதியது ; அரியது ; அருமை . |
| அபூருவம் | புதியது ; அரியது ; அருமை . |
| அபேட்சகர் | காண்க : வேட்பாளர் . |
| அபேட்சித்தல் | விரும்புதல் . |
| அபேட்சிதம் | விரும்பப்பட்டது . |
| அபேட்சை | விருப்பம் , வேட்பு . |
| அபேதம் | வேற்றுமையின்மை . |
| அபோச்சியம் | உண்ணத்தகாதது . |
| அபோதம் | அறியாமை . |
| அம் | அழகு ; நீர் ; மேகம் ; விகுதி ; சாரியை . |
| அம்சம் | கூறு ; உரிமைப்பங்கு ; அன்னப்பறவை . |
| அம்பகம் | கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி . |
| அம்பட்டச்சி | நாவிதப்பெண் . |
| அம்பட்டத்தி | நாவிதப்பெண் . |
| அம்பட்டன் | நாவிதன் . |
| அம்படம் | புழுக்கொல்லிச் செடி ; ஆடுதின்னாப்பாளை . |
| அம்படலம் | அம்மி ; தேர் ; ஈயம் ; வெள்ளி ; மரக்கால் ; ஓடம் . |
| அம்பணத்தி | துர்க்கை . |
| அம்பணம் | நீர் ; மரக்கலம் ; பவளம் ; யாழ்வகை ; மரக்கால் ; துலாக்கோல் ; வாழைத்தண்டு . |
| அம்பணவர் | பாணர் . |
| அம்பர் | அவ்விடம் ; ஓர் ஊர் ; ஒருவகைப் பிசின் ; ஓர்க்கோலை . |
| அம்பரம் | ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் . |
| அம்பரவாணம் | எட்டுக்கால் பறவை . |
| அம்பரைநாதம் | அப்பிரகம் என்னும் கனிப் பொருள் . |
| அம்பல் | சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல் ; பழிச்சொல் ; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை . |
| அம்பலக்கூத்தன் | சிவபிரான் . |
| அம்பலகாரன் | ஊர்த்தலைவன் ; ஊர்ச் சபைத் தலைவன் ; கள்ளர் , வலையர் பட்டப்பெயர் . |
| அம்பலச்சாவடி | ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம் . |
| அம்பலத்தாடி | சிவபிரான் . |
| அம்பலத்தி | தான்றி ; தில்லைமரம் . |
| அம்பலம் | பலர்கூடும் வெளியிடம் ; ஊர்ச்சபை ; கழகம் ; தில்லையம்பலம் ; அமபலகாரன் . |
| அம்பலவாணன் | சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான் . |
| அம்பலவிருட்சம் | தில்லைமரம் . |
| அம்பலி | களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் . |
| அம்பறாத்தூணி | அம்புக்கூடு . |
| அம்பாயம் | மகப்பேற்றுவலி , பிரசவவேதனை . |
| அம்பா ஆடல் | தைந் நீராடல் . |
| அம்பாள் | தாய் ; பார்வதி . |
| அம்பாரம் | நெற்குவியல் ; களஞ்சியம் . |
| அம்பாரி | யானைமேல் அமைத்த இருக்கை . |
| அம்பால் | தோட்டம் . |
| அம்பாலிகை | தருமதேவதை ; பாண்டுவின் தாய் . |
| அம்பாவனம் | சரபப் பறவை . |
| அம்பி | தெப்பம் , தோணி ; மரக்கலம் ; தாம்பு ; இறைகூடை ; கள் ; காராம்பி ; ஓர் ஊர் ; தம்பி . |
| அம்பிகாபதி | அம்பிகை கணவனாகிய சிவபிரான் , கம்பர் மகன் . |
| அம்பிகை | பார்வதி ; தருமதேவதை ; துர்க்கை ; திருதராட்டிரன் தாய் ; தாய் ; அத்தை . |
| அம்பிகைதனயன் | விநாயகன் . |
| அம்பிகைபாகன் | சிவபிரான் . |
| அம்பு | நீர் ; கடல் ; மேகம் ; விண் ; உலகம் ; மூங்கில் ; கணை ; எலுமிச்சை ; பாதிரி ; திப்பிலி ; வெட்டிவேர் ; வளையல் ; சரகாண்ட பாடாணம் . |
| அம்புக்கட்டு | அம்புகளின் கட்டிய தொகுதி ; அம்பறாத்தூணி . |
| அம்புக்குதை | அம்பின்நுனி . |
| அம்புக்கூடு | அம்பறாத்தூணி . |
| அபியோகம் | இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு . |
| அபியோகி | ஊறுசெய்ய ஊக்குவோன் ; குறை கூறுவோன் ; முறையீடு செய்வோன் ; வாதி . |
| அபிரட்சை | முழுப் பாதுகாப்பு ; நிறைவான பாதுகாப்பு . |
| அபிராமம் | அழகு . |
| அபிராமன் | மனத்துக்கு இனியவன் . |
| அபிராமி | அழகுள்ளவள் ; பார்வதி . |
| அபிருசி | பெருவிருப்பம் . |
| அபிரூபன் | மிக்க அழகுள்ளவன் . |
| அபிலாசம் | விருப்பம் . |
| அபிலாசை | விருப்பம் . |
| அபிவாதனம் | பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை . |
| அபிவியத்தி | வெளிப்படுதல் . |
| அபிவிருத்தி | மிகுதியாய்ப் பெருகுதல் , வளர்ச்சி . |
| அபின் | கசகசாச் செடியின் பால் ; ஒரு மருந்து ; ஒரு போதைப் பொருள் |
| அம்மாமி | அம்மான் மனைவி . |
| அம்மாய் | காண்க : அம்மாச்சி . |
| அம்மாயி | காண்க : அம்மாச்சி . |
| அம்மார் | கப்பல் கயிறு . |
| அமார் | கப்பல் கயிறு . |
| அம்மாள் | தாய் . |
| அம்மாறு | பெருங்கயிறு , வடம் . |
| அம்மான் | தாயுடன் பிறந்தவன் ; அத்தை கணவன் ; பெண் கொடுத்தவன் ; தந்தை ; கடவுள் . |
| அம்புயாதம் | காண்க : தாமரை ; நீர்க்கடம்பு . |
| அம்புசாதன் | பிரமன் . |
| அம்புடம் | ஆடுதின்னாப்பாளை . |
| அம்புதம் | மேகம் ; கோரை ; தாமரை . |
| அம்புதி | கடல் ; கால்வாய் . |
| அம்புநிதி | கடல் . |
| அம்புப்புட்டில் | காண்க : அம்புக்கூடு . |
| அம்புமுது | ஒருவகை முத்து . |
| அம்புமுதுபாடன் | ஒருவகை முத்து . |
| அம்புமுதுவரை | ஒருவகை முத்து . |
| அம்புயன் | காண்க : அம்புசாதன் . |
| அம்புயை | திருமகள் . |
| அம்புரம் | கீழ்வாயிற்படி . |
| அம்புராசி | கடல் ; அம்புத்திரள் . |
| அம்புரோகிணி | தாமரை . |
| அம்புலி | சந்திரன் ; அம்புலிப் பருவம் ; சோளக்கூழ் . |
| அம்புலிப் பருவம் | குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை ; பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று . |
| அம்புலிமணி | காண்க : சந்திரகாந்தக்கல் . |
| அம்புலியம்மான் | சந்திரன் . |
| அம்புவாகம் | மேகம் . |
| அம்புவாசினி | எலுமிச்சை ; பாதிரி . |
| அம்புவி | பூமி . |
| அம்புளி | இனிய புளிப்பு . |
| அம்பேல் | விளையாட்டில் தடை நிகழ்த்தப் பிள்ளைகள் கூறும் சொல் . |
| அம்பை | பார்வதி ; வெட்டிவேர் ; கொக்கு மந்தாரை . |
| அம்போசன் | சந்திரன் . |
| அம்போதரங்கம் | அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகளுள் ஒன்று ; நீர்த்திரைபோல் நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாய்க் குறைந்து வருவது ; ஒத்தாழிசைக் கலிப்பா வகை . |
| அம்போதரம் | மேகம் ; கடல் . |
| அம்போதி | கடல் ; பாட்டின் உட்பொருள் . |
| அம்போருகத்தாள் | திருமகள் . |
| அம்போருகம் | தாமரை . |
| அம்போருகன் | பிரமன் . |
| அம்ம | கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் . |
| அம்மகோ | ஓர் இரக்கக் குறிப்புச் சொல் . |
| அம்மங்கார் | ஆசாரியன் மனைவி ; அம்மான் மகள் . |
| அம்மட்டு | அவ்வளவு . |
| அம்மண்டார் | தாய்மாமன் . |
| அம்மணக்கட்டை | ஆடை கட்டாத ஆள் . |
| அம்மணக்குண்டி | ஆடை கட்டாத ஆள் . |
| அம்மணத்தர் | சமணர் . |
| அம்மணத்தோண்டி | காண்க : அம்மணக்கட்டை . |
| அம்மணம் | ஆடையில்லாமை ; இடை ; விபசாரம் ; தகாத பேச்சு . |
| அம்மணி | பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல் . |
| அம்மந்தி | அம்மான் மனைவி . |
| அம்மம் | முலை ; குழந்தை உணவு . |
| அம்மன் | அம்மை ; தேவதை . |
| அம்மன்கட்டு | கூகைக்கட்டு . |
| அம்மன்கொடை | அம்மனுக்காகச் செய்யப்படும் ஊர்த் திருவிழா . |
| அம்மன்கொண்டாடி | மாரியம்மன் கோயில் பூசாரி . |
| அம்மனே | ஒரு வியப்புக் குறிப்பு . |
| அம்மனை | தாய் ; தலைவி ; அம்மானை விளையாட்டு ; அம்மானையாடும் கருவி . |
| அம்மனைப்பாட்டு | அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு . |
| அம்மனைமடக்கு | கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு . |
| அம்மனையோ | ஓர் அவலக் குறிப்பு . |
| அம்மனோ | ஓர் அவலக் குறிப்பு . |
| அம்மா | தாய் ; தாய்போல் மதிக்கப்படுபவள் ; வியப்பு இரக்கக் குறிப்பு ; ஓர் உவப்புக் குறிப்பு ; ஓர் அசைச்சொல் . |
| அம்மாச்சன் | தாய்மாமன் . |
| அம்மாச்சி | தாயைப் பெற்ற பாட்டி . |
| அம்மாஞ்சி | அம்மான் சேய் என்பதன் மரூஉ ; அம்மான் மகன் ; மூடன் . |
| அம்மாஞ்சிமதனி | அம்மான் மகனின் மனைவி . |
| அம்மாட்டி | கொட்டிக்கிழங்கு . |
| அம்மாடி | வியப்பு இரக்க இளைப்பாறுதற் குறிப்பு . |
| அம்மாத்தாள் | காண்க : அம்மாச்சி . |
| அம்மாத்திரம் | அவ்வளவு . |
| அம்புசம் | காண்க : தாமரை : நீர்க்கடம்பு . |
| அம்புயம் | காண்க : தாமரை : நீர்க்கடம்பு . |
| அம்புசாதம் | காண்க : தாமரை ; நீர்க்கடம்பு . |
| அமர்த்துதல் | அமைதியாய் இருக்கச் செய்தல் ; அடக்குதல் ; திட்டப்படுத்துதல் ; நிலைநிறுத்துதல் ; பெருமிதம்பட நடித்தல் . |
| அமர்தல் | உட்காருதல் ; இளைப்பாறல் ; அடங்குதல் ; பொருந்தல் ; விரும்புதல் . |
| அமர்வு | இருப்பிடம் . |
| அமரகம் | போர்க்களம் . |
| அமரத்துவம் | அழியாமை . |
| அமரநாயகம் | தண்டத் தலைமை ; தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம் . |
| அமரபக்கம் | காண்க : அபரபக்கம் . |
| அமரம் | அபரம் ; கண்ணோய் ; படகைத் திருப்பும்தண்டு ; ஆயிரம் காலாளை ஆளுகை ; அமரகோசம் . |
| அமரமாதர் | தெய்வப்பெண்டிர் . |
| அமரர் | பகைவர் ; வானோர் . |
| அமரர்கோன் | தேவர்களின் அரசன் , இந்திரன் . |
| அமரர்பதி | அமரர்கோன் ; தேவருலகம் . |
| அமரல் | பொலிவு ; பீடு ; மிகுதி ; நெருக்கம் . |
| அமரன் | தேவன் ; போர்செய்வோன் . |
| அமராங்கனை | தெய்வப்பெண் . |
| அமராசயம் | இரைப்பை ; கருப்பை . |
| அமராஞ்சனம் | சந்தனம் . |
| அமராடல் | போர்புரிதல் . |
| அமராபகை | விண்ணாறு , வான்கங்கை . |
| அமராபதி | இந்திரனின் தலைநகர் . |
| அமராபுரம் | இந்திரனின் தலைநகர் . |
| அமரார் | பகைவர் . |
| அம்மான்பச்சரிசி | செங்கழுநீர் ; செடிவகை . |
| அம்மானார் | அம்மானை ஆட்டம் ; அம்மானை நூல் . |
| அம்மானை | ஒருவித மகளிர் விளையாட்டு ; அம்மனை ; ஒருவகைப் பாடல் ; அம்மானைப் பருவம் ; கலம்பகவுறுப்புள் ஒன்று . |
| அம்மானைப்பருவம் | பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று ; சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை . |
| அம்மானை வரி | மகளிர் அம்மானையாடும்போது பாடும் பாட்டு . |
| அம்மி | அரைகல் . |
| அம்மிக்கல் | அரைகல் ; அம்மிக்குழவி . |
| அம்மிக்குழவி | அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல் . |
| அம்மிமிதித்தல் | திருமணத்தில் மணமகள் அம்மிமேல் கால்வைத்தல் . |
| அம்மியம் | கள் ; காளம் என்னும் சிறு சின்னம் . |
| அம்மிரம் | மாமரம் . |
| அம்மிலம் | புளிப்பு ; புளியமரம் ; புளிவஞ்சி . |
| அம்மிலிகை | புளி . |
| அம்முக்கள்ளன் | வஞ்சகன் . |
| அம்முதல் | வெளிக்காட்டாது ஒளித்தல் ; அமுக்குதல் ; மேகம் மந்தாரமாதல் . |
| அம்மெனல் | நீர்ததும்பல் குறிப்பு ; ஓர் ஒலிக் குறிப்பு . |
| அம்மேயோ | ஒரு துன்பக் குறிப்பு . |
| அம்மை | தாய் ; பாட்டி ; பார்வதி ; தருமதேவதை ; சமணசமயத் தவப்பெண் ; நோய்வகை ; அழகு ; அமைதி ; வருபிறப்பு ; கடுக்காய் ; நூல்வனப்புள் ஒன்று ; மேலுலகம் . |
| அம்மைகுத்தல் | அம்மைநோய் வாராது தடுக்கும் அம்மைப்பாலை உடலில் குத்திச் சேர்க்கை . |
| அம்மைப்பால் | அம்மை குத்துதற்குரிய பால் . |
| அம்மைமுத்து | வைசூரிக் கொப்புளம் . |
| அம்மையப்பன் | தாயும் தந்தையும் ; சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் , உமாபதி . |
| அம்மையார் | முதியவள் ; பெண்களைக் குறிக்கும் மரியாதைச் சொல் . |
| அம்மையார் கூந்தல் | பூண்டுவகை . |
| அம்மையோ | ஒரு வியப்புச் சொல் . |
| அம்மைவடு | அம்மைத் தழும்பு . |
| அம்மைவார்த்தல் | அம்மை போடுதல் . |
| அம்மைவிளையாடுதல் | அம்மை போடுதல் . |
| அம்மோ | இரக்கக் குறிப்புச்சொல் . |
| அமங்கலம் | மங்கலம் அல்லாதது , இழவு . |
| அமங்கலி | கைம்பெண் . |
| அமங்கலை | கைம்பெண் . |
| அமஞ்சி | கூலியில்லா வேலை . |
| அமிஞ்சி | கூலியில்லா வேலை . |
| அமஞ்சியாள் | கூலியில்லாமல் வேலைசெய்பவன் . |
| அமட்டு | அதட்டு ; ஏய்ப்பு . |
| அமட்டுதல் | சிக்கவைத்தல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் . |
| அமடு | சிக்குதல் . |
| அமண் | சமணசமயம் ; சமணர் ; அரையில் ஆடையின்மை ; வரிக்கூத்து வகை . |
| அமண்டம் | காண்க : ஆமணக்கு . |
| அமண்பாழி | சமணர் பள்ளி . |
| அமணம் | சமணசமயம் ; அரையில் ஆடையின்மை ; இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு . |
| அமணர் | சமணர் . |
| அமணானைப்படுதல் | காமவேறுபாடு அடைதல் . |
| அமதி | அமிழ்து ; காலம் ; சந்திரன் . |
| அமந்தி | நாட்டுவாதுமை . |
| அமயம் | பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் . |
| அமையம் | பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் . |
| அமர் | விருப்பம் ; கோட்டை ; போர் ; போர்க்களம் ; மூர்க்கம் . |
| அமர் | (வி) பொருந்து ; போராடு ; மாறுபடு . |
| அமர்க்களம் | போர்க்களம் ; ஆரவாரம் . |
| அமர்த்தல் | அமரச்செய்தல் ; ஏற்படுத்தல் ; மாறுபடுதல் ; பொருதல் . |
| அமர்த்தன் | திறமையற்றவன் . |
| அமாவசியை | சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் . |
| அமாவாசை | சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் . |
| அமாவாசைக்கண்டம் | நோய்மிக்கார்க்கு அமாவாசையன்று உண்டாகும் கேடு . |
| அமாவாசைக்கருக்கல் | அமாவாசை இருட்டு . |
| அமானத்து | ஒப்படைத்த பொருள் ; வைப்புநிதி . |
| அமானத்துச்சிட்டா | பொதுக்குறிப்பேடு . |
| அமானம் | அளவின்மை . |
| அமானி | பொறுப்பு ; புறம்போக்குநிலம் ; புளியாரைப்பூண்டு . |
| அமிசகம் | நாள் ; பங்கு . |
| அமிசகன் | பங்காளி . |
| அமிசம் | பங்கு ; தாயபாகம் ; பின்னம் ; அன்னப் பறவை ; புயம் ; செல்வாக்கு ; பெருவாழ்வு . |
| அமிசு | அணு ; சூரியன் ; பிரபை . |
| அமிசுகம் | இலை ; ஒளி ; மெல்லிய ஆடை . |
| அமிசை | அமைப்பு ; தலையெழுத்து , ஊழ்வினை . |
| அமித்திரன் | பகைவன் ; ஒரு முனிவன் . |
| அமிதம் | அளவின்மை . |
| அமிதவாதி | முனைப்பாளன் , தீவிரவாதி . |
| அமிர்தக்கொடி | சீந்தில் . |
| அமிர்தகலை | சந்திரகலை . |
| அமிர்தகிரணன் | சந்திரன் . |
| அமிர்தசஞ்சீவி | உயிர்தரும் ஒரு மூலிகை . |
| அமிர்தசஞ்சீவினி | உயிர்தரும் ஒரு மூலிகை . |
| அமிர்தம் | உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் . |
| அமிருதம் | உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் . |
| அமிர்தயோகம் | நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் . |
| அமிர்தர் | அமுதமுண்பவர் ; தேவர் . |
| அமிர்தவல்லி | சீந்திற்கொடி . |
| அமிர்தன் | தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன் . |
| அமிர்து | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிழ்து | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிர்தை | பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் . |
| அமிழ்த்தல் | ஆழச்செய்தல் . |
| அமிழ்தம் | காண்க : அமிர்(ரு)தம் . |
| அமிழ்தல் | ஆழ்தல் ; தோய்தல் . |
| அமினா | காண்க : அமீனா . |
| அமீர் | முகமதியச் செல்வன் ; முகமதியத் தலைவன் . |
| அமீன் | பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் . |
| அமீனா | பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் . |
| அமராவதி | காண்க : அமராபதி ; பொறுமைக் குணமுடையவள் . |
| அமரி | அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை . |
| அமுரி | அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை . |
| அமரிக்கை | அமைதி . |
| அமரிதம் | கடுக்காய் . |
| அமரியம் | குருந்தம் ; சண்பகம் . |
| அமரியள் | விரும்பியவள் . |
| அமரியுப்பு | சிறுநீர் உப்பு . |
| அமுரியுப்பு | சிறுநீர் உப்பு . |
| அமரியோன் | போர்வீரன் . |
| அமரிறை | இந்திரன் . |
| அமரேசன் | இந்திரன் ; வியாழன் . |
| அமரை | அமராவதி ; துர்க்கை ; கருப்பை ; கொப்பூழ்க்கொடி ; அறுகம்புல் ; தூண் ; சீந்தில் . |
| அமரோர் | தேவர் . |
| அமல் | நிறைவு ; அதிகாரம் ; விசாரணை . |
| அமல்செய்தல் | அதிகாரம் செலுத்துதல் ; நடை முறைக்குக் கொண்டுவரல் . |
| அமல்தல் | நெருங்குதல் ; பரவுதல் ; மிகுதியாதல் . |
| அமல்தார் | வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன் . |
| அமில்தார் | வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன் . |
| அமலகம் | காண்க : ஆமலகம் |
| அமலகமலம் | கோசலம் , பசுவின் சிறுநீர் . |
| அமலம் | மாசற்றது ; அழுக்கின்மை ; அழகு ; வெண்மை ; அப்பிரகம் ; மரமஞ்சள் ; நெல்லி . |
| அமலர் | மாசற்றவர் ; கடவுள் ; நெல்லிமுள்ளி . |
| அமலன் | குற்றமற்றவன் , கடவுள் . |
| அமலுதல் | மிகுதல் ; நெருங்கல் ; பொருந்தல் . |
| அமலை | ஆரவாரம் ; சோற்றுத்திரளை ; கடுக்காய் ; நெல்லிமரம் ; பூவந்திமரம் ; கட்டி ; கொப்பூழ்க்கொடி ; போரில்பட்ட அரசனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு ; மாசற்றவள் ; பெண்தெய்வம் . |
| அமலைதாரம் | அரிதாரம் . |
| அமளி | ஆரவாரம் ; கட்டில் ; படுக்கை அறை ; மிகுதி . |
| அமளிகுமளி | பேராரவாரம் . |
| அமளிபண்ணுதல் | கலகம் விளைத்தல் . |
| அமளை | ஒருவகைப் பூண்டு ; கடுகுரோகிணி ; மரவகை . |
| அமளைக்கண்ணி | கொள்ளு என்னும் தவசவகை . |
| அமன் | பன்னிரு சூரியர்களுள் ஒருவன் , அரியமன் . |
| அமனி | தெரு . |
| அமாத்தியன் | அமைச்சன் ; ஆலோசனை சொல்வோன் ; அருகில் இருப்போன் . |
| அமார்க்கம் | வழியல்லாதது ; சமயநெறி அல்லாதது . |
| அமாவசி | சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் |
| அய்யவி | காண்க : ஐயவி . |
| அய்யன் | காண்க : ஐயன் . |
| அய்யா | காண்க : ஐயா . |
| அயக்களங்கு | இரும்புத்துரு . |
| அயக்கம் | நோயின்மை . |
| அயக்கல் | அசக்கல் . |
| அமுத்தம் | நெல்லி ; வச்சநாபி ; கையாயுதம் . |
| அமுதகடிகை | நற்செயல்களுக்குரிய நாழிகை . |
| அமுதகதிரோன் | சந்திரன் . |
| அமுதகம் | அமிர்தம் ; பாற்கடல் ; கொங்கை ; நீர் . |
| அமுதகிரணன் | காண்க : அமிர்தகிரணன் . |
| அமுதகுண்டம் | இரப்போர் கலம் . |
| அமுதகுண்டை | இரப்போர் கலம் . |
| அமுதகுலர் | இடையர் ; சான்றோர் . |
| அமுதங்கம் | காண்க : சதுரக்கள்ளி . |
| அமுதசம்பூதன் | சந்திரன் . |
| அமுதசருக்கரை | சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை . |
| அமுதசாரணி | வெள்வேல மரம் . |
| அமுதசுரபி | எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் . |
| அமுததரம் | மஞ்சிட்டிச் செடி . |
| அமுததாரணை | உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு . |
| அமுதப்பார்வை | இனிய நோக்கு . |
| அமுதபுட்பம் | சிறுகுறிஞ்சாக்கொடி . |
| அமுதம் | அமிர்தம் ; சோறு ; நீர் ; சுவை ; உப்பு ; தயிர் ; பூமிச்சருக்கரை ; காட்டுக்கொஞ்சி ; விந்து ; திரிபலை ; திரிகடுகம் ; வீடுபேறு . |
| அமுதர் | அழிவில்லாதவர் ; கடவுள் ; தேவர் ; இடையர் . |
| அமுதவல்லி | அமிர்தவல்லி ; திருமாலின் மகள் ; சீந்தில் . |
| அமுதவெழுத்து | மங்கல வெழுத்து ; அ , இ , உ , எ , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் என்பன . காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து . |
| அமுதவேணி | கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன் . |
| அமுதன் | அழிவில்லாதவன் , கடவுள் . |
| அமுதாசனர் | தேவர் . |
| அமுதாரி | பூனைக்காலி . |
| அமுது | அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் . |
| அமுதுகுத்துதல் | உறைமோர் ஊற்றுதல் . |
| அமுதுசெய்தல் | உண்ணுதல் . |
| அமுதுபடி | அரிசி . |
| அமுதுபடைத்தல் | உணவு பரிமாறுதல் . |
| அமுதுமண்டபம் | கோயில் மடைப்பள்ளி . |
| அமுதூட்டுதல் | பிள்ளைக்கு ஏழாமாதத்தில் சோறூட்டுதல் . |
| அமூர்த்தம் | உருவமின்மை , அருவநிலை . |
| அமூர்த்தன் | வடிவம் இல்லாத சிவன் . |
| அமூர்த்தி | வடிவம் இல்லாத சிவன் . |
| அமூலம் | காரணம் இல்லாதது . |
| அமேத்திய நாறி | ஒரு பூண்டு ; ஒரு மரம் ; பீநாறிச் சங்கு . |
| அமேத்தியம் | மலம் ; மூங்கில் . |
| அமேயம் | அளவிட முடியாதவன் . |
| அமை | அமைவு ; அழகு ; தினவு ; மூங்கில் ; நாணல் ; அமாவாசை ; சந்திரனுடைய பதினாறாங்கலை . |
| அமை | (வி) அமர்த்து ; பொருத்து . |
| அமைச்சன் | மந்திரி ; வியாழன் . |
| அமைச்சு | அமைச்சன் ; அமைச்சு இயல் . |
| அமைத்தல் | படைத்தல் ; பதித்தல் ; சேர்த்தல் ; சமைத்தல் . |
| அமைதல் | உண்டாதல் ; தகுதியாதல் ; பொருந்தல் ; அடங்குதல் ; நிறைதல் ; உடன்படுதல் ; முடிதல் . |
| அமைதி | பொருத்தம் ; தன்மை ; நிறைவு ; காலம் ; செய்கை ; அடக்கம் ; சாந்தம் ; மாட்சிமை ; உறைவிடம் . |
| அமைப்பு | நியமிப்பு ; விதி ; ஊழ்வினை ; நிறுவனம் . |
| அமையம் | காண்க : அம(மை)யம் ; இலாமிச்சை . |
| அமைவடக்கம் | பண்பட்ட ஒழுக்கம் . |
| அமைவரல் | மனங்கொளல் . |
| அமைவன் | முனிவன் ; அருகன் ; கடவுள் . |
| அமைவு | அமைதி ; ஒப்பு . |
| அமோகப்படை | மருள் அகற்றும் படை . |
| அமோகபாணம் | குறிதவறாத அம்பு . |
| அமோகம் | மோகமின்மை ; மிகுதி ; குறிதவறாமை ; ஒரு வாயு . |
| அமோகன் | மயக்கம் அற்றவன் . |
| அமோகி | மயக்கம் அற்றவன் . |
| அய்யங்கார் | காண்க : ஐயங்கார் . |
| அய்யர் | காண்க : ஐயர் . |
| அமுக்கடி | மந்தாரம் , மூட்டமாயிருத்தல் ; மக்கள் நெருக்கம் . |
| அமுக்கன் | மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் . |
| அமுக்கி | மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் . |
| அமுக்கிரா | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்கிரி | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்குரா | அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி . |
| அமுக்குதல் | அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் . |
| அமுங்குதல் | அழுந்துதல் ; அமர்தல் ; நெரிபடுதல் . |
| அமுசம் | சிறு செருப்படைப் பூண்டு ; அன்னப் பறவை . |
| அமுசு | ஒட்டடை . |
| அயிந்திரதிசை | கிழக்கு . |
| அயிந்திரம் | காண்க : ஐந்திரம் . |
| அயிநார் | ஈளை . |
| அயிர் | ஐய உணர்வு ; நுண்மை ; நுண்மணல் ; கண்டசருக்கரை ; புகைக்கும் மணப்பொருள்வகை ; யானைக்காஞ்சொறி ; சிறுநீர் . |
| அயிர்த்தல் | ஐயமுறுதல் ; மறைத்தல் . |
| அயிர்த்துரைத்தல் | தலைமகளுடைய கண்சிவப்பு முதலியவற்றைத் தோழி கண்டு ஐயங்கொள்வதைக் கூறும் அகத்துறை . |
| அயிர்ப்பு | ஐயமுறுதல் ; மறைத்தல் ; குறிஞ்சியாழ்த் திறவகை . |
| அயிரம் | கண்டசருக்கரை . |
| அயிராணி | இந்திராணி ; பார்வதி . |
| அயிராபதம் | இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை . |
| அயிராவதம் | இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை . |
| அயிராவதன் | இந்திரன் ; சூரியனுடைய தேரைச் செலுத்தும் நாகருள் ஒருவன் . |
| அயிரி | நெட்டிலைப் புல் ; மீன்முள்ளரியும் கத்தி . |
| அயக்காந்தச் சிந்தூரம் | இறும்பும் கந்தகமும் சேர்ந்த சிந்தூரம் . |
| அயக்காந்தம் | ஒரு மருந்து ; ஊசிக்காந்தம் . |
| அயகம் | சிறுகுறிஞ்சாக்கொடி ; வசம்பு . |
| அயச்சிந்தூரம் | இரும்புச் சிந்தூரம் . |
| அயசு | இரும்பு ; எஃகு ; வழுக்குநிலம் . |
| அயசுபடில் | வெள்ளீயமணல் . |
| அயணம் | செலவு ; பயணம் . |
| அயபற்பம் | இரும்புத்தூள் . |
| அயம் | ஐயம் ; நீர் ; சுனை ; குளம் ; சேறு ; நிலம் ; அயசு ; சிறுபூலா ; அலரிச்செடி ; ஆடு ; குதிரை ; முயல் ; விழா ; பாகம் ; நல்வினை ; இறும்பு ; அரப்பொடி . |
| அயமகம் | காண்க : அசுவமேதம் . |
| அயமரம் | அலரிமரம் . |
| அயமி | வெண்கடுகு . |
| அயமுகம் | ஓர் இருக்கைவகை . |
| அயமேதம் | காண்க : அசுவமேதம் . |
| அயர் | வாட்டம் . |
| அயர்ச்சி | மறதி ; சோர்வு , வருத்தம் ; வெறுப்பு . |
| அயர்த்தல் | மறத்தல் . |
| அயர்தல் | அயர்ச்சி ; செலுத்துதல் ; விரும்புதல் ; வழிபடுதல் ; விளையாடுதல் . |
| அயர்தி | சோர்வு ; மறதி . |
| அயர்ப்பு | சோர்வு ; மறதி . |
| அயர்வு | சோர்வு ; மறதி . |
| அயல் | இடம் ; அருகு ; வெளியிடம் ; காரம் . |
| அயலகம் | அடுத்த வீடு . |
| அயலவன் | பக்கத்தான் ; அன்னியன் . |
| அயலார்காட்சி | நேர்நின்று பார்த்தவர்களின் காட்சி . |
| அயலான் | காண்க : அயலவன் ; பகைவன் . |
| அயலி | வெண்கடுகு . |
| அயலுரை | இயைபில்லாத பேச்சு ; அயலார் ஒருப் பட்டவுரை . |
| அயவணம் | ஒட்டகம் . |
| அயவாகனன் | ஆட்டை ஊர்தியாகவுடையவன் , அக்கினிதேவன் . |
| அயவாரி | வசம்பு . |
| அயவி | காண்க : சிற்றரத்தை . |
| அயவெள்ளை | இரும்புத்தூள் . |
| அயற்படுதல் | நீங்கிப்போதல் . |
| அயறு | புண்வழலை ; புண்ணீர் கசிந்து பரவுதல் . |
| அயன் | பிரமன் ; மகேச்சுரன் ; அருகன் ; தசரதன் ; தந்தை ; அரசுநிலம் . |
| அயன்சமா | அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி ; பிற வரிகள் நீங்கிய தனி நிலவரி . |
| அயன்சமாபந்தி | ஆண்டு நிலவரித் தணிக்கை . |
| அயன்தரம் | நிலத்தின் முதல் மதிப்பு . |
| அயன்தீர்வை | நிலவரி . |
| அயன்நிலம் | அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்துதற்குரிய நிலம் . |
| அயன்மணம் | எண்வகை மணங்களுள் ஒன்று ; காண்க : பிரசாபத்தியம் . |
| அயன்மை | அன்னியம் . |
| அயனகாலம் | கோள்களிடையே நிகழும் காலம் . |
| அயனப்பிறப்பு | உத்தராயண தட்சணாயணங்களின் தொடக்கம் . |
| அயனம் | வரலாறு ; ஆண்டில் பாதி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது போகும் காலம் ; ஆண்டுப்பிறப்பு ; வழி ; வீடு . |
| அயனாள் | உரோகிணிநாள் ; பிரமன் பிறந்தநாள் ; பிரமன் வாழ்நாள் . |
| அயா | தளர்ச்சி . |
| அயாசகம் | கேளாது கிடைக்கும் பிச்சை . |
| அயாசிதபிச்சை | இருந்த இடத்திலேயே வந்த உணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை . |
| அயாவுதல் | வருந்துதல் . |
| அயாவுயிர்த்தல் | வருத்தம் தீர்தல் ; இளைப்பாற்றுதல் ; நெட்டுயிர்த்தல் ; கொப்புளித்தல் . |
| அயிக்கம் | ஐக்கியம் , ஒன்றாந்தன்மை . |
| அயிக்கியம் | ஐக்கியம் , ஒன்றாந்தன்மை . |
| அயிகம் | ஊமத்தை . |
| அயிங்கிதை | கொல்லாமை ; வருத்தாமை . |
| அயிச்சுரியம் | காண்க : ஐசுவரியம் . |
| அயிச்சுவரியம் | காண்க : ஐசுவரியம் . |
| அயிச்சொரியம் | காண்க : ஐசுவரியம் . |
| அயிஞ்சி | காண்க : நிலப்பனை . |
| அயிணம் | மான்தோல் . |
| அயித்திரம் | கருங்காணம் . |
| அருத்த நாரீசன் | பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் . |
| அர்த்த நாரீசுரன் | பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் . |
| அருத்த நாரீசுரன் | பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் . |
| அர்த்தமண்டபம் | கருவறையை அடுத்த மண்டபம் . |
| அருத்தமண்டபம் | கருவறையை அடுத்த மண்டபம் . |
| அர்த்தரதன் | போர்புரிந்து பின்னடையும் தேர்வீரன் . |
| அர்த்தராத்திரி | நள்ளிரவு . |
| அருத்தராத்திரி | நள்ளிரவு . |
| அர்த்தவாதம் | பயனைச் சொல்லல் ; புகழ்தல் . |
| அர்த்தாங்கீகாரம் | பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை . |
| அருத்தாங்கீகாரம் | பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை . |
| அர்த்தாபத்தி | ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல் . |
| அருத்தாபத்தி | ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல் . |
| அர்த்தித்தல் | இரத்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் . |
| அர்ப்பணம் | உரிமைப்படுத்துதல் ; காணிக்கை செலுத்துகை ; படைத்தல் . |
| அர்ப்பித்தல் | உரியதாக்குதல் . |
| அர்ப்பிதம் | உரியதாக்கப்பட்டது . |
| அர | காண்க : அரா . |
| அரக்கம் | நன்னாரி ; அகில் ; அவலரக்கு ; குருதி ; பாதுகாப்பு . |
| அரக்கன் | இராக்கதன் ; சூடு போடுதற்குரிய மாடு . |
| அரக்காம்பல் | செவ்வாம்பல் . |
| அரக்கி | இராக்கதப் பெண் ; நஞ்சு . |
| அரக்கிலச்சினை | அரக்காலிடும் முத்திரை . |
| அரக்கு | செம்மெழுகு ; சிவப்பு ; சாதிலிங்கம் ; சாராயம் ; கஞ்சி ; எள்ளின் காயில் காணும் ஒருவகை நோய் . |
| அரக்குக்காந்தம் | ஒருவகைத் காந்தக்கல் . |
| அரக்குச்சாயம் | துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம் . |
| அரக்குத்தைலம் | கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் . |
| அரக்குதல் | தேயத்தல் ; அழுத்தல் ; வருத்துதல் ; சிதைத்தல் ; முழுதும் உண்ணுதல் ; இருப்பு விட்டுப் பெயர்த்தல் . |
| அரக்குநீர் | சாதிலிங்கம் கலந்த நீர் ; ஆலத்திநீர் ; குருதி . |
| அரக்குமஞ்சள் | கருஞ்சிவப்பு மஞ்சள் ; பூசு மஞ்சள் . |
| அரகர | 'சிவசிவ' எனப் பொருள்படும் ஓரடுக்கு மொழி . |
| அயிரியம் | காண்க : நெட்டி . |
| அயிரை | நொய்ம்மீன் ; நுண்மணல் ; சேர நாட்டில் உள்ள மலை ; சேரநாட்டு ஆறு . |
| அயில் | இரும்பு ; கூர்மை ; அறுவை செய்யும் கத்தி ; வேல் ; கலப்பை ; கோரை ; விரை ; முசுமுசுக்கை ; அழகு ; உண்ணல் . |
| அயில்தல் | உண்ணுதல் . |
| அயிலவன் | வேற்படை உடையவன் , முருகக் கடவுள் . |
| அயிலான் | வேற்படை உடையவன் , முருகக் கடவுள் . |
| அயிலுழவன் | வீரன் . |
| அயிற்பெண்டு | வரிக்கூத்துவகை . |
| அயின்றாள் | அன்னை . |
| அயினி | உணவு ; நீராகாரம் . |
| அயினிநீர் | மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த ஆலத்திநீர் . |
| அயுக்தம் | தகுதியின்மை . |
| அயுத்தம் | தகுதியின்மை . |
| அயுக்தி | பொருத்தமின்மை . |
| அயுத்தி | பொருத்தமின்மை . |
| அயுதம் | பதினாயிரம் ; பிரிவின்மை . |
| அயோக்கியதை | தகுதிக்குறைவு ; தீயநடை . |
| அயோக்கியம் | தகுதியின்மை . |
| அயோக்கியன் | நாணயம் அற்றவன் . |
| அயோசனம் | பிரிவு . |
| அயோமலம் | பானை ; இரும்புக்கிட்டம் . |
| அயோற்கம் | அரப்பொடி , இரும்புத்தூள் . |
| அயோனிசன் | யோனியில் பிறவாதவன் . |
| அர்க்கபந்து | தாமரை . |
| அர்க்கம் | தேவருக்கு அல்லது பெரியோருக்கு வணக்கத்தோடு கொடுக்கும் பொருள் ; எருக்கு ; நீர்க்காக்கை ; பொன் ; செம்பு ; பளிங்கு விலைப்பொருள் ; பூகோளத்தில் குறுக்குக்கோடு , அகலாங்கு . |
| அர்க்காதிபன் | செல்வன் . |
| அர்க்கியம் | தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் நீரால் செய்யும் ஒருவகை வரவேற்பு . |
| அர்ச்சகன் | பூசாரி ; அத்தியயனபட்டர் . |
| அர்ச்சனியம் | வணக்கம் . |
| அர்ச்சனை | ஆராதனை ; வழிபாடு . |
| அர்ச்சித்தல் | பூசித்தல் ; வழிபடுதல் ; ஒருவருக்காகக் கடவுள் திருப்பெயர் கூறி மலர் முதலியன இடுகை . |
| அர்ச்சிதன் | பூசிக்கப்படுவோன் . |
| அர்ச்சியசிட்டர் | பூசிக்கத்தக்கவர் ; தூயவர் . |
| அர்ச்சுனம் | காண்க : மருது . |
| அர்ச்சை | வழிபாட்டுக்குரிய தெய்வத்திருமேனி . |
| அர்த்தசந்திரபாணம் | பிறைவடிவான அம்பு . |
| அர்த்தசந்திரம் | அணிவகுப்புகளுள் ஒன்று ; திருவாசியின் மேல்வளைவு . |
| அர்த்தசந்திரன் | பாதிச்சந்திரன் ; நகக்குறி ; ஒருவகை நெற்றிக்குறி . |
| அர்த்தசாத்திரம் | பொருள் நூல் . |
| அருத்தசாத்திரம் | பொருள் நூல் . |
| அர்த்தசாமம் | நடு இரவு . |
| அருத்தசாமம் | நடு இரவு . |
| அர்த்ததாயம் | வாரிசாகப் பெறும் பங்குப் பொருள் . |
| அர்த்த நாரீசன் | பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.