பொன்னான மேனியில – ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன!
தங்கத்திருமேனியில – ஒரு
தகாதநோய் வந்ததென்ன!
ஊருப் பரிகாரி – ஒரு
உள்ளகதை சொல்லவில்லை!
நாட்டு பரிகாரி – ஒரு
நல்லகதை சொன்னதில்லை!
மலையில் மருந்தெடுத்து – நாங்கள்
மாமலையில் தேனனெடுத்து
இஞ்சி அரைத்துமெல்லோ – நாங்கள்
ஏராதி ஊட்டிநின்றோம்.
குளிகை கரைக்க முன்னம் - உன்
குணமோ திரும்பியது!
மருந்து கரைக்கு முன்னம் -உன்
மனமோ திரும்பியது
அரைத்த மருந்தோ - இங்கே
அம்மிபாழ் போகுதெணை!
உரைத்த மருந்தோ - இங்கே
உருக்குலைந்து போகுதெணை
பொன்னும் அழிவாச்சே – உன்
பொன்னுயிரும் தீங்காச்சே!
காசும் அழிவாச்சே – உன்
கனத்த உயிர் தீங்காச்சே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.