கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 6 ஏப்ரல், 2013

ஒப்பாரிபாடல்

பொன்னான மேனியில – ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன!
தங்கத்திருமேனியில – ஒரு
தகாதநோய் வந்ததென்ன!

ஊருப் பரிகாரி – ஒரு
உள்ளகதை சொல்லவில்லை!
நாட்டு பரிகாரி – ஒரு
நல்லகதை சொன்னதில்லை!

மலையில் மருந்தெடுத்து – நாங்கள்
மாமலையில் தேனனெடுத்து
இஞ்சி அரைத்துமெல்லோ – நாங்கள்
ஏராதி ஊட்டிநின்றோம்.

குளிகை கரைக்க முன்னம் - உன்
குணமோ திரும்பியது!
மருந்து கரைக்கு முன்னம் -உன்
மனமோ திரும்பியது

அரைத்த மருந்தோ - இங்கே
அம்மிபாழ் போகுதெணை!
உரைத்த மருந்தோ - இங்கே
உருக்குலைந்து போகுதெணை

பொன்னும் அழிவாச்சே – உன்
பொன்னுயிரும் தீங்காச்சே!
காசும் அழிவாச்சே – உன்
கனத்த உயிர் தீங்காச்சே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;