சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆரணி | மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் . |
ஆரணியகன் | காட்டில் வாழ்வோன் . |
ஆரணியசஷ்டி | மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு . |
ஆரத்தி | ஆலத்தி ; தீபாராதனை . |
ஆரதக்கறி | மரக்கறி . |
ஆரதம் | சைவ உணவு . |
ஆரதி | காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு . |
ஆரதிகர்ப்பூரம் | கருப்பூரவகை . |
ஆரநாளம் | காடி . |
ஆரபடி | பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி . |
ஆரபி | ஒரு பண் . |
ஆரம் | சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் . |
ஆரம்பக்கொசு | சமுத்திராப்பழம் . |
ஆரம்பசூரன் | தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் . |
ஆரம்பம் | தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை . |
ஆரம்பவாதம் | முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை . |
ஆரம்பித்தல் | தொடங்குதல் ; ஒலித்தல் . |
ஆரல் | நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் . |
ஆரவடம் | முத்துவடம் . |
ஆரவம் | ஒலி ; பகை . |
ஆரவமர | காண்க : ஆறவமர . |
ஆரவலர் | காட்டாத்திப்பூ . |
ஆரவாரம் | பேரொலி ; பகட்டு ; துன்பம் . |
ஆரவாரித்தல் | மிக்கொலித்தல் . |
ஆரவை | கொந்தளிப்பு . |
ஆரற்சுவர் | மேலே மறைப்புடைய சுவர் . |
ஆராக்கியம் | அரசமரம் . |
ஆராகரியம் | அரசமரம் . |
ஆராவரியம் | அரசமரம் . |
ஆராட்சி | பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் . |
ஆராட்டுதல் | தாலாட்டுதல் . |
ஆராத்தியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
ஆராத்திரியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
ஆராத்தொட்டி | மினிக்கி என்னும் மரம் . |
ஆராதகர் | அருச்சகர் . |
ஆராதனம் | பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் . |
ஆராதனை | பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு . |
ஆராதித்தல் | பூசை செய்தல் ; உபசரித்தல் . |
ஆராதூரி | ஊதாரி ; அழிப்புக்காரன் . |
ஆராப்பத்தியம் | கடும்பத்தியம் ; அற்பம் . |
ஆராமம் | உபவனம் ; மலைச்சோலை ; தான்றி . |
ஆராமை | நிரம்பாமை ; பேரன்பு . |
ஆராமைசோராமை | தள்ளாமை . |
ஆராய்ச்சி | ஆய்வு ; பரிசீலனம் ; சோதனை ; தலையாரி . |
ஆர்பதம் | வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை . |
ஆர்பதன் | உணவு . |
ஆர்மதி | கற்கடக ராசி ; நண்டு . |
ஆர்மை | கூர்மை ; மதில் . |
ஆர்வம் | அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று . |
ஆர்வமொழி | உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் . |
ஆர்வலன் | அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் . |
ஆர்வலித்தல் | அன்புகூர்தல் . |
ஆர்வு | நிறைவு ; உண்ணுகை ; ஆசை . |
ஆர்வை | கோரைப்பாய் . |
ஆர | ஓர் உவமச்சொல் ; மிக . |
ஆரக்கம் | செஞ்சந்தனம் ; அகில் . |
ஆரக்கழுத்தி | கழுத்தில் தீயரேகையுள்ள பெண் . |
ஆரக்கால் | சக்கரத்தின் ஆரம் . |
ஆரக்குவதம் | சரக்கொன்றை . |
ஆரகந்தி | திப்பிலி . |
ஆரகம் | வகுக்குமெண் ; குருதி . |
ஆரகன் | அழிப்போன் ; கள்வன் ; கபடன் . |
ஆரகுடம் | பித்தளை . |
ஆரகூடம் | பித்தளை . |
ஆரகோதம் | காண்க : சரக்கொன்றை . |
ஆரசகம் | அகில்மரம் . |
ஆரங்கம்பாக்கு | பாக்குவகை . |
ஆரஞ்சு | கிச்சிலி . |
ஆரண்ணியகம் | வேதத்தின் ஒரு பகுதி . |
ஆரணங்கு | தெய்வப்பெண் ; பேரழகி . |
ஆரணத்தான் | வேதங்களை அருளிய பிரமன் . |
ஆரணம் | காண்க : ஆரண்ணியகம் ; வேதம் . |
ஆரணவாணன் | அந்தணன் . |
ஆரணவுருவன் | சிவபெருமான் . |
ஆரணன் | பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆரோபித்தல் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
ஆரோபிதம் | ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம் |
ஆல் | அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி . |
ஆல்வாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
ஆலவாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
ஆல்வு | அகன்றது . |
ஆலக்கச்சி | அரிதாரம் . |
ஆலக்கட்டி | துரிசு . |
ஆலக்கரண்டி | அகன்ற கரண்டி . |
ஆரிடம் | வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் . |
ஆரிடர் | முனிவர் . |
ஆரிடலிங்கம் | முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் . |
ஆரிடை | அரியவழி . |
ஆரிப்படுகர் | அரிதாய் ஏறி இறங்கும் வழி . |
ஆரிய | சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் . |
ஆரியக்கூத்து | கழைக்கூத்து . |
ஆரியகுச்சரி | மருத யாழ்த்திறவகை . |
ஆரியச்சி | ஆரியப்பெண் . |
ஆரியசத்தை | பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் . |
ஆரியத்திரிவு | காண்க : தற்பவம் . |
ஆரியப்பாவை | பாவைக்கூத்துவகை . |
ஆரியப் பூமாலை | அடங்காப் பெண் ; காத்தவராயன் மனைவி . |
ஆரியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் . |
ஆரியம் | கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் . |
ஆரியமொழி | வடமொழி . |
ஆரியவராடி | ஒரு பண் ; வராடிவகை . |
ஆரியவாசியம் | காண்க : ஓமம் . |
ஆரியவேளர் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
ஆரியவேளார் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
ஆரியன் | ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் . |
ஆரியாங்கனை | இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் . |
ஆரியாவர்த்தம் | இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் . |
ஆரியை | பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை . |
ஆரீதம் | பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி . |
ஆருகதம் | சமணமதம் ; நாவல்மரம் . |
ஆருகதன் | சமணன் . |
ஆருத்திரை | திருவாதிரை . |
ஆருப்பியம் | வங்கமணல் . |
ஆருபதம் | பித்தளை . |
ஆருயிர் மருந்து | உணவு . |
ஆருவம் | நீர் . |
ஆருழலைப்படுதல் | வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் . |
ஆரூடம் | ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் . |
ஆரூடன் | ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் . |
ஆரூபம் | ஒவ்வாமை ; நீங்காமை . |
ஆரூர் | திருவாரூர் . |
ஆரூர்க்கால் | கருப்பூரவகை . |
ஆரூரன் | சுந்தரமூர்த்தி நாயனார் . |
ஆரேவதம் | காண்க : சரக்கொன்றை . |
ஆரை | நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் . |
ஆரைக்காலி | கோரைவகை . |
ஆரைக்கீரை | நீராரைக் கீரை . |
ஆரைபற்றி | உடும்பு . |
ஆரொட்டி | கூவைக்கிழங்கு . |
ஆரோக்கியசாலை | மருத்துவவிடுதி ; மருத்துவமனை . |
ஆரோக்கியம் | நோயின்மை ; நலம் . |
ஆரோகணம் | ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி . |
ஆரோகணித்தல் | எழும்புதல் ; ஏறுதல் . |
ஆரோகம் | வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை . |
ஆரோகி | இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று . |
ஆரோசை | ஏற்றிப் பாடும் இசை . |
ஆரோணம் | மீக்கோள் . |
ஆரோதமடித்தல் | அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல் |
ஆரோபணம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
ஆரோபம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
ஆராய்ச்சிமணி | முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி . |
ஆராய்ச்சியார் | கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் . |
ஆராய்ச்சியாளன் | ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் . |
ஆராய்தல் | சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் . |
ஆரார் | பகைவர் . |
ஆரால் | மீன்வகை ; சேற்றாரால் . |
ஆராவம் | பேரொலி சத்தம் . |
ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் . |
ஆராவமுது | காண்க : ஆராவமுதம் . |
ஆரி | அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆலிகை | அகலிகை . |
ஆலிங்கணம் | தழுவுகை . |
ஆலிடம் | தெருச்சிறகு . |
ஆலித்தல் | ஒலித்தல் . |
ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் . |
ஆலிப்பு | ஆரவாரம் . |
ஆலிம் | அறிந்தவன் . |
ஆலியதம் | காண்க : சிறுகுறிஞ்சா . |
ஆல¦டம் | இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை . |
ஆல¦னகம் | துத்தநாகம் . |
ஆலுதல் | ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் . |
ஆலூகம் | காண்க : வில்வம் . |
ஆலேகனம் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
ஆலேகனி | எழுதுகோல் ; எழுத்தாணி . |
ஆலேபனம் | பூசுகை . |
ஆலேபூலேயெனல் | பொருளின்றிப் பேசுதற்குறிப்பு . |
ஆலை | கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை . |
ஆலைக்குழி | கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் . |
ஆலைத்தொட்டி | கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் . |
ஆலைபாய்தல் | ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் . |
ஆலைமாலை | தொந்தரை ; மயக்கம் . |
ஆலோகம் | பார்வை ; ஒளி . |
ஆலக்கொடிச்சி | காண்க : ஆலக்கச்சி . |
ஆலகண்டன் | கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் . |
ஆலகம் | காண்க : ஆமலகம் . |
ஆலகாலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை . |
ஆலகாலி | காளி . |
ஆலகிரீடை | காண்க : அலரி . |
ஆலங்கட்டி | கல்மழை . |
ஆலாங்கட்டி | கல்மழை . |
ஆலங்காட்டாண்டி | வரிக்கூத்துவகை . |
ஆலச்சுவர் | சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் . |
ஆலசம் | சோம்பு . |
ஆலசியம் | சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு . |
ஆலத்தி | காண்க : ஆரத்தி . |
ஆலத்தியெடுத்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
ஆலத்திவழித்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
ஆலதரன் | நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் . |
ஆலந்தை | ஒரு சிறுமரம் . |
ஆலம் | நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு |
ஆலம்பம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
ஆலம்பனம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
ஆலம்பலிகிதம் | எழுத்துக்கூட்டிலக்கணம் . |
ஆலம்பி | அரிதாரம் . |
ஆலமர்கடவுள் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
ஆலமர்செல்வன் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
ஆலமரம் | மரவகை . |
ஆலமுடையோன் | துரிசு . |
ஆலமுண்டோன் | பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் . |
ஆலயம் | தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் . |
ஆலயவிஞ்ஞானம் | சாகும்வரை நிற்கும் உணர்ச்சி . |
ஆவல் | ஒலி ; மயிற்குரல் . |
ஆலலம் | திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை . |
ஆலவட்டம் | பெருவிசிறி ; விசிறி . |
ஆலவன் | ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் . |
ஆலவாய் | பாம்பு ; மதுரை . |
ஆலவாலம் | மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் . |
ஆலவிருட்சம் | ஆலமரம் ; ஆதொண்டை . |
ஆலா | கடற்கரைப் பறவைவகை . |
ஆலாகலம் | காண்க : ஆலகாலம் . |
ஆலாசியம் | மதுரை ; ஆண்முதலை . |
ஆலாட்டு | சிறிது உலரவைத்தல் . |
ஆலாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
ஆலவாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
ஆலாத்தி | காண்க : ஆலத்தி . |
ஆலாத்து | கப்பலின் பெருங்கயிறு . |
ஆலாதாடை | அவுரி . |
ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் . |
ஆலாபம் | உரையாடல் . |
ஆலாபனம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
ஆலாபித்தல் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
ஆலாபினி | சுரபேதம் . |
ஆலாலம் | துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு . |
ஆலாவர்த்தம் | காண்க : ஆலவட்டம் . |
ஆலி | மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆவரணம் | மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி |
ஆவரணமூர்த்தி | கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் . |
ஆவரணி | பார்வதி . |
ஆவரணீயம் | மறைப்பது . |
ஆவரி | அம்பு . |
ஆவரித்தல் | மறைத்தல் . |
ஆவல் | ஆசை ; வளைவு . |
ஆவல்லி | சீந்திற்கொடி . |
ஆவலங்கொட்டுதல் | ஆர்த்து வாய்க்கொட்டுதல் . |
ஆவலம் | வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி . |
ஆவலர் | உற்றார் ; கணவர் ; காதலர் . |
ஆவலாதி | குறைகூறுகை ; அவதூறு . |
ஆவலாதிக்காரன் | போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் . |
ஆவலி | காண்க : ஆவளி . |
ஆவலித்தல் | அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் . |
ஆவலிப்பு | செருக்கு . |
ஆவளி | வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு . |
ஆவளிச்சேவகம் | உறுதியற்ற வேலை . |
ஆவளித்தல் | ஒழுங்குபடுத்துதல் . |
ஆவற்காலம் | ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் . |
ஆவறியாவறியெனல் | பேராசைக் குறிப்பு . |
ஆவா | இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு . |
ஆவாகனம் | அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை . |
ஆவாகனமுத்திரை | முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு . |
ஆவாகித்தல் | எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் . |
ஆவாகை | காண்க : நிலவாகை . |
ஆவாசம் | நகரம் ; மருதநிலத்தூர் . |
ஆவாதம் | காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று . |
ஆவாபம் | விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் . |
ஆவாபனம் | நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி . |
ஆவாய்கத்துதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
ஆவாரம் | மறைப்பு . |
ஆவாரகம் | மறைப்பு . |
ஆவாரம்பூச்சம்பா | சம்பாநெல்வகை . |
ஆவாரைப் பஞ்சகம் | ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன . |
ஆவாலம் | மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் . |
ஆவாலை | பாட்டுவகை . |
ஆவாளஞ்சீவாளம் | காண்க : ஆவச்சீவாளம் . |
ஆலோகனம் | பார்க்கை . |
ஆலோசனை | ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ; |
ஆலோசித்தல் | சிந்தித்தல் ; ஆராய்தல் . |
ஆலோபம் | வருத்தம் . |
ஆலோலம் | நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் . |
ஆலோலிதமுகம் | ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை . |
ஆலோன் | சந்திரன் . |
ஆவ | இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு . |
ஆவகம் | எழுவகைக் காற்றுகளுள் ஒன்று . |
ஆவச்சீவாளம் | முழு நிலைமை . |
ஆவசியகம் | இன்றியமையாதது . |
ஆவசியம் | இன்றியமையாதது . |
ஆவஞ்சி | இடக்கை என்னும் தோற்கருவி . |
ஆவட்டங்கொட்டுதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
ஆவட்டைசோவட்டை | சோர்வு . |
ஆவடதர் | தேவசாதியார்வகை . |
ஆவணக்களம் | பத்திரப் பதிவுச்சாலை . |
ஆவணக்களரி | பத்திரப் பதிவுச்சாலை . |
ஆவணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
ஆபணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
ஆவணமாக்கள் | உறுதிமொழி வாங்குவோர் . |
ஆவணி | ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் . |
ஆவணி அவிட்டம் | ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா . |
ஆவணிமுழக்கம் | ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் . |
ஆவது | ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் . |
ஆவதை | திரும்பக் கூறுகை . |
ஆவநாழி | காண்க : அம்பறாத்தூணி . |
ஆவநாழிகை | காண்க : அம்பறாத்தூணி . |
ஆவம் | அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி . |
ஆவயின் | அவ்விடத்தில் . |
ஆவர் | யாவர் . |
ஆவர்த்தம் | எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை . |
ஆவர்த்தனம் | மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் . |
ஆவர்த்தி | தடவை . |
ஆவர்த்தித்தல் | முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் . |
ஆவரணச்சுவர் | கோயில் திருமதில் . |
ஆவரணசக்தி | மாயை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆவிருத்தியலங்காரம் | பின்வருநிலையணி . |
ஆவிருதம் | மறைக்கப்பட்டது |
ஆவிருதி | ஆணவமலம் . |
ஆவிருந்து | நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை . |
ஆவிரை | செடிவகை . |
ஆவிலம் | கலங்கல் நீர் . |
ஆவிலியர் | வேளாளர் ; வேடர் . |
ஆவிவாங்குதல் | உயிர் கவர்தல் ; வருத்துதல் . |
ஆவிவிடுதல் | சாதல் ; உயிர்விடத் துணிதல் . |
ஆவினன்குடி | முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி . |
ஆவு | காண்க : குன்றி . |
ஆவுடையார் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
ஆவுடையாள் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
ஆவுதல் | விரும்புதல் . |
ஆவுதி | ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு . |
ஆவுரிஞ்சி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
ஆவுரிஞ்சுதறி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
ஆவெனல் | அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு . |
ஆவேகி | காண்க : ஆடுதின்னாப்பாளை . |
ஆவேசசமவாதம் | காண்க : காபாலமதம் . |
ஆவேசநீர் | வெறியூட்டும் கள் முதலியன . |
ஆவேசம் | தெய்வமேறுகை ; பேய் ; கோபம் . |
ஆவேசவாதி | காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் . |
ஆவேசனம் | உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை . |
ஆவேசாவதாரம் | ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு . |
ஆவேசி | காண்க : ஆவேகி . |
ஆவேசித்தல் | உட்புகுதல் ; தெய்வமேறுதல் |
ஆவேதனம் | அறிக்கை . |
ஆவேலம் | தம்பலம் . |
ஆவேலி | தொழுவம் . |
ஆவேறு | காளை , இடபம் . |
ஆவோ | வியப்பு இரக்கச் சொல் . |
ஆழ்கடற்றுயின்றோன் | திருமால் . |
ஆழ்த்துதல் | அமிழ்த்துதல் . |
ஆழ்தல் | மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் . |
ஆழ்வள்ளி | மரவள்ளி , கிழங்குவகை . |
ஆழ்வார் | பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி . |
ஆழ்வார்கன்மி | திருமால்கோயில் அருச்சகன் . |
ஆழ்வார்திருநாள் | திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா . |
ஆழ்வான் | சூரியன் . |
ஆழ்வி | தலைவன் ; தலைவி . |
ஆழ்வு | ஆழம் . |
ஆழங்கால் | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை . |
ஆழங்காற்படுதல் | அழுந்துதல் ; ஈடுபடுதல் . |
ஆழம் | ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து . |
ஆழம்பார்த்தல் | ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் . |
ஆழமுடைத்தாதல் | நுண்பொருள் பொதிந்திருத்தல் ; நூலழகுகளுள் ஒன்று . |
ஆழரம் | அத்தி . |
ஆழல் | காண்க : கறையான் . |
ஆழாக்கு | அரைக்காற்படி . |
ஆழாங்கு | காண்க : ஆழங்கால் . |
ஆழாடக்கிடங்கு | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
ஆவி | உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் . |
ஆவிகம் | ஆட்டுமயிர்க் கம்பளம் . |
ஆவிகாட்டுதல் | நிவேதனஞ் செய்தல் . |
ஆவிகை | பற்றுக்கோடு . |
ஆவிடை | காண்க : ஆவுடையார் . |
ஆவிடையார் | காண்க : ஆவுடையார் . |
ஆவித்தல் | வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் . |
ஆவித்தைலம் | நீராவியால் வடிக்கும் தைலம் . |
ஆவிதம் | காண்க : மரை ; திருகூசி . |
ஆவிநீர் | நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் . |
ஆவிபத்தம் | பேராமுட்டிப் பூண்டு . |
ஆவிபதம் | பேராமுட்டிப் பூண்டு . |
ஆவிபத்திரம் | புகையிலை . |
ஆவிபறிதல் | நீராவி எழும்புதல் ; மரித்தல் |
ஆவிபிடித்தல் | நீராவியால் வேது கொள்ளுதல் . |
ஆவிமா | மரவகை . |
ஆவியர் | வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் . |
ஆவிர்தம் | சுழற்சி . |
ஆவிர்ப்பவித்தல் | வெளிப்படுதல் . |
ஆவிர்ப்பாவம் | வெளிப்படுகை . |
ஆவிர்ப்பூதம் | தோன்றியது ; வெளிப்பட்டது . |
ஆவிரம் | இடையரூர் ; நரகவகை . |
ஆவிருத்தி | தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆளொட்டி | காவற்கட்டு . |
ஆளொதுங்கி | காவற்கட்டு . |
ஆளோட்டி | வேலை வாங்குவோன் . |
ஆளோடி | வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி . |
ஆழித்தொட்டான் | ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் . |
ஆழிமால்வரை | சக்கரவாளகிரி . |
ஆழிமுரசோன் | கடலை முரசாகவுடைய மன்மதன் . |
ஆழிமூழையாய் | மிக விரைவாய் . |
ஆழியான் | திருமால் ; அரசன் . |
ஆழியிழைத்தல் | கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி . |
ஆழிவலியான்மணி | மிளகு . |
ஆழிவித்து | முத்து . |
ஆழிவிரல் | மோதிரவிரல் . |
ஆழும்பாழுமாய் | சீர்கேடாய் ; வீணாக . |
ஆள் | ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி . |
ஆள்காட்டிவேலை | ஏமாற்று வேலை . |
ஆள்கை | ஆளுதல் . |
ஆள்திட்டம் | ஓர் ஆளுக்குரிய அளவு ; ஓர் ஆளின் உடலடையாளம் . |
ஆள்மட்டச்சுவர் | கைப்பிடிச் சுவர் ; மதிற்சுவர் . |
ஆள்மட்டம் | ஒரு மனிதனின் உயரவளவு . |
ஆள்மாகாணம் | ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு . |
ஆள்மாறாட்டம் | வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை . |
ஆள்வணங்கி | அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி . |
ஆள்வரி | தலைவரி . |
ஆள்வார் | சுவாமி . |
ஆள்வாரம் | பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு . |
ஆள்வாரி | காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி . |
ஆள்வாரிநிலம் | கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி . |
ஆள்வாரில்லா மாடு | பட்டிமாடு . |
ஆள்வாரிலி மாடு | பட்டிமாடு . |
ஆள்விடுதல் | தூதனுப்புதல் . |
ஆள்வினை | முயற்சி ; மகிழ்ச்சி . |
ஆள்வினை வேள்வி | விருந்து புறந்தருகை . |
ஆள்வீதம் | ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு . |
ஆளகம் | சுரைக்கொடி . |
ஆளடிமை | அடியான்(ள்) . |
ஆளத்தி | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
ஆளம் | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
ஆளமஞ்சி | கூலியின்றி வாங்கும் வேலை . |
ஆளரவம் | மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி . |
ஆளரி | ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி . |
ஆளல் | ஆளுதல் ; மீன்வகை . |
ஆளறுதி | தனிமை . |
ஆளன் | ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் . |
ஆளாதல் | அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் . |
ஆளாபம் | காண்க : ஆலாபனம் . |
ஆளாழம் | ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் . |
ஆளானம் | யானை கட்டுந் தறி . |
ஆளி | ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு . |
ஆளிட்டான் காசு | பழைய நாணயவகை . |
ஆளிடுதல் | பதிலாளை அமர்த்துதல் . |
ஆளியூர்தி | துர்க்கை . |
ஆளிவிதை | சிறு சணல்வித்து . |
ஆளிவிரை | சிறு சணல்வித்து . |
ஆளுகை | ஆட்சி ; ஆளுதல் . |
ஆளுங்கணத்தார் | ஊர்ச்சபை அதகாரிகள் . |
ஆளுங்கணம் | ஊரையாளும் சபை . |
ஆளுடையதேவர் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
ஆளுடைய நம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் . |
ஆளுடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தர் . |
ஆளுடையவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
ஆளுடையான் | அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி . |
ஆளெழுத்துச் சேலை | சித்திரம் எழுதிய சேலை வகை . |
ஆளெனல் | நாயின் கதறல் குறிப்பு . |
ஆளை | காண்க : அறுகு . |
ஆளையடிச்சான் | புளியமரம் . |
ஆழாத்தல் | ஈடுபடுதல் . |
ஆழாரம் | பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி . |
ஆழி | சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி . |
ஆழிக்கொடி | பவளம் . |
ஆழிக்கடல்விழுது | கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு . |
ஆழித்தல் | ஆழமாய்த் தோண்டுதல் . |
ஆழித்தீ | வடவையனல் . |
ஆழித்தேர் | சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் . |
ஆழிதிருத்துதல் | கூடலிழைத்தல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆற்றுப்பித்தல் | ஆற்றோரம் . |
ஆற்றுப்புரவு | ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் . |
ஆற்றுப்பூத்தான் | காண்க : பூனைக்காலி . |
ஆற்றுப்பூவரசு | மரவகை . |
ஆற்றுப்பொடி | ஆற்றிலுள்ள சிறுமீன் . |
ஆற்றுமரி | நீருமரிச்செடி ; காண்க : ஆற்றுக்கொடி . |
ஆற்றுமல்லிகை | நீர்ப்பூடுவகை . |
ஆற்றுமுள்ளங்கி | முள்ளங்கிவகை . |
ஆற்றுமுள்ளி | காண்க : கண்டங்கத்தரி : கழுதை முள்ளி . |
ஆற்றுமேலழகி | பூடுவகை . |
ஆற்றுல்லம் | உல்ல மீன்வகை . |
ஆற்றுவரி | ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் . |
ஆற்றுவாய்முகம் | ஆறு கடலொடு கலக்குமிடம் . |
ஆற்றுவாளை | ஏரி வாளைமீன் . |
ஆற்றுவைப்பு | ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் . |
ஆற்றொழுக்கு | ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று . |
ஆறக்கட்டுதல் | பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் . |
ஆறகோரம் | கொன்றை . |
ஆறங்கம் | வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு . |
ஆறத்தணிய | காண்க : ஆறவமர . |
ஆறதீகம் | கல்நார் . |
ஆறப்போடுதல் | காலந்தாழ்த்தல் . |
ஆறல்பீறல் | பயனற்றது . |
ஆறலை | வழிப்பறி . |
ஆறலைத்தல் | வழிப்பறி செய்தல் . |
ஆளோலை | அடிமைப்பத்திரம் . |
ஆற்கந்திதம் | குதிரை நடைவகை . |
ஆற்பணம் | விருப்பம் ; உரியதாகக் கொடுத்தல் . |
ஆற்பதம் | பற்றுக்கோடு . |
ஆற்பனேபதம் | வடமொழி வினைவகை . |
ஆற்போடம் | காக்கணம் . |
ஆற்போதம் | எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை . |
ஆற்ற | மிக ; முற்ற . |
ஆற்றங்கரைத்தேவை | வரிவகை . |
ஆற்றங்கால் | காண்க : காட்டுப்பூவரசு . |
ஆற்றடம்பு | அடம்புவகை . |
ஆற்றமாட்டாமை | முடியாமை ; தாங்க முடியாமை . |
ஆற்றரசு | காண்க : ஆற்றுப்பூவரசு . |
ஆற்றல் | சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் . |
ஆற்றலரி | காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் . |
ஆற்றறுத்தல் | இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் . |
ஆற்றாச்சண்டி | வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் . |
ஆற்றாமை | தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை . |
ஆற்றான் | வலிமையற்றவன் ; வறிஞன் . |
ஆற்றிக்கொடுத்தல் | சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் . |
ஆற்றிடைக்குறை | ஆற்றினிடையேயுள்ள திட்டு . |
ஆற்றித்தேற்றுதல் | சமாதானப்படுத்துதல் . |
ஆற்றிலுப்பை | மரவகை . |
ஆற்றிறால் | இறால் மீன்வகை . |
ஆற்றின்வித்து | கற்பூர சிலாசத்து . |
ஆற்றுக்கால் | ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் . |
ஆற்றுக்காலாட்டியார் | மருதநிலப் பெண்டிர் . |
ஆற்றுக்காலேரி | ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி . |
ஆற்றுக்கால் பாய்ச்சல் | ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் . |
ஆற்றுக்குலை | ஆற்றின் கரை ; வரிவகை . |
ஆற்றுக்கெண்டை | ஒருவகைச் சிறுமீன் . |
ஆற்றுக்கொடி | பேய்க்கொம்மட்டி . |
ஆற்றுச்சஞ்சலை | காண்க : மலைவட்டை . |
ஆற்றுச்சவுக்கு | காண்க : கோடைச்சவுக்கு ; செடிவகை . |
ஆற்றுச்செருப்படி | பூடுவகை . |
ஆற்றுணா | கட்டுச்சோறு ; வழியுணவு . |
ஆற்றுத்தும்மட்டி | காண்க : ஆற்றுக்கொடி . |
ஆற்றுத்துவரை | செடிவகை . |
ஆற்றுதல் | வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் . |
ஆற்றுநீர் | செயல்புரிபவர் ; உதவி செய்வார் ; வன்மையுடையார் . |
ஆற்றுநெட்டி | காண்க : நீர்ச்சுண்டி . |
ஆற்றுப்பச்சை | நாகப்பச்சைக்கல் . |
ஆற்றுப்படுகை | ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் . |
ஆற்றுப்படுத்தல் | வழிச்செலுத்துதல் ; போக்குதல் . |
ஆற்றுப்படை | பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை . |
ஆற்றுப்பாசி | நீர்ப்பூடுவகை . |
ஆற்றுப்பாட்டம் | வரிவகை . |
ஆற்றுப்பாய்ச்சல் | காண்க : ஆற்றுக்கால் பாய்ச்சல் . |
ஆற்றுப்பாய்ச்சி | ஆற்றில் கப்பல் செலுத்துவோன் . |
ஆற்றுப்பாலை | மரவகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆன் | பெற்றம் , எருமை , மரை இவற்றின் பெண் ; காளை ; அவ்விடம் ; மூன்றனுருபு ; ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை . |
ஆன்காவலன் | வைசியன் . |
ஆன்பொருந்தம் | ஆன்பொருநை ஆறு , தாமிரபரணியாறு . |
ஆன்மசுத்தி | பத்துச் செயலுள் ஒன்று ; ஐந்து சுத்தியுள் ஒன்று ; தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று . |
ஆன்மஞானம் | ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு . |
ஆன்மதத்துவம் | காண்க : அசுத்ததத்துவம் . |
ஆன்மதரிசனம் | தன்னையுணரும் அறிவு ; பத்துச் செயலுள் ஒன்று |
ஆன்மபூ | மன்மதன் ; பிரமன் . |
ஆன்மபோதம் | உயிருணர்வு . |
ஆன்மமந்திரம் | காண்க : அசபா . |
ஆன்மயோனி | காண்க : ஆன்மபூ . |
ஆன்மரூபம் | பத்துச் செயலுள் ஒன்று . |
ஆன்மலாபம் | ஆத்மாவின் பேறு . |
ஆன்மவீரன் | விறலோன் : மைத்துனன் : புதல்வன் : கற்றோன் . |
ஆன்மா | உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு . |
ஆன்மாச்சிரயம் | தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் . |
ஆன்மாதீனன் | ஆன்மவீரன் : பிராணாதாரன் . |
ஆன்மார்த்தபூசை | தன் மனமொன்றிய வழிபாடு . |
ஆன்மார்த்தம் | தற்பொருட்டு . |
ஆன்மெழுக்கு | பசுவின் சாணம் . |
ஆன்வல்லவர் | முல்லைநில மாக்கள் . |
ஆன்வல்லோர் | முல்லைநில மாக்கள் . |
ஆன்ற | மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன . |
ஆன்றமைதல் | அடங்கியமைதல் . |
ஆன்றல் | அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி . |
ஆன்றவர் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
ஆன்றார் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
ஆன்றோர் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
ஆன்று | நிறைந்து : விரிந்து ; நீங்கி . |
ஆன்றோள் | மாண்புடையாள் . |
ஆன்னிகம் | நாட்கடன் . |
ஆன | அந்த ; ஆகிய . |
ஆனகதுந்துபி | முரசுவகை ; வாசுதேவர் . |
ஆனகம் | படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் . |
ஆனஞ்சு | பஞ்சகவ்வியம் ; பசுவின் பால் ; தயிர் ; நெய் ; சிறுநீர் , சாணம் சேர்ந்த கலவை . |
ஆனத்தவாயு | வாதநோய்வகை . |
ஆனத்தேர் | விடத்தேர்ச்செடி . |
ஆனதம் | சமணரது கற்பலோகங்களுள் ஒன்று . |
ஆனது | எழுவாய்ச் சொல்லுருபு . |
ஆனதும்பி | மீன்வகை . |
ஆனந்த | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு . |
ஆனந்தக்கண்ணீர் | மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் . |
ஆனந்தக்கரப்பான் | ஒருவகைப் கரப்பான் நோய் . |
ஆனந்தகரந்தம் | மருக்கொழுந்து . |
ஆனந்தகரம் | மகிழ்ச்சி தருவது . |
ஆறவமர | அமைதியாய் , நிதானமாக . |
ஆறவிடுதல் | காணக : ஆறப்போடுதல் |
ஆறறிவுயிர் | ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் . |
ஆறன்மட்டம் | தாளவகை . |
ஆறாட்டம் | நோயுற்றோர் படும் துயரம் . |
ஆறாட்டு | தீர்த்தவாரித் திருவிழா . |
ஆறாடி | நிலைகெட்டவன் . |
ஆறாடுதல் | தீர்த்தவாரி மூழ்குதல் . |
ஆறாதாரம் | உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை . |
ஆறாதூறு | காண்க : அவதூறு . |
ஆறாமீன் | கார்த்திகை . |
ஆறாமீனறவோட்டு | கார்த்திகையில் சூரியன் புகும் காலம் . |
ஆறாயிரப்படி | ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் ; திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது . |
ஆறாரைச்சக்கரம் | மிறைக்கவியுள் ஒன்று . |
ஆறியகற்பு | அறக்கற்பு . |
ஆறிலொன்று | அரசனுக்குரிய ஆறிலொரு பாகம் . |
ஆறு | நதி ; வழி ; பக்கம் ; சமயம் ; அறம் ; சூழச்சி ; விதம் ; இயல்பு ; ஓர் எண்ணிக்கை ; தலைக்கடை . |
ஆறுகட்டி | ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் . |
ஆறுகட்டுதல் | ஆற்றில் அணை கட்டுதல் ; ஆற்றிற்குக் கரையிடுதல் . |
ஆறுகாட்டி | வழிகாட்டி . |
ஆறுசூடி | கங்கையைத் தலையில் அணிந்துள்ள சிவன் . |
ஆறுதல் | தணிதல் ; சூடு தணிதல் ; அமைதியாதல் ; புண் காய்தல் ; அடங்குதல் ; மனவமைதி . |
ஆறுபரியான் | இராகு ; கேது . |
ஆறுமணிப்பூ | மாலையில் மலரும் மலைப்பூ வகை . |
ஆறுமாசக் கடன்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் . |
ஆறுமாசமூட்டைக்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் . |
ஆறுமாதக்காடி | மிகப் புளிக்க வைத்த காடி மருந்து . |
ஆறெழுத்து | ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் . |
ஆறெறிபறை | வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை . |
ஆறை | ஆற்றூர் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆனந்தரியம் | இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு . |
ஆனந்தவருவி | இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு . |
ஆனந்தவல்லி | பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் . |
ஆனந்தவுவமை | மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் . |
ஆனந்தவோமம் | ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு . |
ஆனந்தன் | சிவன் ; அருகன் . |
ஆனந்தான்மவாதி | ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் . |
ஆனந்தி | பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை . |
ஆனந்தித்தல் | மகிழ்வடைதல் . |
ஆனந்தை | உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை . |
ஆனம் | எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் . |
ஆனமட்டும் | கூடியவரை . |
ஆனயம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
ஆனயனம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
ஆனர்த்தகம் | போர் ; நாடகசாலை ; ஒரு நாடு . |
ஆனவர் | இடையர் . |
ஆனவன் | நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு . |
ஆனவாள் | கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் . |
ஆனனம் | முகம் . |
ஆனா | நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி . |
ஆனாகம் | நீட்சி ; வயிற்றுப்பொருமல் நோய் . |
ஆனாங்குருவி | குருவிவகை . |
ஆனாமை | நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் . |
ஆனாயகலை | கண்ணறைத்தசை . |
ஆனாயம் | வாயுக்கண்ணறை . |
ஆனாயன் | மாட்டிடையன் . |
ஆனால் | ஆயின் ; ஆகையால் . |
ஆனாலும் | ஆயினும் . |
ஆனி | மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு . |
ஆனிக்கருந்தலை | ஆனிமாதக் கடைசி . |
ஆனித்தூக்கம் | ஆனிமாதத்தில் கடலின் அமைதி . |
ஆனியம் | நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் . |
ஆனிரை | பசுக்கூட்டம் . |
ஆனிலன் | வாயு புதல்வனாகிய அனுமான் ; பீமன் . |
ஆனிலை | பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் . |
ஆனிலையுலகம் | காண்க : ஆனுலகு . |
ஆனீர் | கோமூத்திரம் . |
ஆனுகூலியம் | அனுகூலமுடைமை . |
ஆனுதல் | நீங்குதல் . |
ஆனும் | ஆயினும் ; ஆவது . |
ஆனுலகு | கோலோகம் . |
ஆனெய் | பசுவின் நெய் . |
ஆனேறு | எருது . |
ஆனை | யானை ; காண்க : அத்தி : ஆத்தி . |
ஆனைக்கசடன் | நெல்வகை . |
ஆனைக்கண் | அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி . |
ஆனைக்கரடு | ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் . |
ஆனைக்கள்ளிமுளையான் | பூடுவகை . |
ஆனைக்கற்றலை | கடல்மீன்வகை . |
ஆனைக்கற்றாழை | ஒருவகை நீண்ட கற்றாழை . |
ஆனைக்காசு | நாணயவகை . |
ஆனைக்காயம் | காண்க : ஆனைப்பெருங்காயம் . |
ஆனைக்காரன் | யானைப்பாகன் . |
ஆனைக்காரை | காண்க : ஒதிமரம் . |
ஆனைக்கால் | பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு . |
ஆனைக்குப்பு | சதுரங்க விளையாட்டு . |
ஆனைக்குரு | மரவகை . |
ஆனைக்குருகு | அன்றில் . |
ஆனைக்குழி | யானை பிடிக்குமிடம் . |
ஆனைக்குன்றிமணி | காண்க : மஞ்சாடிமரம் . |
ஆனந்தக்களிப்பு | பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் . |
ஆனந்தகானம் | காசி . |
ஆனந்தகுறுவை | நெல்வகை . |
ஆனந்ததாண்டவம் | நடராசர் புரியும் நடனம் . |
ஆனந்ததீர்த்தர் | மத்துவாசாரியார் . |
ஆனந்தநித்திரை | யோகநித்திரை . |
ஆனந்தநிருத்தம் | காண்க : ஆனந்ததாண்டவம் . |
ஆனந்தப்பையுள் | கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை . |
ஆனந்தபரவசம் | மகிழ்ச்சியால் தன்னை மறக்கை . |
ஆனந்தபைரவம் | சிந்தூரவகை . |
ஆனந்தபைரவி | ஒரு பண் . |
ஆனந்தம் | பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை . |
ஆனந்தமயகோசம் | உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று . |
ஆனந்தமயம் | இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் . |
ஆனந்தமூலி | கஞ்சா . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆனைச்சிலந்தி | புண்கட்டி வகை . |
ஆனைச்சீரகம் | காண்க : பெருஞ்சீரகம் . |
ஆனைச்சுண்டை | மலைச்சுண்டை என்னும் சுண்டைவகை . |
ஆனைச்செவியடி | பூடுவகை . |
ஆனைச்சேவகன் | யானை வீரன் ; யானைப் படைத் தலைவன் . |
ஆனைச்சொறி | பெருஞ்சொறிசிரங்கு . |
ஆனைசேனை | மிகுதி . |
ஆனைத்தடிச்சல் | படர்கொடிவகை ; காண்க : புளிநறளை . |
ஆனைத்தடிப்பு | ஒரு பூடு . |
ஆனைத்தாள் | மதகு . |
ஆனைத்திசை | வடதிசை . |
ஆனைத்திப்பிலி | கொடிவகை . |
ஆனைத்தீ | பெரும்பசியை விளைப்பதொரு நோய் . |
ஆனைத்தீநோய் | பெரும்பசியை விளைப்பதொரு நோய் . |
ஆனைத்தும்பிக்கை | துதிக்கை ; காண்க : ஆனைத்தூம்பு . |
ஆனைத்தும்பை | பெருந்தும்பை . |
ஆனைத்தூம்பு | யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் . |
ஆனைத்தெல்லு | படர்கொடி வகை ; |
ஆனைத்தேர் | விடத்தேர் . |
ஆனைத்தொழில் | பெருஞ்செயல் . |
ஆனைத்தோட்டி | அங்குசம் . |
ஆனைந்து | காண்க : ஆனஞ்சு . |
ஆனைநார் | மரவகை . |
ஆனைநெருஞ்சி | பெருநெருஞ்சி . |
ஆனைப்படுவன் | வெப்புநோய்வகை . |
ஆனைப்பார்வை | கீழ்நோக்கிய பார்வை . |
ஆனைப்பிச்சான் | ஒரு பூடு . |
ஆனைப்புல் | காண்க : ஆனைக்கோரை . |
ஆனைப்புளி | பப்பரப்புளி . |
ஆனைப்பெருங்காயம் | ஒருவகைப் பெருங்காயக் கலவை . |
ஆனைப்பேன் | கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி . |
ஆனைமஞ்சள் | ஒரு பூடு . |
ஆனைமயிர்க்காப்பு | யானையின் வால்மயிரால் செய்தணியும் காப்பு . |
ஆனைமீக்குவம் | கருமருது . |
ஆனைமீன் | பெருமீன்வகை . |
ஆனைமுகன் | விநாயகன் ; ஓர் அசுரன் . |
ஆனையச்சு | ஒருவகைப் பொற்காசு . |
ஆனையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி . |
ஆனையடிச் செங்கல் | வட்டமான செங்கல் . |
ஆனையடியப்பளம் | கலியாணத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பளம் . |
ஆனையர்க்குளா | கடல்மீன்வகை . |
ஆனையரசாணி | மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் . |
ஆனையறுகு | அறுகுவகை . |
ஆனையறையும் புள் | காண்க : ஆனையிறாஞ்சிப்புள் . |
ஆனையாடுதல் | குழந்தைகள் உடம்பை ஆட்டுதல் . |
ஆனையாள் | யானைவீரன் . |
ஆனையிலத்தி | யானையின் மலம் . |
ஆனையிறாஞ்சிப்புள் | ஒரு பெரும்பறவை . |
ஆனையுண்குருகு | ஒரு பெரும்பறவை . |
ஆனையுண்ட விளங்கனி | விளாம்பழத்தில் தோன்றும் ஒரு நோய் . |
ஆனையுரித்தோன் | சிவன் . |
ஆனையூர்தி | இந்திரன் ; ஐயனார் . |
ஆனையேற்றம் | ஆனைமேலேறி நடத்தும் தொழில் . |
ஆனையோசை | உழைப்பண் . |
ஆனைவசம்பு | அரத்தை . |
ஆனைவணங்கி | காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி . |
ஆனைவாயன்கற்றலை | ஆனைக்கற்றலைமீன் ; பொருவாக்கற்றலைமீன் . |
ஆனைவாழை | நீண்ட குலைகொண்ட ஒருவித வாழை ; குளங்கோவை நெல் . |
ஆனைவேக்கட்டான் | நெல்வகை . |
ஆனோன் | காண்க : ஆனவன் . |
ஆனைக்கூடம் | யானை கட்டுமிடம் ; பழைய வரிவகை . |
ஆனைக்கெளுத்தி | மீன்வகை . |
ஆனைக்கொம்பன் | ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் ; வாழைவகை . |
ஆனைக்கொம்பு | யானைத் தந்தம் . |
ஆனைக்கோடன்சுரை | சுரைவகை . |
ஆனைக்கோரை | கோரைவகை . |
ஆனைச்சப்பரம் | அம்பாரி . |
ஆனைச்சாத்தான் | காண்க : கரிக்குருவி . |
ஆனைச்சிரங்கு | ஒருவகைப் பெரும்புண் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.